காய் வெங் கோடையில் கார் தோன்றியது
என - எரிகின்ற வெப்பமிகுந்த கோடையில் கருமுகில் தோன்றினாற் போல, நீ தோன்றினையே
நிரைத்தார் அண்ணல்-வரிசைப் படுத்திய மலர் மாலையினையணிந்த பெருந்தகாய் நீ தோன்றினையே,
தோன்றிய பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு-நீ உதித்த பின் உலகில் உள்ள உயிர்களுக்கு,
வானம் பொய்யது மண்வளம் பிழையாது - மழை பெய்தலிற் பொய்யாமையின் நிலவளம் பிழையாதாயிற்று,
ஊனுடை உயிர்கள் உறுபசி அறியா-ஊனுடம்பினையுடைய உயிர்கள் மிக்க பசியை அறியாவாயின
ஆகலின், நீயொழிகாலை நின்னாடு எல்லாம் தாயொழி குழவிபோலக் கூஉம்-நீ நீங்கிய
காலத்துநினது நாடு முழுவதும் தாயற்ற சிறு குழந்தையைப்போல வாய்விட்ட ழைக்கும்;
செங்கோன்
மன்னன் குடிகளுக்குத் தாய்போல்வான் என்பது 1"
தாயொக்கும் அன்பின்" என்பதனானு மறிக. "தாயொழி குழவி போலக் கூ.உம்' என்னுங் கருத்து
2 "தாயில் தூவாக் குழவி போல, ஓவாது
கூ.உம்" என்பதனோ டொத்திருத்தலுங் காண்க.
|