அருந்திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும் - அரிய திறலையுடைய கடவுளுடைய திருந்திய
பலியிடுதற்குரிய தூண்களும், நிறைகல் தெற்றியும் - நிறுத்தப்பட்ட கல்லாலாகிய திண்ணையும்,
மிறைக்களச் சந்தியும்-வளைந்த இடத்தினையுடைய பல வழிகளுஞ் சேர்ந்த சந்துகளும், தண்டும்
மண்டையும் பிடித்துக் காவலர் உண்டு கண்படுக்கும் உறையுட் குடிகையும் - கையிற் பிடிக்கும்
கோலும் உண்ணும் கலமும் பிடித்து ஈமங் காப்போர் உண்டு துயிலும் உறைவிடமாகிய குடில்களும்,
தூமக்கொடியும் சுடர்த் தோரணங்களும்-புகையொழுங்காகிய கொடியும் சுடராகிய தோரணங்களும்,
ஈமப்பந்தரும் யாங்கணும் பரந்து - ஈமத்தில் இட்ட பந்தர்களும் எவ்விடத்தும் பரக்கப்பெற்று
; கந்தின்கண்
தெய்வமுறைதலை 1 "கலிகெழு கடவுள்
கந்தங்
கைவிட" என்பதனானும் அறிக. மிறை - வளைவு ; 2
"மிறைக்கொளி திருத்தினானே" என்றார் பிறரும். மண்டை-உண்டற்குரிய மண்கலம் ; இரக்குங்
கலமுமாம் ; 3 "ஏலாது கவிழ்ந்த
என் இரவன் மண்டை" என்பது புறம். குடிகை-குடிசை. சுடர்-தீக்கொழுந்து; விளக்குமாம்.
|