முகப்பு |
தொடக்கம் |
பதிகம்
|
|
6. |
- மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில்
-
தான் ஏறு அனையான் உளன் சீவகசாமி என்பான்
-
வான் ஏற நீண்ட புகழான் சரிதம் இதன்னைத்
-
தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன்
|
|
|
|
|
7. |
- கோடாத செங் கோல் குளிர் வெண் குடைக் கோதை வெள் வேல்
-
ஓடாத தானை உருமுக் குரல் ஓடை யானை
-
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன்
-
வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள்
|
|
|
|
|
8. |
- சேந்து ஒத்து அலர்ந்த செழுந் தாமரை அன்ன வாள் கண்
-
பூந்தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின்
-
ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல்
-
வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே
|
|
|
|
|
9. |
- கல்லார் மணிப் பூண் அவன் காமம் கனைந்து கன்றிச்
-
சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும்
-
புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச்
-
செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும்
|
|
|
|
|
10. |
- நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்தத்
-
தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய்த் துயர் தீர்த்த வாறும்
-
கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்த வாறும்
-
வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற வாறும்
|
|
|
|
|
11. |
- நெஞ்சம் புணையாக் கலை மாக் கடல் நீந்தி ஆங்கே
-
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்த வாறும்
-
விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்ற வாறும்
-
நஞ்சு உற்ற காம நனி நாகரின் உய்த்த வாறும்
|
|
|
|
|
12. |
- முந்நீர்ப் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்ச்
-
செந்நீர்க் கடியின் விழவாட்டினுள் தேம்கொள் சுண்ணம்
-
மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் தம்முள் மாறாய்
-
இந்நீர்ப் படியேம் இவை தோற்றனம் என்ற வாறும்
|
|
|
|
|
13. |
- சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி
-
வண்ணம் நெடுங் கண் குண மாலையை வைது மாறிப்
-
புண் மேல் புடையில் புகைந்து ஆண் உருவு யாதும் நோக்காள்
-
கண் நோக்கு உடைந்து கடிமாடம் அடைந்த வாறும்
|
|
|
|
|
14. |
- பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடைப் புன்கண் எய்தி
-
நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்த வாறும்
-
அன்றைப் பகலே குண மாலையை அச்சுறுத்த
-
வென்றிக் களிற்றை விரிதார் அவன் வென்ற வாறும்
|
|
|
|
|
15. |
- தேன் ஊறு தீம் சொல் குண மாலையைச் சேர்ந்த வாறும்
-
கோன் ஊறு செய்வான் கருதிச் சிறை கொண்ட வாறும்
-
வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன்
-
ஊன் நாறு ஒளி வேல் உரவோன் கொண்டு எழுந்த வாறும்
|
|
|
|
|
16. |
- தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த
-
பூங் கச்சு நீக்கிப் பொறி மாண்கலம் நல்ல சேர்த்தி
-
நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும்
-
பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்த வாறும்
|
|
|
|
|
17. |
- பைந் நாகப் பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு
-
கைந் நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி
-
மைந் நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணிக்
-
கொய் நாகச் சோலைக் கொடி அந் நகர் புக்க வாறும்
|
|
|
|
|
18. |
- அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை
-
முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளைப்
-
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்டச்
-
சித்தம் குழையற்க எனத் தீர்த்து அவள் சேர்ந்த வாறும்
|
|
|
|
|
19. |
- பொன் பூண் சுமந்த புணர் மெல் முலைக் கோடு போழ
-
நல் பூங் கழலான் இரு திங்கள் நயந்த வாறும்
-
கல் பாடு அழித்த கன மா மணித் தூண் செய் தோளான்
-
வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறிக் கொண்ட வாறும்
|
|
|
|
|
20. |
- தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி
-
விள்ளா விழுச்சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம்
-
உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்த வாறும்
-
கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போய வாறும்
|
|
|
|
|
21. |
- இன்னீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்பப்
-
பொன் ஊர் கழலான் பொழி மா மழைக் காடு போகி
-
மின் நீர வெள் வேலவன் மத்திம தேய மன்னன்
-
கொன்னூர் கொடு வெம் சிலை கண்டு எதிர் கொண்ட வாறும்
|
|
|
|
|
22. |
- திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும்
-
கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று
-
கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளைப்
-
புண் தாங்கு எரிவேல் இளையோற்குப் புணர்த்த வாறும்
|
|
|
|
|
23. |
- மதியம் கெடுத்த வய மீன் எனத் தம்பி மாழாந்து
-
உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆய வாறும்
-
நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்த வாறும்
-
பதியின் அகன்று பயந்தாளைப் பணிந்த வாறும்
|
|
|
|
|
24. |
- கண் வாள் அறுக்கும் கமழ்தார் அவன் தாயொடு எண்ணி
-
விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்த வாறும்
-
மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஒர் கன்னிப்
-
பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்ட வாறும்
|
|
|
|
|
25. |
- துஞ்சா மணிப் பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து
-
அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல்
-
எஞ்சாத இன்பக் கொடி தாழ்த்ததும் பன்றி எய்து
-
நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அறக் கொன்ற வாறும்
|
|
|
|
|
26. |
- புண் தோய்த்து எடுத்த பொரு வேல் எனச் சேந்து நீண்ட
- கண் போன்ற மாமன் மகள் கண் மணிப் பாவை அன்ன
- பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும் பொற்பச் செங் கோல்
- தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாய வாறும்
|
|
|
|
|
27. |
- திறை மன்னர் உய்ப்பத் திரு நிற்பச் செங்கோல் நடப்பக்
- குறைவு இன்றிக் கொற்றம் உயரத் தெவ்வர் தேர் பணிய
- உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின்
- அறிவன் அடிக் கீழ் அரசு அஞ்சித் துறந்த வாறும்
|
|
|
|
|
28. |
- கோணைக் களிற்றுக் கொடித் தேர் இவுளிக் கடல் சூழ்
- வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன் மாரும்
- பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப
- வீணைக் கிழவன் விருந்து ஆர் கதிச் சென்ற வாறும்
|
|
|
|
|
29. |
- தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன்
- வான் வாய் வணக்கும் நலத்தார் முலைப்போகம் வேண்டான்
- ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம்
- ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்ற வாறே
|
|
|
|
|