|
90 |
கேட்டுளங் கலங்கி ஊட்டிரு ளழுவத்து
முருந்தேர் இளநகை நீங்கிப் பூம்பொழில்
திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி
மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த
சக்கர வாளக் கோட்டத் தாங்கண்
பலர்புகழ் திறந்த பகுவாய் வாயில்
உலக அறவியின் ஒருபுடை இருத்தலும் |
|
கேட்டு
உளம் கலங்கி ஊட்டிருள் அழுவத்து-அவற்றை யெல்லாங் கேட்டு மனங்கலங்கி ஊட்டினாற்போன்ற
இருட்பரப் பிலே, முருந்து ஏர் இளநகை நீங்கிப் பூம்பொழில் - மயிற்பீலியின் முளைபோன்ற
அழகிய பற்களையுடைய சுதமதி உவவனத்தினின்றும் நீங்கி, திருந்து எயிற் குடபால் சிறு புழை
போகி - திருந்திய மதிலின் மேற்றிசையிலுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க
மாதெய்வம் வியந்து எடுத்து உரைத்த-பெருமைபொருந்திய
மணிமேகலாதெய்வம் வியந்து எடுத்துக்கூறிய, சக்கரவாளக் கோட்டத் தாங்கண் - சக்கரவாளக்
கோட்டத்திண்கண், பலர் புகத் திறந்த பகுவாய் வாயில்-பலருஞ் செல்லுமாறு திறக்கப்பட்டிருக்கின்ற
பெரிய வாய்போலும் வாயிலையுடைய, உலக அறவியின் ஒருபுடை இருத்தலும்-ஊரம்பலத்தில் ஒருபக்கத்தில்
இருத்தலும்;
ஊட்டுதல் - பூசுதல். அறவி - அம்பலம் சுதமதி எழுந்து பல் வேறு ஓதையும் ஒருங்கிசைப்பக்
கேட்டு உளங்கலங்கி நீங்கிப்போகி ஒருபுடை யிருத்தலும் என்க. |
|