|
70
|
அரும்பவிழ் செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பின மூசா தொல்யாண்டு கழியினும்
மறந்தேன் அதன்திறம் மாதவி கேளாய்
கடம்பூண் டோர்தெய்வங் கருத்திடை வைத்தோர்
ஆங்கவ ரடிக்கிடின் அவரடி தானுறும்
நீங்கா தியாங்கணும் நினைப்பில ராயிடின் |
|
ஆங்கு
இடின் அரும்பு அவிழ் செய்யும்-அப்பீடத்தில் இட்டால் அரும்புகள் மலரா நிற்கும், அலர்ந்தன
வாடா சுரும்பினம் மூசா தொல் யாண்டு கழியினும்-அலர்ந்த மலர்கள் பல ஆண்டுகள்
சென்றாலும் வாடமாட்டா, அவற்றின்கண் வண்டினங்களும் மொய்க்கா, மறந்தேன் அதன் திறம்
மாதவி கேளாய் - மாதவி அதன் இயல்பு ஒன்றினை நன்கு மறந்தேன் இப்பொழுது அதனைக்
கேட்பாயாக, கடம்பூண்டு-காணிக்கை செலுத்தலை மேற்கொண்டு, ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்
- ஒரு தெய்வத்தை மனத்திலே வைத்து, ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்-அப்பீடத்தின்கண்
அவரடியின் பொருட்டு மலரை இட்டால் அம்மலர் அத்தெய்வத்தினடியைச் சென்று சேறும்; நீங்காது
யாங்கணும் நினைப்பிலராய் இடின் - நினைப்பொன்றுமின்றி இட்டால் அம்மலர் யாண்டும்
சொல்லாது அவண் தங்கும் ;
|
தொல்
யாண்டு-பல் யாண்டு ; கழிந்த ஆண்டுகள் தொன்மையவாதலின் தொல் யாண்டு', என்றார்
- தொல்யாண்டு கழியினும் வாடா மூசா வென்க. மறந்தேன் என்றது உலக வழக்குப்பற்றி. கடம்
- கடன் ; காணிக்கை. வைத்தோர் ; முற்றெச்சம். மலரை இடின் என்க.
|
|
|