சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்
- பிணங்களைச் சுடுவோரும் வாளா இட்டுப்போவோரும் தோண்டப்பட்ட குழியி லிடுவோரும்,
தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் - தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும்
தாழியினாலே கவிப்போரும், இரவும் பகலும் இளிவுடன் தரியாது - இரவும் பகலும் அருவருப்புடன்
தங்காமல், வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் - வருவோரும் போவோரு மாகியவர்களின்
நீங்காத ஒலியும் ;
தாழ்வயின்
- பள்ளமாகிய இடம். தாழியிற் கவித்தலைப் புற
நானூற்றின் 227, 237, 255, 363-ஆம் செய்யுட்களால் அறிக. இது முழுமக்கட் டாழி எனப்படும்.
சுடுவோர் முதலியோராய் வருவோர் பெயர்வோர் என்க.
|