மணிபல்லவத்துத் துயருற்ற காதை



30




35
கதிரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்
எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும்
அன்னச் சேவல் அரச னாகப்
பன்னிறப் புள்ளினம் பரந்தொருங் கீண்டிப்
பாசறை மன்னர் பாடி போல
வீசுநீர்ப் பரப்பின் எதிரெதி ரிருக்கும்
துறையுந் துறைசூழ் நெடுமணற் குன்றமும்
யாங்கணுந் திரிவோள் பாங்கினங் காணாள்

28
உரை
35

       திரை தவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்-அலையில் தவழ்கின்ற புட்களும் விரிந்த சிறகினையுடைய பறவைகளும், எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும் - எழுந்து வீழ்கின்ற சில்லையும் ஒடுங்கிய சிறகினையுடைய முழுவலும், அன்னச் சேவல் அரசனாகப் பன்னிறப் புள்ளினம் பரந்து ஒருங்கு ஈண்டி - அன்னச்சேவலை அரசனாகக்கொண்டு பலநிறங்களையுடைய பறவை இனங்கள் பரந்து ஒன்றாகக் கூடி, பாசறை மன்னர் பாடி போல - பகையரசர் இருவருடைய படை வீடுகளில் இருவர் படையும் எதிரெதிர் இருத்தல்போல, வீசுநீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும் -வீசுகின்ற நீர்ப்பரப்பின் கண்ணே எதிரெதிரே இருக்கின்ற, துறையும் துறைசூழ் நெடுமணற் குன்றமும் - நீர்த்துறைகளும் துறைகளைச் சுற்றிலுமுள்ள பெரிய மணற் குன்றுகளும் ஆகிய, யாங்கனும் திரிவோன்-எவ்விடத்தும் திரிகின்றவள் ;
       திரைதவழ் பறவை - குளுவை முதலியன. விரிசிறைப் பறவை - கபோதா முதலியன. எழுந்துவீழ் சில்லை - சிரல் முதலியன. திரை தவழ் பறவை முதலிய நான்கும் நீர்வாழ் பறவைகள். பறவையும்பறவையும் சில்லையும் முழுவலுமாகிய பன்னிறப் புள்ளினம் என்க. பாசறை மன்னர் - போர் குறித்துப் பாசறையிற் சென்று தங்கியிருக்கும் மன்னர். பாடிபோல - பாடியிற் படைகள் எதிரெதிர் இருத்தல்போல - 1"கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும், செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும், கானக் கோழியும் நீர்நீறக் காக்கையும், உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும், வெல்போர் வேந்தர் முனையிடம் போலப். பல்வேறு குழூஉக்குரல் பரந்த வோதையும்" என்பது ஈண்டு ஒத்து நோக்கற்பாலது.

1சிலப். 10 : 114-9.