|
35
|
அரசா ளுரிமை நின்பா லின்மையின்
பரசு ராமனின் பால்வந் தணுகான்
அமர முனிவ னகத்தியின் றனாது
துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
ககந்தன் காத்தல் காகந்தி யென்றே
இயைந்த நாமம் இப்பதிக் கிட்டீங்
குள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள |
|
அரசாள்
உரிமை நின்பால் இன்மையின் - அரசு புரியும உரிமை நின்னிடம் இல்லாமையால், பரசுராமன்
நின்பால் வந்து அணுகான் - பரசுராமன் நின்னிடம் போர்புரியுமாறு வாரான், அமர முனிவன்
அகத்தியன் தனாது துயர்நீங்குகிளவியின் யான் தோன்று அளவும் - கடவுண் முனிவராகிய அகத்தியரது
அருண்மொழியால் யான் மீண்டு இந் நகரை அடையுமளவும், ககந்தன் காத்தல் - ககந்தனே காப்பாயாக
என வுரைத்து, காகந்தி என்று இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு - ககந்தனாற் காக்கப்படுதலின்
காகந்தி என்று பொருந்திய பெயரை இந் நகருக்கு இட்டு, ஈங்கு உள்வரிக்கொண்டு அவ் வுரவோன்
பெயர்நாள் - காந்தன் வேற்றுருக்கொண்டு சென்ற நாளில் ;
|
கணிகை
மகனாதலின் அரசாளுரிமை யிலனாயின னென்க. துயர நீங்குகிளவி-துன்பம் ஒழிதற்கேதுவாகிய
சொல். ககந்தன் : அண்மை விளி. காத்தல் : வியங்கோள், காக்க 'என்று கூறி' என வருவித்துரைக்க.
உள்வரி - வேற்றுரு. இவ் வரசன் அகத்தியரை வேண்டி, அவரது கரகத்திலுள்ள காவிரிநீரைப்
பெற்றனனென்பது பதிகத்தால்1 அறியப்படும்.
|
1
மணி. பதிகம் : 10-12.
|
|