|
மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
|
15
|
குருகுபெயர்க் குன்றங் கொன்றோ னன்னநின்
முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்
பருகா ளாயினிப் பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மைய ளென்றே
தூமலர்க் கூந்தற் சுதமதி யுரைப்பச் |
|
குருகு
பெயர்க் குன்றங் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி- கிரவுஞ்ச மலையை எறிந்த முருகவேளை
யொத்த நினது இளமை யழகினை, முகந்து தன் கண்ணால் பருகாள் 1ஆயின்
பைந்தொடி நங்கை-ஆராயுமிடத்துப் பசிய வளையல்களை யணிந்த மணிமேகலை தன் கண்களால்
முகந்து பருகாள், ஊழ்தரு தவத்தள் - முறையாகப் பெற்ற தவத்தினையுடையள், சாபசரத்தி-சாபமாகிய
அம்பையுடையவள், காமற் கடந்த வாய்மையள் என்றே - காமனை வென்ற மெய்ம்மையை யுடையவள்
என்று, தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப-தூய மலரணிந்த கூந்தலையுடைய சுதமதி கூற ;
|
குருகு-அன்றில்;
கிரவுஞ்சம்; அதன் பெயர் பெற்ற குன்றமென்க ; 2
"குருகுபெயர்க்குன்றங் கொன்ற நெடுவேலே" "குருகுபெயர்க்குன் றங்கொன்றான்" என்பன காண்க.
முருகு-இளமை ; ஈறு திரிந்தது ; ஊழ்தரு தவத்தள்- ஊழினாலே தரப்பட்ட தவத்தினள் என்றுமாம்
; என்னை? 3 தவமுந் தவமுடையார்க்
காகும்" என்பவாகலின். சாப சரத்தி - வில்லையும் அம்பையும் உடையாள் என்பதோர் பொருளும்
தோன்ற நின்றது ; சாபம் - வில். ஆயின், நங்கை பருகாள் ; தவத்தள் ; சரத்தி ; வாய்ம்மையள்
; என்று உரைப்பவென்க.
|
1 பா.
வே. ஆயினிப் பைந்தொடீ என்பதும் பாடம். 2 சிலப்.
34 : 'சரவண' : ஆய்வளை.
3 குறள். 262.
|
|