ஆகாயம்
- ஆகாயமாவது, எல்லாப் பொருட்கும்-பொருள்கள் எல்லாவற்றிற்கும், பூக்கும் இடம் கொடுக்கும்
- பொருந்துமாறு விரிந்து இடம் கொடுக்கும், புரிவிற்றாகும் - செயலையுடையதாகும் எ -
று.
உலகத்தில் உள்ள பொருள்களுள் உயர்வன உயர, விரிவன விரிய அவ்வவற்றிற்கேற்ப இடம்
விரிந்து கொடுத்தல் பற்றி, "பூக்குமிடங் கொடுக்கும்" என்றார். இதனை, "உளவென்ற
பொருட்கெலா மிடங் கொடுத்துடன், தளர்வின்றி நிற்ப தாகாயம்" (93) என்று மேருமந்தர
புராணம் கூறுகிறது. "பரந்திடங் கொடுக்கும் விசும்பு" (மலைபடு. 558) என்று சான்றோரும்
கூறுப.
|