மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

       

110




115
புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி
பன்மலர் சிறந்த நன்னீ ரகழிப்
புள்ளொலி சிறந்த தெள்ளரிச் சிலம்படி
ஞாயி லிஞ்சி நகைமணி மேகலை
வாயின்மருங் கியன்ற வான்பணைத் தோளி
தருநிலை வச்சிரம் எனஇரு கோட்டம்
எதிரெதி ரோங்கிய கதிரிள வனமுலை
ஆர்புனை வேந்தற்குப் பேரள வியற்றி
ஊழி யெண்ணி நீடுநின் றோங்கிய
ஒருபெருங் கோயிற் றிருமுக வாட்டி்

109
உரை
118

       புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி - அறிவின் எல்லையைக் கடந்த புகார் என்னும பூங்கொடி, பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப் புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி - பல மலர்களும் சிறந்து விளங்குகின்ற நல்ல நீரினையுடைய புட்களின் ஒலி மிக்க அகழியாகிய சிறந்த தெள்ளிய அரியினையுடைய சிலம் பணிந்த அடியையும், ஞாயில் இஞ்சி நகை மணிமேகலை - ஞாயிலையுடைய மதிலாகிய ஒள்ளிய மணிகளாலாய மேகலையையும், வாயில் மருங்கு இயன்ற வான் பணைத்தோளி - வாயிலின் பக்கலில் அமைந்த பெரிய தோரண கம்பமாகிய தோளையும் உடையாள், தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் எதிர் எதிர் ஓங்கிய கதிர் கோல் இளவனமுலை-எதிரெதிர் உயர்ந்த கற்பகத் தரு நிற்கும் கோயில் வச்சிரப்படை நிற்கும் கோயில் என்னுமிரண்டுமாகிய ஒளி பொருந்திய இளைய அழகிய கொங்கைகளையும், ஆர் புனை வேந்தற்குப் பேரளவு! இயற்றி - ஆத்திமாலை சூடும் சோழனுக்குப் பெரிய அளவினதாக இயற்றப்பட்டு; ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய - எண்ணப்படும் பல ஊழிக்காலமாக நிலைபெற்றுயர்ந்த, ஒரு பெரும் கோயில் திருமுக வாட்டி-ஒப்பற்ற கோயிலாகிய திருமுகத்தினையும் உடையாள் :
                 குற்றம்-காம வெகுளி மயக்கங்கள். ஏமம் - பாதுகாவலுமாம். புல வரை - அறிவின் எல்லை; 1"புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல் புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்" என் பன காண்க. மலர் சிலம்பும், புள்ளொளி சிலம்பொலியும், அகழி அடி யுமாம். ஞாயில் - மதிலின் ஓருறுப்பு; ஏப்புழைக்கு நடுவாய் எய்துமறையுஞ் சூட் டென்பர் நச்சினார்க்கினியர்; குருவித் தலையென்பர் அடியார்க்கு நல்லார். பணை - மூங்கில்; ஈண்டுத் தோரண கம்பம. எதி ரெதிரோங்கிய இருகோட்டமென்க. வச்சிரலை என விரித்துக் கொள்க. வேந்தற்கேற்பப் பெரிய அளவினதாக இயற்றப்பட்ட கோயில்; 2"பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்து" என்ப துங் காண்க-சிலம்பு, மேகலை என்பவற்றிற்கேற்ப அடைகள் புணர்த்தி யுள்ளார்.

1 புறம். 21. சிலப், 28: 174. 2 நெடுநல். 78.