|
|
சிறப்பின் பாலார் மக்க ளல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க் கென்பது
அறிந்தனை யாயினிவ் வாயிழை தன்னைச்
செறிந்த சிறைநோய் தீர்க்கென் றிறைசொல |
|
சிறப்பின்
பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது - அரசர்கட்கு அறிவொழுக்கம்
முதலிய சிறப்பியல்புகளை யுடையவரே புதல்வர் ஆவர் அல்லாதார் மறத்தற்குரியர் என்பதனை,
அறிந்தனை ஆயின்-உணர்ந்தனை யானால், இவ் ஆயிழை தன்னை - இந் நங்கையை, செறிந்த
சிறை நோய் தீர்க்க என்று இறை சொல - நெருங்கிய சிறைத் ன்பத்தினின்றும் நீக்குவாயாக
என்று அரசன் கூற ;
மறப்பின்
பாலார்-புதல்வரல்ல ரென மறக்கும் பகுதியின ரென்க. என்பது-என்னுமுண்மையை.
நீயே அறிந்தனையாயின் தீர்க்கவென்று சொல்ல வென்க. |
|