|
சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
|
|
காதல்
கொண்டு கடல்வணன் புராணம்
ஓதின னாரணன் காப்பென் றுரைத்தனன் |
|
[ வைணவவாதி ]
|
கடல்வணன்
புராணம்-கடலின் நிறத்தை யுடையனாகிய விட்டுணு புராணத்தை, காதல் கொண்டு ஓதினன் - அன்போடு
ஓதிப் பயின்றவனாகிய வைணவ வாதி, நாரணன் காப்பு என்று உரைத்தனன் -தங்கட்கு நாராயணனே
இறைவன் என்று மணிமேகலைக்குச் சொனனான் எ - று.
காதல் கொண்டோதினன் எனவே, இவன்
வைணவ சமயத்திற் பேரன்பும் கடைப்பீடியும் உடையனென்பது பெற்றாம். முறை செய்தலே யன்றிக்
காத்தலும் இறைவன் கடனாகும் இயைபுபற்றி, இறையென்பதற்குக் "காப்பு" என்றான். புராணம்:
பழமையான வரலாறு. து. |
|