நாவல்
ஓங்கிய மா பெரும் தீவினுள் காவல் தெய்வதம் தேவர் கோற்கு எடுத்த - நாவல் எனப்
பெயர் சிறந்த மிகப் பெரிய தீவினுள்ளே அதன் காவற்றெய்வமாகிய சம்பாபதியால் இந்திரனுக்கு
எடுக்கப்பட்ட, தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் - தீவ சாந்தியாகிய இந்திர விழவினைச்
செய்கின்ற நன்னாளில், மணிமேகலையொடு மாதவி வாரா - மணிமேகலையுடன் மாதவியும் வாராமையா
லுண்டான, தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர-ஆறுத்துயர் மேன் மேல் மிகாநிற்க, சித்திராபதிதான்
செல்லல் உற்று இரங்கி - சித்திராபதி மிகவுந் துன்பமுற்று வருந்தி, தத்துஅரி நெடுங்கண்
தன்மகள் தோழி-செவ்வரி படர்ந்து பாய்கின்ற நீண்ட கண்களையுடைய
தன் புதல்வி மாதவியின் தோழியாகிய, வயந்த மாலையை வருக எனக் கூய்-வயந்தமாலையை
வாவென்று அழைத்து, பயங்கெழு மா நகர் அலர் எடுத்து உரை என-நீ சென்று பயன் சிறந்த
பெரிய நகரினுள்ளார் கூறும் அலரை மாதவிக்கு எடுத்துக் கூறு வாயாக என்று உரைப்ப ;
|