தாயத் தீர்வு
 
2894.
  • சாரணர் போய பின் சாந்தம் ஏந்திய
  • வார் அணி வன முலை வஞ்சிக் கொம்பு அனார்
  • போர் அணி புலவு வேல் கண்கள் பூத்தன
  • நீர் அணி குவளை நீர் நிறைந்த போன்றவே
   
2895.
  • பொன் வரை நிலாக் கதிர் பொழிந்து போர்த்த போல்
  • தென் வரைச் சந்தனம் திளைக்கும் மார்பினான்
  • மின் இவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே
  • இன் உரை கொடான் கொடிக் கோயில் எய்தினான்
   
2896.
  • அம் சுரை பொழிந்த பால் அன்ன மெல் மயிர்ப்
  • பஞ்சி மெல் அணையின் மேல் பரவை அல்குலார்
  • மஞ்சு இவர் மதிமுகம் மழுங்க வைகினார்
  • நஞ்சு உயிர்த்து அணி நலம் கரிந்து நையவே
   
2897.
  • வெள் எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து மேகப்
  • புள் வயின் பிறந்த புள் போல் ஒன்று அலாது உரைத்தல் தேற்றார்
  • கள் வயிற்று அலர்ந்த கோதைக் கலாப வில் உமிழும் அல்குல்
  • ஒள் எயிற்றவர்கள் பொன் பூத்து ஒளி மணி உருவம் நீத்தார்
   
2898.
  • கிளிச் சொலின் இனிய சொல்லார் கிண்கிணி சிலம்பொடு ஏங்கக்
  • குளித்து நீர் இரண்டு கோலக் கொழுங் கயல் பிறழ்பவே போல்
  • களித்து நீர் சுமந்து வாள் கண் கலாஅய் பிறழ்ந்து அலமந்து ஆட
  • அளித்த தார் அலங்கல் ஆழி அவன் துறவு உரைத்தும் அன்றே
   
2899.
  • புனை மருப்பு அழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற
  • கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை உரிவை போர்த்த
  • துனை குரல் முரசத் தானைத் தோன்றலைத் தம்மின் என்றான்
  • நனை மலர் அலங்கல் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான்
   
2900.
  • கொடி அணி அலங்கல் மார்பில் குங்குமக் குன்றம் அன்னான்
  • அடி பணிந்து அருளு வாழி அரசருள் அரச என்னப்
  • படுசின வெகுளி நாகப் பைத்தலை பனித்து மாழ்க
  • இடி உமிழ் முரசம் நாண இன்னணம் இயம்பினானே
   
2901.
  • ஊன் உடைக் கோட்டு நாகு ஆன் சுரிமுக ஏற்றை ஊர்ந்து
  • தேன் உடைக் குவளைச் செங் கேழ் நாகு இளந் தேரை புல்லிக்
  • கான் உடைக் கழனிச் செந்நெல் கதிர் அணைத் துஞ்சும் நாடு
  • வேல் மிடைத் தானைத் தாயம் வீற்று இருந்து ஆள்மோ என்றான்
   
2902.
  • கரும்பு அலால் காடு ஒன்று இல்லாக் கழனி சூழ் பழன நாடும்
  • சுரும்பு உலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன்
  • அரும்பு உலாய் அலர்ந்த அம் மென் தாமரை அனைய பாதம்
  • விரும்பி யான் வழிபட்டு அன்றோ வாழ்வது என் வாழ்க்கை என்றான்
   
2903.
  • குன்று என மருண்டு கோல மணி வண்டும் குழாம் கொள் தேனும்
  • சென்று மொய்த்து இமிரும் யானைச் சீவகற்கு இளைய நம்பி
  • மன்றல் வீற்று இருந்து மின்னும் மணிக் குவடு அனைய தோளான்
  • ஒன்றும் மற்று அரசு வேண்டான் உவப்பதே வேண்டினானே
   
2904.
  • பொலிவு உடைத்து ஆகுமேனும் பொள்ளல் இவ் உடம்பு என்று எண்ணி
  • வலி உடை மருப்பின் அல்லால் வாரணம் தடக்கை வையாது
  • ஒலி உடை உருமுப் போன்று நிலப்படாது ஊன்றின் வை வேல்
  • கலி கடிந்து உலகம் காக்கும் காளையைக் கொணர்மின் என்றான்
   
2905.
  • கழு மணி ஆர மார்பின் காவலன் மக்கள் காய் பொன்
  • எழு வளர்ந்து அனைய திண் தோள் இளையவர் தம்முள் மூத்த
  • தழு மலர்க் கொம்பு போலும் தத்தை நாள் பயந்த நம்பி
  • விழுமணிப் பூணினான் வீற்று இரீஇ விதியின் சொன்னான்
   
2906.
  • பால் வளை பரந்து மேயும் படுகடல் வளாகம் எல்லாம்
  • கோல் வளையாமல் காத்து உன் குடை நிழல் துஞ்ச நோக்கி
  • நூல் விளைந்து அனைய நுண்சொல் புலவரோடு அறத்தை ஓம்பின்
  • மேல் விளையாத இன்பம் வேந்த மற்று இல்லை கண்டாய்
   
2907.
  • வாய்ப்படும் கேடும் இன்றாம் வரிசையின் அரிந்து நாளும்
  • காய்த்த நெல் கவளம் தீற்றின் களிறு தான் கழனி மேயின்
  • வாய்ப்படல் இன்றிப் பொன்றும் வல்லன் ஆய் மன்னன் கொள்ளின்
  • நீத்த நீர் ஞாலம் எல்லாம் நிதி நின்று சுரக்கும் அன்றே
   
2908.
  • நெல் உயிர் மாந்தர்க்கு எல்லாம் நீர் உயிர் இரண்டும் செப்பின்
  • புல் உயிர் புகைந்து பொங்கு முழங்கு அழல் இலங்கு வாள்கை
  • மல்லல் அம் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய்
  • நல் உயிர் ஞாலம் தன்னுள் நாம வேல் நம்பி என்றான்
   
2909.
  • ஆர் வலம் சூழ்ந்த ஆழி அலை மணித் தேரை வல்லான்
  • நேர் நிலத்து ஊரும் ஆயின் நீடு பல் காலம் செல்லும்
  • ஊர் நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும்
  • தார் நில மார்ப வேந்தர் தன்மையும் அன்னது ஆமே
   
2910.
  • காய்ந்து எறி கடுங்கல் தன்னைக் கவுள் கொண்ட களிறுபோல
  • ஆய்ந்த அறிவுடையர் ஆகி அருளொடு வெகுளி மாற்றி
  • வேந்தர் தாம் விழைப எல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய்
  • நாந்தக உழவர் ஏறே நன் பொருள் ஆவது என்றான்
   
2911.
  • குடின் பழியாமை ஓம்பின் கொற்ற வேல் மன்னர் மற்று உன்
  • அடி வழிப் படுவர் கண்டாய் அரும் புகழ் கெடுதல் அஞ்சி
  • நொடியல் ஓர் எழுத்தும் பொய்யை நுண் கலை நீத்தம் நீந்திக்
  • கொடி எடுத்தவர்க்கு நல்கு கொழித்து உணர் குமர என்றான்
   
2912.
  • சேல் நடந்தாங்கும் ஓடிச் சென்று உலாய்ப் பிறழும் வாள் கண்
  • மான் மட நோக்கின் மாதர் மாலை நாள் பயந்த மைந்தன்
  • கால் நடந்த அனைய மான் தேர்க் காளையைக் காவல் மன்னன்
  • தான் உடன் அணிந்து தன் போல் இளவரசு ஆக்கினானே
   
2913.
  • கூர் எயிறு அணிந்த கொவ்வைக் கொழுங் கனிக் கோலச் செவ்வாய்
  • ஏர் அணி மயில் அம் சாயல் இலக்கணை ஈன்ற சிங்கம்
  • சீர் உடைச் செம் பொன் கண்ணிச் சிறுவனைச் செம் பொன் மாரி
  • பேர் அறைந்து உலகம் உண்ணப் பெரு நம்பி ஆக வென்றான்
   
2914.
  • தன் கழல் தொழாத மன்னர் தாம் சுமந்து ஏத்தி நின்ற
  • பொன் திகழ் உருவில் தம்பி புதல்வனைத் தந்து போற்றி
  • மின் திகழ் முடியும் சூட்டி வீற்று இரீஇ வேந்து செய்தான்
  • குன்று இனம் குழீஇய போலும் குஞ்சரக் குழாத்தி னானே
   
2915.
  • நிலம் செதிள் எடுக்கும் மான்தேர் நித்திலம் விளைந்து முற்றி
  • நலம் செய்த வைரக் கோட்ட நாறும் மும் மதத்த நாகம்
  • குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன் நிதியும் நாடும்
  • உலம் செய்த வைரக் குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான்
   
2916.
  • நூற்கு இடம் கொடுத்த கேள்வி நுண் செவி மண் கொள் ஞாட்பில்
  • வேற்கு இடம் கொடுத்த மார்பின் வில்வலான் தோழர் மக்கள்
  • நால் கடல் வளாகம் காக்கும் நம்பி தன் கண்கள் ஆகப்
  • பால் கடல் கேள்வி யாரைப் பழிப்பு அற நாட்டி னானே
   
2917.
  • காவலர் அகலம் என்னும் கழனியுள் உழுது காமர்
  • மா வலம் விளைத்த கோட்டு மழ களிற்று அரசன் அன்னான்
  • பூ அலர் கொடி அனாரை விடுக்கிய கோயில் புக்கான்
  • தூ அலர் ஒலியலார் தம் வலக் கண்கள் துடித்த அன்றே