முகப்பு |
தொடக்கம் |
தேவ கதித் துன்பம்
|
|
2800. |
- திருவில் போல் குலாய தேம் தார்த்
-
தேவர் தம் தன்மை செப்பின்
-
கருவத்துச் சென்று தோன்றார்
-
கால் நிலம் தோய்தல் செல்லார்
-
உருவமேல் எழுதல் ஆகா ஒளி
-
உமிழ்ந்து இலங்கும் மேனி
-
பருதியின் இயன்றது ஒக்கும்
-
பல் மலர்க் கண்ணி வாடா
|
|
|
|
|
2801. |
- அம் கையும் அடியும் நோக்கில் தாமரை அலர்ந்தது ஒக்கும்
-
பங்கயம் அனைய செங் கண் பகு ஒளிப் பவழம் செவ்வாய்
-
செங்கதிர் முறுவல் முத்தின் தெளி நகை திகழும் செய்யாள்
-
வெம் கடை மழைக் கண் நோக்கி வெய்து உறத் திரண்ட அன்றே
|
|
|
|
|
2802. |
- தாள் நெடுங் குவளைக் கண்ணித் தளை அவிழ் கோதை மாலை
-
வாள் முடி வைர வில்லும் வார் குழை சுடரும் மார்பில்
-
பூண் இடை நிலவும் மேனி மின்னொடு பொலிந்த தேவர்
-
ஊண் உடை அமிர்தம் வேட்டால் உண்பது மனத்தினாலே
|
|
|
|
|
2803. |
- சிதர் அரி ஒழுகி ஓடிச் செவி உறப் போழ்ந்து நீண்ட
-
மதர் அரி மழைக் கண் அம்பா வாங்கு வில் புருவம் ஆகத்
-
துதை மணிக் கலாபம் மின்னத் தொல் மலர்க் காமன் அம்பு
-
புதை மலர் மார்பத்து எய்யப் பூ அணை மயங்கி வீழ்வார்
|
|
|
|
|
2804. |
- பூத் ததை கொம்பு போன்று பொன் இழை சுடரும் மேனி
-
ஏத் தரும் கொடி அனாரை இரு நடு ஆகப் புல்லிக்
-
காய்த்தியிட்டு உள்ளம் வெம்பிக் கடைந்திடுகின்ற காமம்
-
நீத்து நீர்க் கடலை நீந்தும் புணை என விடுத்தல் செல்லார்
|
|
|
|
|
2805. |
- பொங்கல் வெம் முலைகள் என்னும் போதொடு பொருது பூந்தார்
-
அம் கலம் தொடையல் மாலை கிழிந்து அழகு அழிய வைகிக்
-
கொங்கு அலர் கோதை நல்லார் குரை கடல் அமிர்தம் ஆகத்
-
தங்கலர் பருகி ஆரார் தாழ்ந்து கண் இமைத்தல் செல்லார்
|
|
|
|
|
2806. |
- கருவியின் இசைகள் ஆர்ப்பக் கற்பக மரத்தின் நீழல்
-
பொரு கயல் அனைய கண்ணும் புருவமும் அரவம் செய்ய
-
அரவ மேகலைகள் அம் பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்பத்
-
திரு அனார் ஆடல் கண்டும் திருவொடு திளைத்தும் ஆனார்
|
|
|
|
|
2807. |
- பனி முகில் முளைத்த நான்கு பசுங் கதிர்த் திங்கள் ஒப்பக்
-
குனி மருப்பு உழுது மேகம் குஞ்சரம் குனிந்து குத்த
-
இனிதினின் இலங்கு பொன் தோடு ஏற்றுமின் குழைகள் பொங்கத்
-
துனிவு இலர் களிற்றோடு ஆடித் தொழுதகக் கழிப்பர் வேந்தே
|
|
|
|
|
2808. |
- கடிகை வாள் ஆரம் மின்னக் கற்பகக் காவு கண்டும்
-
தொடி கவின் அறாத மென் தோள் தேவியர் சூழ வாமன்
-
அடி கையின் தொழுது பூத்தூய் அஞ்சலி செய்து வீடே
-
முடிக இப் பிறவி வேண்டேம் முனைவ என்று இரப்ப அன்றே
|
|
|
|
|
2809. |
- மலம் குவித்து ஆவி வாட்டி வாய் நிறை அமிர்தம் பெய்த
-
இலங்கு பொன் கலசம் அன்ன எரி மணி முலைகள் பாயக்
-
கலந்தனர் சென்ற பின் நாள் கதிர் கழன்று இருந்த வெய்யோன்
-
புலம்பு போல் புலம்பித் தேவர் பொற்பு உகுத்து இருப்ப அன்றே
|
|
|
|
|
2810. |
- எல்லை மூ ஐந்து நாள்கள் உள என இமைக்கும் கண்ணும்
-
நல் எழில் மாலை வாடும் நஞ்சு உடை அமிர்து உண்டாரின்
-
பல் பகல் துய்த்த இன்பம் பழுது எனக் கவல்ப கண்டாய்
-
பில்கித் தேன் ஒழுகும் பைந்தார்ப் பெரு நில வேந்தர் வேந்தே
|
|
|
|
|
2811. |
- தேவரே தாமும் ஆகித் தேவரால் தொழிக்கப் பட்டும்
-
ஏவல் செய்து இறைஞ்சிக் கேட்டும் அணிகம் மாப்பணிகள் செய்தும்
-
நோவது பெரிதும் துன்ப நோயினுள் பிறத்தல் துன்பம்
-
யாவதும் துன்பம் மன்னோ யாக்கை கொண்டவர்கட்கு என்றான்
|
|
|
|
|