|
150 |
விராடன் பேரூர் விசயனாம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமே கலைதனை வந்துபுறஞ் சுற்றி
அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவிலள் ஈங்கிவள் |
|
விராடன்
பேரூர் விசயனாம் பேடியைக காணிய சூழந்த கம்பலை மாக்களின்-விராடனது பெரிய நகரத்தின்கண்
அருச்சுனனாகிய பேடியைக் காணுமாறு சூழ்ந்த முழக்கத்தினை யுடைய
மக்களைப்போல, மணிமேகலைதனை வந்து புறம் சுற்றி-வந்து மணி மேகலையைச் சுற்றிலும் சூழ்ந்து,
அணி அமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவிலள் - எழிலமைந்த நல்லுருவத்தினை
அரிய தவநெறியிற் படுத்திய தாயோ கொடியவளும் தகுதியில்லாதவளுமாவள் ;
|
பாண்டவர்
ஐவரும் பாஞ்சாலியும் விராடனது நகரத்திற் கரந்துறைந்தகாலை அருச்சுனன் பேடியுருக்
கொண்டு பிருகந்தளை என்னும் பெயருடன் ஆண்டிருந்தமை பாரதத்தால் அறியலாவது. கம்பலை மாக்கள்
- வேறு சில காட்சி கண்டு முழங்கித் திரியுமவர். அணி அமை தோற்றத்து - அணிகள் இல்லாத
தோற்றத்துடன் என்றுமாம். சீவக சிந்தாமணியில் 1"உப்பமை
காமத்துப்பின்" "நிகரமைந்த முழந்தாளும்" என்னுமிடங்களில் 'அமை' எனபதற்கு இப்பொருள்
கூறப்படுதல் காண்க..
|
1
சீவக. 107 ; 175.
|
|