நாகநன்னாடு ஆள்வோன்தன் மகள் பீலிவளையென்பாள்
பெண்டிரின் மிக்கோள்-நாகநன்னாட் டரசன் புதல்வியாகிய மகளிருள் எழில் மிகுந்தோளாய
பீலிவளை என்பவள், பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய - ஞாயிற்றுப் புத்தேள்
மரபில் உதித்த, புனிற்றிளங் குழவியோடு பூங்கொடி பொருந்தி - மிக்க இளமையுடைய குழவியுடன்
அவளும் வந்து, இத் தீவகம் வலஞ்செய்து - இத் தீவினை வலம் வந்து, தேவர்கோன் இட்ட
மாபெரும் பீடிகை வலங்கொண்டு ஏத்துழி-இந்திரனா லிடப்பட்ட பெருமை பொருந்திய இவ்
வறத் தவிசினை வலஞ்செய்து துதிக்கும்பொழுது;
ஆள்வோன்
- வளைவணன். பீலிவளை யென்பாளாகிய பூங்கொடிகுழவியொடு
பொருந்தி யென்க. |