வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அமசெஞ்சாயல் நீயும் அல்லது-வஞ்சமுடைய விஞ்சையனாகிய
மாருதவேகன் என்பானும் அழகிய சிவந்த மென்மைத் தன்மையினையுடைய நீயும் அன்றி, நெடுநகர்
மருங்கின் உள்ளோர் எல்லாம் - இப் பெரிய நகரின்கண் உள்ளோரனைவரும், சுடுகாட்டுக்
கோட்டம் என்றலது உரையார் - சுடுகாட்டுக் கோட்டம் என்பதேயன்றி வேறு பெயர் கூறார்,
சக்கரவாளக்கோட்டம் அஃது என - அதனைச் சக்கர வாளக்கோட்டம் என்று, மிக்கோய்
கூறிய உரைப்பொருள் அறியேன் - மேம்பாடுடைய நீ கூறிய மொழியின் பொருளை அறியேன்,
ஈங்கு இதன் காரணம் என்னையோ என - இங்ஙனம் கூறுவதன் காரணம் யாதோ என்று சுதமதி
கேட்ப;
வஞ்ச விஞ்சையன் என்றாள், தன்னைக்
1 கவர்ந்து சென்று பின்னர்த்தன்னைவிட்டுப்
பிரிந்தமையான். நெடுநகர்-காவிரிப்பூம்பட்டினம்.
|