|
80
85
|
அவ்வன மல்ல தணியிழை நின்மகள்
செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள்
மணிமே கலையொடு மாமலர் கொய்ய
அணியிழை நல்லாய் யானும் போவலென்
றணிப்பூங் கொம்பர் அவளொடுங் கூடி
மணித்தேர் வீதியிற் சுதமதி செல்வுழீ இச் |
|
அவ்வனம்
அல்லது-அச்சோலையின்கணல்லது, அணியிழை- மாதவியே, நின்மகள் செவ்வனம் செல்லும் செம்மைதான்
இலள்- நின்மகள் வேறாகச் செல்லும் தகுதியில்லாதவள்; மணிமேகலையொடு மாமலர் கொய்ய
- மணிமேகலையுடன் மலர் கொய்யுமாறு, அணியிழை நல்லாய் யானும் போவல் என்று-அழகிய அணிகலனை
யுடைய மாதவி யானும் செல்வேன் என்று,அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி - அழகிய பூங்கொம்பனைய
மணிமேகலையுடன் சேர்ந்து, மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ - மணிகளுடன் கூடிய தேர்கள்
செல்லும் வீதியின்கண் சுதமதி செல்லும்பொழுது;
|
செவ்வனம்
- வேறாக; 1 "திருமக யிருக்கை செவ்வனங்
கழிந்து" என்பழி, செவ்வனம் கழிந்து எனபதற்கு, வேறாகக் கழிந்து என்று அடியார்க்கு
நல்லார் பொருளுரைத்துள்ளமை காண்க ; நேராக என்றுமாம். செம்மை - ஈண்டுத் தகுதி.
|
1 சிலப்.
6 : 127.
|
|