|
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
|
105
|
இறைவனு
மில்லை யிறந்தோர் பிறவார்
அறனோ டென்னையென றறைந்தோன் தன்னைப்
பிறவியும் அறவியும் பெற்றியி னுணர்ந்த
நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி
எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்
கொள்ளிய துரையென உன்பிறப் புணர்த்துவை |
|
இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை-கடவுளும்
இல்லை இறந்தோர் மீண்டும் பிறவார் அறத்தால் வரும்பயன் யாது என மொழிந்தோனை, பிறவியும்
அறவியும் பெற்றியின் உணர்ந்த-மறுபிறப்பு உண்டென்பதனையும்
அறநெறியையும் தவப்பேற்றான் அறிந்த, நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி - நறும்பூங்கோதையகிய
நீ இகழ்ந்து சிரிப்பாய், எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்கு ஒள்ளியது
உரை என உன் பிறப்பு உணர்த்துவை - அப்பொழுது அவன் என் இம்மொழிகளைக் கேட்டு இகழ்ந்தனை
போலும் ஆயின் சிறந்த பொருளைக் கூறுவாய் என்று அவன் கேட்ப நின் பிறப்பை
அவனுக்கு அறிவுறுத்துவை ;
அறைந்தோன்
- பூதவாதி ; உலோகாயதனுக்கும் பொருந்தும். |
அறவி-அறநெறி ; அறத்தின்
பயனுமாம். பெற்றியின் - முறைமையால் என்றுமாம். |
|