|
50
|
பண்பில் காதலன் பரத்தமை நோனாது
உண்கண் சிவந்தாங்கு ஒல்குகொடி போன்று
தெருட்டவுந் தெருளா தூடாலொடு துயில்வோர்
விரைப்பூம் பள்ளி வீழ்துணை தழுவவும் |
|
பண்பில் காதலன் பரத்தமை நோனாது. குணமற்ற
காதலனுடைய பரத்தமையைப் பொறாமல், உண் கண் சிவந்தாங்கு ஒல்கு கொடிபோன்று - அசைகின்ற
கொடிபோல மையுண்ட கண்கள் சிவந்து, தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்-தெளி விக்கவும் தெளியாமல் ஊடலுடன் துயில்கின்ற மகளிர், விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும்
- மணம் பொருந்திய மலரணையில் தம்மால் விரும்பப்படுகின்ற கொழுநரைத் தழுவவும் ;
பண்பு - ஈண்டு அன்பு. பரத்தமை-பரத்தன் தன்மை;பரத்தையை மருவி யொழுகுவோன் பரத்தன்;
1"பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற்
பொதுவுண்பர், நண்ணேன் பரத்தநின் மார்பு" என்பது காண்க. ஊடலொடு துயில்வோர் தாமே
துணையைத் தழுவவு மென்க. |
1
குறள். 1311.
|
|