மணிபல்லவத்துத் துயருற்ற காதை





5




10
ஈங்கிவ ளின்னண மாக இருங்கடல
வாங்குதிரை யுடுத்த மணிபல் லவத்திடைத்
தத்துவநீ ரடைகரைச் சங்குழு தொடுப்பின்
முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு
விரைமர முருட்டுந் திரையுலாப் பரப்பின்
ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்
ஆம்பலுங் குவளையும தாம்புணர்ந்து மயங்கி
வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி
முடக்காற் புன்னையும் மடற்பூந் தாழையும்
வெயில்வர வொழித்த பயில்பூம் பந்தர்
அறல்விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளித்
துஞ்சுதுயி லெழூஉம் அஞ்சி லோதி

1
உரை
12

       ஈங்கு இவள் இன்னணமாக - புகார் நகரிலே சுதமதி இவ்வாறு வருந்த, இருங்கடல் வாங்குதிரை உடுத்த மணிபல்லவத் திடை-பெரிய கடலினது வளைந்த அலைகளாற் சூழப்பட்ட மணி பல்லவத்தின்கண், தத்துநீர் அடைகரைச் சங்கு உழுதொடுப்பின் முத்து விளை கழனி-சங்குகளால் உழுது விதைக்கப்பட்ட முத்துக் கள் விளைகின்ற மோதுநீர் சூழ் அடைகரையாகிய கழனியில், முரி செம்பவளமொடு விரைமரம் உருட்டும் திரை உலாப்பரப்பில்-வளைந்த சிவந்த பவளங்களுடன் சந்தனம் அகில் முதலிய மணம்பொருந்திய மரங்களை உருட்டுகின்ற அலைகள் உலாவும் கடற்கரையில், ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்-புலிநகக் கொன்றை உயர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய சேற்றில், ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி - அல்லியும் குவளையுமாகிய மலர்கள் சேர்ந்து கலந்து, வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி-வண்டுகள் உண்ணுமாறு மலரப்பெற்ற ஆழமாகிய நீரினையுடைய பொய்கைக் கரையில், முடக்கால் புன்னையும் மடப்பூர் தாழையும் - வளைந்த அடியை யுடைய புன்னையும் மடல்களாலாகிய பூவினையுடைய தாழையும், வெயில் வரவு ஒழிந்த பயில் பூம்பந்தர்-வெயிலினது வரவை நீக் கிய அழகிய பந்தரின்கண், அறல் விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளி - அறல் விளங்குகின்ற நிலாவைப் போன்ற வெள்ளிய மண லில் நறிய மலர்களாலாகிய படுக்கையிலிருந்து, துஞ்சு துயில் எழூஉம் அஞ்சில் ஓதி - மெய்மறந்த உறக்கத்தினின்றும் எழுந்த அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மணிமேகலை ;

       அடைகரைக்கண் கழனியில் என்றுமாம். தொடுப்பு - விதைப்பு; 1"தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய" என்பது காண்க; விளாக் கொண்டு உழுதலுமாம். முரி என்பதற்குச் சிதறிய என்றும், ஒளிவிடு மென்றும் உரைத்தலுமாம். அறல் - நீர் அரித்து ஒழுகுவதால் மணல் அற்று அற்று இருப்பது. மணிபல்லவத்திடைப் பரப்பில் இலஞ்சிக் கரையில் மணலிற் பள்ளியில் துயிலெழுந்த மணிமேகலை யென்க.

1 மதுரைக். 11.