நறை
கமழ் கூந்தல் நங்கை நீயும் - மணங் கமழும் குழலினை யுடைய மணிமேகலையே நீயும், முறைமையின்
இந்த மூதூர் அகத்தே-இத்தொன்னகரின்கண் முறையாக, அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு
- சமயவாதிகளிடம் அவரவர் சமயங்களின் அறிந்த பொருள்களைக் கேட்டு, மெய் வகை இன்மை
நினக்கே விளங்கிய பின்னர் - அவற்றுள் மெய்த்திறம் இல்லாமை நினைக்கே விளங்கிய
பின், பெரியோன் பிடக நெறி கடவாய் - புத்தனருளிச் செய்த ஆகமங்களின் வழியைக்
கடவாயாவாய், இன்னது இவ்வியல்பு என - மேல் நிகழும் முறைமை இதுவாகு மென்று, தாய் எடுத்து
உரைத்தலும் - தாயாகிய பத்தினிக் கடவுள் கூறுதலும்;
|