|
115
120
|
அந்த ணாள னொருவன் சென்றீங்
கென்செய் தனையோ விருநிதிச் செல்வ
பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும்
புத்தே ளுலகம் புகாஅ ரென்பது
கேட்டு மறிதியோ கேட்டனை யாயின்
நீட்டித் திராது நின்னக ரடைகெனத்
தக்கண மதுரை தான்வறி தாக
இப்பதிப் புகுந்தனன் இருநில வேந்தே ! |
|
அந்தணாளன்
ஒருவன் சென்று - அப்பொழுது மறையவனொருவன் அவன்பாற் சென்று, ஈங்கு என்செய்தனையோ இரு
நிதிச் செல்வ, பெருநிதிச் செல்வனே நீ என் செய்தனை, பத்தினி இல்லோர் பலறம் செய்யினும்
- மனைவி யில்லதோர் பலதிறப்பட்ட அறங்களைச் செய்தாலும், புத்தேள் உலகம் புகாஅர்
என்பது- வானவருலகிற் செல்லுதற் குரியராகார் என்பதனை, கேட்டும் அறிதியோ - கேட்டறிதலும்
உடையையோ, கேட்டனையாயின் - அங்ஙனம் கேட்டறிந்தனையானால், நீட்டித்து இராது நின்
நகர் அடைக என-இங்கே நெடிது தங்கியிராமல் நின் நகரத்தை அடைவாயாக என்று கூற, தக்கண
மதுரை தான் வறிதாக இப்பதிப் புகுந்தனன்-தருமதத்தன் தென்மதுரை வறிதாகுமாறு இப்பதியை
அடைந்தனன்;
|
நீட்டித்
திராது நின்னகர் அடைக என்றது, விரைவில் நின்பதியை அடைந்து
மணஞ்செய்து மனைவியுடன் இல்லறம் நிகழ்த்துக என்னும் குறிப்பிற்று. மதுரை வறிதாக என்றதனால்
அவனது செல்வ மிகுதி குறிக்கப்பட்டது.
|
|