முகப்பு |
தொடக்கம் |
அந்தப்புர விலாவணை
|
|
2942. |
- ஒருவர் தம் வலி கெடும் உடன்று பொங்கி மேல்
-
இருவர் மற்று இயைந்து எழுந்து இருப்பின் என்ப போல்
-
உருவ நுண் நுசுப்பு இற இருந்த ஒண் மணிப்
-
பரிய கண் படா முலைப் பைம் பொன் கொம்பு அனீர்
|
|
|
|
|
2943. |
- காதலம் கழிந்த நாள் இதனின் இப்புறம்
-
ஏதிலம் என்ற சொல் செவிச் சென்று எய்தலும்
-
மாதரார் மழை மலர்த் தடம் கண் மல்குநீர்
-
போது உலாம் மார்பின் வாய்ப் பொழிந்து வீழ்ந்தவே
|
|
|
|
|
2944. |
- செருக்கி நிணம் தின்று சிவந்து
-
மன்னர் உயிர் செற்ற
-
நெருப்புத் தலை நெடு வேல் கண்ணார்
-
கண்ணீர் நிழல் மணிப்பூண்
-
பரப்பினிடைப் பாய்ந்து குளம்
-
ஆய்ப் பால் ஆர் படா முலையை
-
வருத்தி மணி நெடுங் கோட்டு
-
அருவி போல வீழ்ந்தனவே
|
|
|
|
|
2945. |
- அழல் ஏந்து வெம் கடுஞ் சொல்
-
உரும் ஏறு உண்டு ஆங்கு அலர் சிந்தி
-
நிழல் ஏந்து பூம் கொடிகள்
-
நிலம் சேர்ந்து ஆங்கு நிலம் சேர்ந்து
-
கழல் ஏந்து சேவடிக் கீழ்க்
-
கண்ணீர் வெள்ளம் கலம் நிரப்பக்
-
குழல் ஏங்குமாறு ஏங்கி
-
அழுதார் கோதை மடவாரே
|
|
|
|
|
2946. |
- குலிக அம் சேற்றுள் நாறிக் குங்கும நீருள் ஓங்கிப்
-
பொலிக என வண்டு பாடப் பூத்த தாமரைகள் போலும்
-
ஒலி கழல் அடிகள் நும் கீழ்ப் பிழைத்தது என் உரைமின் என்னப்
-
புலி நிழல் பட்ட மான் போல் போகு உயிர் ஆகி நின்றார்
|
|
|
|
|
2947. |
- அருந் தவிசு ஆகி எம்மைச் சுமந்து அயா உயிர்த்த ஆண்மைப்
-
பெருந் தகு குறங்குகாள் நீர் பெண் உயிர் அளியதா மே
-
வருந்துமால் என்று நோக்கீர் வாடுமால் ஆவி என்னீர்
-
விருந்தினர் போல நின்றீர் வெற்றுடல் காண்மின் என்பார்
|
|
|
|
|
2948. |
- கோதையும் துகிலும் ஏந்திக் குங்குமம் எழுதிக் கொய் பூந்
-
தாது கொண்டு அளகத்து அப்பித் தட முலை வருடிச் சேர்ந்து
-
காதல் கொண்டு இருந்த காமர் கை விரல் அளிய நீரும்
-
ஏதிலர் ஆகிக் கோமான் எண்ணமே எண்ணி னீரே
|
|
|
|
|
2949. |
- பஞ்சி கொண்டு எழுதி ஆர்ந்த சீறடி பனித்தல் அஞ்சிக்
-
குஞ்சி மேல் ஏற்ற கோமான் கொப்புளித்திட்ட எம்மை
-
வஞ்சித்தீர் மணி செய் தோள்காள் வாங்குபு தழுவிக் கொள்ளீர்
-
நெஞ்சம் நீர் வலியீர் ஆகி நிற்பீரோ நீரும் என்பார்
|
|
|
|
|
2950. |
- முட்டு வட்டு அனைய கோல முத்து உலாய்க் கிடந்து மின்ன
-
மட்டு விட்டு அலர்ந்த கோதை மதுவொடு மயங்கி நாளும்
-
ஒட்டி இட்டு உறைய எங்கட்கு உயர் அணை ஆய மார்ப
-
நட்பு விட்டு ஒழியும் ஆயின் நன்மை யார் கண்ணது அம்மா
|
|
|
|
|
2951. |
- மாக் கவின் வளரத் தீண்டி மணி நகை நக்கு நாளும்
-
பூக் கவின் ஆர்ந்த பைந்தார் புனை மதுத் தேனொடு ஏந்தித்
-
தாக்கி எம் முலைகள் தம்மை நெருக்கினாய் தரணி மன்னின்
-
நீக்கி நீ எம்மை நோக்காய் நீத்தியோ நீயும் என்பார்
|
|
|
|
|
2952. |
- அன்னமே தோகை நல் யாழ் அமுதமே ஆய்ந்த தீம் தேன்
-
இன்னரே நங்கைமார் என்று ஏத்திய பவளச் செந் நா
-
என்னை நீ கண்டது எம்மை இரண்டு நா ஆயினாயே
-
மன்னன் போல் ஈரம் இன்றி வலித்தனை வாழி என்பார்
|
|
|
|
|
2953. |
- பூணினால் நெருங்க நொந்து பொதிர்த்தன வெம்பி என்று
-
நாணினால் வருத்தம் தீர்ப்பான் நல் முலைக் கண்கள் தம்மைப்
-
பேணி நீர் எழுதி ஓம்பிப் பேர் இன்பம் கொண்டு தந்தீர்
-
காண்மினோ இன்று எம் வண்ணம் கண்ணிலீர் கண்கள் என்பார்
|
|
|
|
|
2954. |
- சென்னி மேல் மிதித்த அம் செஞ் சீறடித் திருவில் வீச
-
மின்னி வாள் ஆரம் சிந்த வெறு நிலத்து உறைந்து நீ எம்
-
இன்னகை முறுவல் பார்த்தாய் இன்று எமது ஆவி பார்த்தாய்
-
மன்னிய மாலை வண்டார் மணி முடி வாழி என்பார்
|
|
|
|
|
2955. |
- வீங்கு பால் கடலும் நஞ்சாய் விளைந்ததால் விரிந்த வெய்யோன்
-
பாங்கு இலா இருளை ஈன்று பார் மறைத்து இட்டதாலோ
-
தீம் கதிர்த் திங்கள் செந் தீச் சொரிந்ததால் திசைகள் எல்லாம்
-
தாங்குமாறு என்னை ஆவி தரிக்கிலேம் தேவீர் காளோ
|
|
|
|
|
2956. |
- விண்ணோர் மட மகள் கொல் விஞ்சை மகளே கொல்
-
கண்ணார் கழி வனப்பில் காந்தருவ தத்தை என்று
-
எண் ஆய வான் நெடுங் கண் மெய் கொள்ள ஏமுற்றுப்
-
பண்ணால் பயின்றீர் இனி என் பயில்வீரே
|
|
|
|
|
2957. |
- கொல் வேல் நெடுங் கண் குணமாலை குஞ்சரத்தால்
-
அல்லல் நோய் உற்றாளுக்கு அன்று களிறு அடர்த்துப்
-
புல்லிப் புணர் முலையின் பூங் குவட்டின் மேல் உறைந்தாய்
-
எல்லே மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் மின்னாளோ
|
|
|
|
|
2958. |
- தூம்பு உடைய வெள் எயிற்றுத் துத்தி அழல் நாகப்
-
பாம்பு உடைய நோக்கிப் பதுமை பவழவாய்
-
தேம்பு உடைய இன் அமுதாச் சேர்ந்தாய்க்கு இனி அதுவே
-
ஆம்புடைய நஞ்சு அடங்கிற்று இன்று ஊறிற்று ஆகாதே
|
|
|
|
|
2959. |
- தாழ்ந்து உலவி மெல் முலை மேல் தண் ஆரம் வில் விலங்கப்
-
போழ்ந்து அகன்ற கண்ணினால் ஏப் பெற்றுப் போகலாய்
-
தாழ்ந்து அமரர் இன் அமிர்தம் தக்க நாட்டு ஆகாதே
-
வீழ்ந்தது என வீழ்ந்தாய் நீ இன்று அதுவும் விட்டாயோ
|
|
|
|
|
2960. |
- கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ
-
பெண்ணோ அமுதோ பிணையோ எனப் பிதற்றித்
-
துண் என் சிலைத் தொழிலும் காட்டி முன் இன்புற்றீர்
-
புண் மேல் கிழிபோல் துறத்தல் பொருள் ஆமோ
|
|
|
|
|
2961. |
- பொன் நகர வீதி புகுந்தீர் பொழி முகிலின்
-
மின்னின் இடை நுடங்க நின்றாள் தன் வேல் நெடுங் கண்
-
மன்னன் நகர் எல்லாம் போர்ப்ப வலைப் பட்டீர்க்கு
-
இன்னே ஒளி இழந்த இன்னா இடுகினவோ
|
|
|
|
|
2962. |
- செங்கச்சு இள முலையார் திண் கறைஊர் பல்லினார்
-
மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தாளை நீ மகிழ்ந்து
-
பங்கயமே போல்வாளைப் பார்ப்பான் ஆய்ப் பண் அணைத்துத்
-
தங்கினாய் கோவே துறத்த தகவு ஆமோ
|
|
|
|
|
2963. |
- புல்லார் உயிர் செகுத்த பொன் அம் திணி தோளாய்
-
மல் ஆர் அகன் மார்ப மட்டு ஏந்தி வாய் மடுத்திட்டு
-
எல்லாரும் காண இலக்கணையோடு ஆடினாய்
-
அல்லாந்து அவள் நடுங்க அன்பின் அகல்வாயோ
|
|
|
|
|