முகப்பு |
தொடக்கம் |
மக்கள் கதித் துன்பம்
|
|
2790. |
- தம்மை நிழல் நோக்கித் தாங்கார் மகிழ் தூங்கிச்
-
செம்மை மலர் மார்பம் மட்டித்து இளையார் தோள்
-
கொம்மைக் குழகு ஆடும் கோல வரை மார்பர்
-
வெம்மை மிகு துன்பம் வேந்தே சில கேளாய்
|
|
|
|
|
2791. |
- ஈருள் தடி மூடி ஈண்டும் மலப் பண்டப்
-
போர்வை புழு மொய்ப்பப் பொல்லாக் குடர் சூடிச்
-
சார்தற்கு அரிதாகித் தான் நின்று அறா அள்ளல்
-
நீர்வாய்ச் சுரம் போந்தார் தம்மை நினையாரோ
|
|
|
|
|
2792. |
- அம் சொல் மடவார் தம் ஆர்வக் களி பொங்க
-
நெஞ்சத்து அயில் ஏற்றும் நீள் வெம் கழு ஊர்ந்தும்
-
குஞ்சிக் களியானைக் கோட்டால் உழப்பட்டும்
-
துஞ்சிற்று உலகு அந்தோ துன்பக் கடலுள்ளே
|
|
|
|
|
2793. |
- பண்ணார் களிறே போல் பாய் ஓங்கு உயர் நாவாய்
-
கண்ணார் கடல் மண்டிக் காற்றில் கவிழுங்கால்
-
மண்ணார் மணிப் பூணோய் மக்கள் உறும் துன்பம்
-
நண்ணா நரகத்தின் நான்காம் மடி அன்றே
|
|
|
|
|
2794. |
- செந் தீப் புகை உண்டும் சேற்றுள் நிலை நின்றும்
-
அந்தோ என மாற்றால் ஆற்றப் புடை உண்டும்
-
தந்தீக எனா முன் கை வீக்கத் தளர்வுற்றும்
-
நொந்தார் குடிச் செல்வர் நோன்மை நுகம் பூண்டார்
|
|
|
|
|
2795. |
- கண் சூன்றிடப் பட்டும் கால் கை களைந்து ஆங்கே
-
அண்பல் இறக் கையால் ஆற்றத் தகர் பெற்றும்
-
நுண் சாந்து அரைப்பார் போல் நோவ முழங்கையால்
-
புண் செய்திடப் பட்டும் புன்கண் உழப்பவே
|
|
|
|
|
2796. |
- மாலைக் குடை மன்னர் வையம் அகற்றுவான்
-
காலைக் கதி துன்பம் காவல் பெருந் துன்பம்
-
சோலை மயில் அன்னார் தோள் சேர்விலர் ஆயின்
-
வேலைக் கடலே போல் துன்பம் விளையுமே
|
|
|
|
|
2797. |
- ஊன் சேர் உடம்பு என்னும் ஓங்கல் மரச் சோலை
-
தான் சேர் பிணி என்னும் செந் தீக் கொடி தங்கிக்
-
கான் சேர் கவின் என்னும் காமர் மலர் வாடத்
-
தேன் சேர் மலர் மார்ப தீத்திட்டு இறக்குமே
|
|
|
|
|
2798. |
- கொட்டுப் பிடி போலும் கூனும் குறள் ஆமை
-
விட்டு நடப்பன போல் சிந்தும் விளைந்து சீ
-
அட்டும் உயவு நோய் அல்லாப் பிற நோயும்
-
பட்டார் உறு துன்பம் பன்னிச் சொலலாமோ
|
|
|
|
|
2799. |
- வேட்டன பெறாமை துன்பம்
-
விழை நரைப் பிரிதல் துன்பம்
-
மோட்டு எழில் இளமை நீங்க
-
மூப்பு வந்து அடைதல் துன்பம்
-
ஏட்டு எழுத்து அறிதல் இன்றி
-
எள்ளற்பாடு உள்ளிட்டு எல்லாம்
-
சூட்டு அணிந்து இலங்கும் வேலோய்
-
துன்பமே மாந்தர்க்கு என்றான்
|
|
|
|
|