|
கந்திற்பாவை வருவதுரைத்த காதை
|
115
|
வழுவறு
மரணும் மண்ணுங் கல்லும்
எழுதிய பாவையும் பேசா வென்ப
தறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ
அறியா யாயின் ஆங்காது கேளாய் |
|
வழுவறு
மரனும் மண்ணும் கல்லும்-குற்றமற்ற மரம் மண் கல் என்பனவும், எழுதிய பாவையும் - எழுதப்பட்ட
பாவையும், பேசா என்பது - பேசமாட்டா என்பதனை, அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ-அறிதலும்
செய்தியோ அன்றி அறியாயோ, அறியாய் ஆயின் ஆங்கது கேளாய்-அறிகின்றிலையானால் அதனைக்
கூறுவேன் கேட்பாயாக ;
வழுவறுதலாவது இயற்கையினின்று மாறாமை.
கந்திடத்துள்ள பாவையாகிய தான் பேசுதல் கேட்டலின் மரம் மண் கல் பாவையென்பன பேசுமென்னுங்
கருத்தினளாதலுங் கூடுமெனக் கொண்டு, அவை பேசுவன வல்லவெனத் தெய்வம் தெருட்டலுற்றதென்க.
|
|