|
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
|
|
தற்பா ராட்டுமென் சொன்ற்பயன் கொள்ளாள்
பிறன்பின் செல்லும் பிறன்போ னோக்கும்
மதுக்கம ழலங்கன் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் |
75 |
பவளக்
கடிகையிற் றவளவாள் நகையுங்
குவளைச் செங்கணுங் குறிப்பொடு வழாஅள்
ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை
ஈங்கொழிந் நனளென இகலெரி பொத்தி
மற்றவள் இருந்த மன்றப் பொதியினுள் |
80 |
புற்றடங்
காவிற் புக்கொளித் தடங்கினன்
காஞ்சன னென்னுங்க கதிர்வாள் விஞ்சையன் |
|
தன்
பாராட்டும் என் சொற்பயன் கொள்ளான் - தன்னைப்
பாராட்டுகின்ற என்னுடைய சொற்களின் பயனைக் கொள்ளானாய்,
பிறன்பின் செல்லும் - அயலான் பின்னே செல்லுகின்றனள்,
பிறன்போல் நோக்கும் - என்னைப் பிறன்போல் நோக்குகின்றனள்,
மதுக்கமழ் அலங்கள் மன்னவன் மகற்கு - தேன்
மணக்கும் மாலையினையுடைய அரசன மகனுக்கு, முதுக்குறை
முதுமொழி எடுத்துக்காட்டி - பேரறிவுடைய முதுமொழிகளை
எடுத்துக்கூறி, பவளக் கடிகையில் தவள வாள் நகையும் குவளைச்
செங்கணும் குறிப்பொடு வழா அள்-பவளத் துண்டத்தின்கணுள்ள
வெள்ளிய ஒளி பொருந்திய பற்களின் முறுவலும் குவளை மலர்
போலும் சிவந்த கண்களின் நோக்கும் காதற் குறிப்புடன் வழுவா
தவளாயினள், ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை ஈங்கொழிந்தனள்
என - இவன் இவட்குக் காதலனனாமையின் இவள் இவ்விடத்திலேயே
தங்கினள் என்று, இகல் எரி பொத்தி - மாறுபாட்டா
லுண்டாகிய சினத்தீ மூள, மற்றவள் இருந்த மன்றப்
பொதியிலுள் - மணிமேகலை இருந்த மன்றமாகிய பொதியிலின்
உள்ளே, புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்த அடங்கினன் -
புற்றினுள் அடங்கிய பாம்பைப் போலப் புகுந்து மறைந்திருந்தனன்,
காஞ்சனன் என்னும் கதிர்கள் விஞ்சையன் - ஒளி
பொருந்திய வாட்படையின் யுடைய காஞ்சனன் என்னும்
விஞ்சையன் ;
பவளக்கடிகை - பவளத்துண்டு போலும் இதழ்
; உதடு. இகல்
எரி - பகையாகிய தீ என்றுமாம். மன்றப் பொதியில் : இருபெயரொட்டு.
விஞ்சையன் இகலெரி பொத்திப் பொதியிலுட் புக்கொளித்
தடங்கினன் என்க.
|
|