|
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
|
105
110
115
|
பேதைமை சார்வாச் செய்கை
யாகுஞ்
செய்கை சார்வா வுணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்
அருவுருச் சார்வா வாயி லாகும்
வாயில் சார்வா வூறா கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றிற் றோன்றுங் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரண மாக
வருமே யேனை வழிமுறைத் தோற்றந்
தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்கா
டவல மரற்றுக் கவலைகை யாறெனத்
தவலில் துன்பந் தலைவரு மென்ப |
|
பேதைமை
சார்வாச் செய்கை யாகும் - பேதைமையாகிய நிதானத்தைச் சார்பாகக் கொண்டு செய்கையாகிய
நிதானம் தோன்றும்; செயற்கை சார்வா உணர்ச்சியாகும்-அச் செய்கையைச் சார்பாகக்
கொண்டு உணர்ச்சி யென்னும் நிதானம் தோன்றும் ; உணர்ச்சி சார்வா அருவுருவாகும் - அவ்வுணர்ச்சியைச்
சார்பாகக் கொண்டு அருவுருவாகிய நிதானம் தோன்றும்; அருவுரு சார்வா வாயிலாகும் - அவ்வருவுருவைச்
சார்பாகக்கொண்டு வாயிலாகிய நிதானம் தோன்றும்; வாயில் சார்வா ஊறாகும்மே-அவ்வாயிலைச்
சார்பாகக் கொண்டு ஊறாகிய நிதானம் தோன்றும்; ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும் - அவ்வூற்றினைச்
சார்பாகக் கொண்டு நுகர்ச்சி யாகிய நிதானம் தோன்றும் ; நுகர்ச்சி சார்ந்து வேட்கையாகும்
- அந்நுகர்ச்சியைச் சார்பாகக் கொண்டு பற்றாகிய நிதானம் தோன்றும் ; பற்றின் கருமத்
தொகுதி தோன்றும் - அப்பற்றினைச் சார்பாகக் கொண்டு வினைப்பயன் தோன்றும் ; கருமத்
தொகுதி காரணமாக - வினைப்பயனைக் காரணமாகக் கொண்டு ; ஏனை வழி முறைத் தோற்றம்
வரும்-ஏனைப் பவமும் தோற்றமுமாகிய நிதானங்கள் தோன்றும்; தோற்றம் சார்பின்-அத்தோற்றத்தைச்
சார்பாகக் கொண்டு ; பிணி மூப்பு சாக்காடு அவலம் அரற்று கவலை கையாறு எனத் தவலில்
துன்பம் தலை வரும்-நோயும் முதுமையும் இறப்பும் அவலமும் அழுகையும் கவலையும் செயலறுதியுமென்ற
கெடாத துன்பமாகிய நிதானம் தோன்றும்; என்ப-என்று நிதான வியல்பறிந்த புலவர் கூறுவர்
எ - று.
நிதானமென்னும்
சொற்குத் தொடர்ச்சியுறக் கட்டுதலென்பது பொருளாதலின், அவ்வியைபுதோன்றச் "சார்வா"
என்றும், "சார்ந்து" என்றும் கூறினார். பௌத்தர்களின் வட நூல்களிலும் இந்நிதானம்
பன்னிரண்டின் தோற்றமுறை ஈண்டுக் கூறப்பட்டது போலவே, "அவிச்சையைக் காரணமாகக்
கொண்டு சம்ஸ்காரமும், சம்ஸ்காரத்தைக் காரணமாகக் கொண்டு விஞ்ஞானமும்,
விஞ்ஞானத்தைக் காரணமாகக்
கொண்டு
நாமருபமும், நாமரூபத்தைக் காரணமாகக் கொண்டு சடாயதனமும், சடாயதனத்தைக்
காரணமாகக் கொண்டு பரிசமும், பரிசத்தைக் காரணமாகக் கொண்டு வேதனையும், வேதனையைக்
காரணமாகக் கொண்டு திருஷ்ணையும், திருஷ்ணையைக் காரணமாகக் கொண்டு உபாதானமும்,
உபாதானத்தைக் காரணமாகக் கொண்டு பவமும், பவத்தைக் காரணமாகக் கொண்டு ஜாதியும்,
ஜாதியைக் காரணமாகக் கொண்டு பிணி மூப்பு முதலிய துன்பங்களும் தோன்றும்" என்று
கூறப்படுமாறு காண்க. பிணி மூப்பு முதலியன இன்பமல்ல வாதலின், "தவலில் துன்பம்" எனப்பட்டன.
|
|