|
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
|
|
மழைசூழ் குடுமிப் பொதியிற்குன் றத்துக்
கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தான்
மாதவன் மாதர்க் கிட்ட சாபம் |
25 |
ஈரா றாண்டு வந்தது வாராள்
காயசண் டிகையெனக் கையுற வெய்திக் |
|
மழைசூழ்
குடுமிப் பொதியிற் குன்றத்து - முகில் சூழும் முடியையுடைய பொதியின்மலையின் மருங்கே,
கழைவளர் கான்யாற்று - மூங்கில் வளர்ந்த கானியாற்றின்கண், பழவினைப் பயத்தால்.
- முற்செய்த தீவினைப்பயனால், மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் - விருச்சிகன் காயசண்டிகைக்கு
இட்ட சாபத்தினது, ஈராறு ஆண்டு வந்தது - பன்னிரண்டாவது ஆண்டு வந்தது' இன்னும் வாராள்
காயசண்டிகை எனக் கையறவு எய்தி-காயசண்டிகை இன்னும் வந்திலள் எனத் துன்பமெய்தி ;கையறவு
- செயலறுதியாகிய துன்பம். |
|