|
மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
|
5
|
இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி
விளங்கொளி மேனி விண்ணவர் வியப்பப்
பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரைமல ரைங்கணை மீன விலோதனத்து
உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப |
|
இளங்கோன்
கண்ட இளம்பொற் பூங்கொடி-அரசிளங்குமரன் கண்ணுற்ற அழகிய இளம் பூங்கொடியனைய மணிமேகலை,
விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப-விளங்குகின்ற பேரொளி பொருந்திய திருமேனியையுடைய
வானவர்களும் வியக்குமாறு, பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்து - பளிங்கினாலாய பொருமுக
வெழினியை வீழ்த்து, திருவின் செய்யோள் ஆடிய பாவையின் -
திருமகளாடிய பாவையைப்போல, விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம்
பெயர்ப்ப - மணம் பொருந்திய மலராகிய ஐந்தம்புகளையும் மீனக்கொடியையும் உடைய அநங்கனுடன்
தன் உருவத்தை வெளிப்படுத்த ;
|
பொற்பூங்கொடி
- காமவல்லியுமாம் ; இது பொன்னுலகத்துள்ள தென்பர். எழினி - திரைச்சீலை ; பொருமுக
வெழினி-மூவகைத் திரைச் சீலைகளுள் ஒன்று ; அரங்கின் வலத்தூண் இரண்டிலும் உருவு திரை
யாய் அமைவது ; எழினி மூன்றனையும் 1"ஒருமுக
வெழினியும் பொரு முக வெழினியும் ; கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்து"என் பதனாலறிக.
திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள் ; திருமகள்- இன் : சாரியை. ஆடிய பாவையின்
- ஆடுதற்குக் கொண்ட பாவை யுருவைப்போல ; கொல்லிப் பாவையுருக்கொண்டு ஆடினமையின் அக்
கூத்தும் பாவை யெனப்படும் ; அது போர் செய்தற்குச் சமைந்த கோலத்துடன் அவுணர் மோகித்து
விழும்படி திருமகளாடியது ; பதினோராடலுளொன்று ; 2"செருவெங்
கோல மவுணர் நீங்கத், திரு வின் செய்யோ ளாடிய பாவையும்' என்பது காண்க. "உருவி லாளனொ
டுருவம் பெயர்ப்ப" என்பதன் கருத்து இவளுருவைக் கண்டவுடன் இளங்கோவனுக்குக் காமவுபாதை
உண்டாயிற் றென்பதாம்.
|
1 சிலப்.
3 : 109-10. 2 சிலப்.
6 : 60-1.
|
|