தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும்
ஓங்கி - தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் உயர்ந்து, கான்றையும் சூரையுங் கள்ளியும்
அடர்ந்து - கான்றையுஞ் சூரையுங் கள்ளியும் செறிந்து, காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டு
ஈண்டும் - காய்கின்ற பசியையுடைய கொடிய பேய்கள் கூட்டமாகத் திரண்டிருக்கும், மால்
அமர் பெருஞ்சினை வாகை மன்றமும் - முகில் தங்குகின்ற பெருங் கிளை களையுடைய வாகை
மரம் நிற்கும் மன்றமும், வெள் நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து - வெள்ளிய நிணத்தினைத்
தசையுடன் உண்டு மகிழ்ச்சி மிகுந்து, புள் இறை கூரும் வெள்ளில் மன்றமும்- பறவைகள்
தங்குகின்ற விளாமரம் நிற்கும் மன்றமும், சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீயுறுக்கும்
வன்னிமன்றமும் - காபாலிகர் தளராத உள்ளத்துடன் சோறடுகின்ற தீயையுடைய வன்னிமரம்
நிற்கும் மன்றமும். விரத யாக்கையர் உடைதலை தொகுத்தாங்கு இருந்தொடர்ப்படுக்கும்
இரத்தி மன்றமும் - விரதங் காக்கும் உடம்பினை யுடையோர் உடைந்த தலைகளைத் தொகுத்துப்
பெரிய மாலைகளாகச் செய்யும் இலந்தைமரம் நிற்கும் மன்றமும், பிணம் தின் மாக்கள்
- பிணத்தினைத் தின்னும் மாக்களாயினார், நிணம்படு குழிசியில் விருந்தாட்டு அயரும்
- நிணம் பொருந்திய பானையில் விருந்து செய்கின்ற, வெள்ளிடை மன்றமும் - வெளியான
இடத்தையுடைய மன்றமும் ஆகிய இவ்விடங்களில்;
ஒடுவை-ஒடுமரம்.
உழிஞ்சில் - வாகை ; உன்னமுமாம். தான்றி
முதலிய மூன்றும் மரமும், கான்றை முதலிய மூன்றும் செடியுமாம். மால்-மேகம். இறைகூர்தல்-தங்குதல்.
சுடலை நோன்பிகள்-மயானத்திலிருந்து நோன்பியற்றுவோர் ; காபாலிக சமயத்தோர்.
விரத யாக்கையர் -மாவிரத சமயத்தோர். பலர் கூடுமிடம் மன்ற மெனப்படும் ; பண்டை
நாளில் மன்றங்கள் பெரும்பாலும் மரத்தடியில் இருந்தன ; பேய்கள் கூடுதலின் வாகையடி
மன்றமாயிற்று ; இங்ஙனமே ஏனையவும் கொள்க.
|