|
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
|
90
|
தீவ திலகையின்
தன்திறங் கேட்டுச்
சாவக மன்னன் தன்னா டடைந்தபின்
ஆங்கத் தீவம்விட் டருந்தவன் வடிவாய்ப்
பூங்கொடி வஞ்சி மாநகர் புகுவை |
|
தீவதிலகையின்
தன் திறம் கேட்டுச் சாவகமன்னன் தன் நாடு அடைந்த பின் - சாவக நாட்டரசனாகிய ஆபுத்திரன்
தீவ திலகையினால் தன்னுடைய வரலாற்றைக்கேட்டுத் தனதுநாட்டை
அடைந்த பின், ஆங்கத் தீவம் விட்டு அருந்தவன் வடிவாய்ப் பூங்கொடி வஞ்சிமாநகர் புகுவை
- பூங்கொடி போலும் நீ அரிய தவமுடைய ஆடவன் வடிவத்துடன் அத்தீவை விட்டு நீங்கி வஞ்சிமா
நகரம் சேர்வை ; |
|