|
145
|
அரசன் றேவியொ டாயிழை நல்லீர்
புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின்
மறுபிறப் புணர்ந்த மணிமே கலைநீ
பிறவறங் கேட்ட பின்னாள் வந்துனக்
கித்திறம் பலவு மிவற்றின் பகுதியும்
முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல்
என்றவ னெழுதலு மிளங்கொடி யெழுந்து |
|
அரசன்
தேவியோடு ஆயிழை நல்லீர் - இராசமாதேவியுடனிருக்கின்ற மங்கைமீர், புரைதீர் நல்லறம்
போற்றிக் கேண்மின் - குற்றமற்ற அருளறத்தினைப் போற்றிக் கேட்பீராக, மறு பிறப்பு
உணர்ந்த மணிமேகலை நீ - மணிமேகலை! மறுபிறப்பினை யறிந்த நீ, பிறவறங் கேட்ட பின்னாள்
- பிறசமய அறங்களைக் கேட்ட பின்னர், வந்து உனக்கு - உன்பால் வந்து, இத்திறம் பலவும்
இவற்றின் பகுதியும் - இவ்வறநெறிகள் பலவற்றையும் இவற்றின் பகுதிகளையும், முத்தேர்
நகையாய் முன்னுறக் கூறுவல் - முத்துப்போலும் பற்களையுடையாய் முற்படக் கூறுவேன், என்று
அவன் எழுதலும் - என்று கூறி அறவண முனிவன் எழுந்தவளவில்;
ஆயிழை
நல்லீர் என்றது மாதவியையும் சுதமதியையும் ஆயத்தையும், அரசன்
றேவியையும் விளித்தலுமாம். மாதவி முதலியோரை நோக்கிப் போற்றிக் கேண்மின் என்றுரைத்துப்
பின் மணிமேகலையை நோக்கிப் பின்னான் வந்து முன்னுறக் கூறுவல் என்றுரைத்து எழுந்தனன்
என்க. |
|