|
மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
|
120
|
குணதிசை மருங்கின் நாண்முதிர்
மதியமும்
குடதிசை மருங்கிற் கென்றுவீழ் கதிரும்
வெள்ளிவெண் தோட்டொடு பொற்றோ டாக
எள்ளறு திருமுகம் பொலியப்
பெய்தலும |
|
குணதிசை
மருங்கில் நாள் முதிர் மதியமும்-கீழ்த்திசையில் நான் நிரம்பிய முழு மதியமும், குடதிசை
மருங்கில் சென்று வீழ் கதிரும்-மேற்றிசையில் சென்று படிகின்ற ஞாயிறும், வெள்ளி வெண்
தோட்டொடு பொன் தோடாக-வெள்ளியாலாகிய வெண் தோட்டுடன் பொன்னாலாய தோடுமாக,
எள்ளறு திருமுகம் பொலிப் பெய்தலும்-இதழ்தலற்ற அழகிய முகம் பொலியுமாறு அணிதலும்;
|
நாள்-கலை.
நிறையுவா நாளில் மித கீழ்த்திசைக்கண் உதித்தும், பரிதி
மேற்றிசையிற் படிந்தும் கோயிலின் இரு மருங்கும் ஒருங்கு தோன்றுதலின், அவற்றைப் புகார்ச்
செல்வி கோயிலாகிய முகத்தின் இரு மருங்கும் தோடாக அணிந்தனள்; என்றாள்; எனவே அந்திப்
பொழுது வந்தமை பெற்றாம்; இது பரியாயவணி. திருமுகவாட்டி பெய்தலும் என்க. |
|
|