முகப்பு |
தொடக்கம் |
கோயில் விலாவணை
|
|
2964. |
- கல்லோ மரனும் இரங்கக் கலுழ்ந்து உருகி
-
எல்லாத் திசை தோறும் ஈண்டி இன மயில் போல்
-
சொல்லாத் துயர்வார் தொழுவார் அழுவார் ஆய்
-
அல்லாந்து அகன் கோயில் ஆழ்கடல் போல் ஆயிற்றே
|
|
|
|
|
2965. |
- பூப் பரிவார் பொன் செய் கலம் பரிவார் பொன் வளையை
-
நீப்பிர் எனப் புடைப்பார் நீள் தாமம் சிந்துவார்
-
ஏப் பெற்ற மான் பிணை போல் ஏங்குவார் இன் உயிரைக்
-
காப்பரேல் காவலனார் காவாரோ இன்று என்பார்
|
|
|
|
|
2966. |
- கழுநீரும் தாமரையும் கண்டனவே போலும்
-
முழுநீர் வேல் கண்ணும் முகமும் உலறிச்
-
செழுநீர் மணிக் கொடிகள் காழகம் சேர் கொம்பாய்
-
அழுநீர வாய் அலறி அல்லாப்ப போன்றாரே
|
|
|
|
|
2967. |
- பண்ணார் பணை முழவம் பாடு அவிந்து
-
பல் மணியாழ் மழலை நீங்கிப்
-
புண்ணார் புனை குழலும் ஏங்கா
-
புனை பாண்டில் இரங்கா வான்பூங்
-
கண்ணார் ஒலி கவுள கிண்கிணியும்
-
அம் சிலம்பும் கலையும் ஆரா
-
மண்ணார் வலம்புரியும் வாய் மடங்கிக்
-
கோன் கோயில் மடிந்தது அன்றே
|
|
|
|
|
2968. |
- அணியார் மணி அரக்கு வட்டு
-
அழுத்தி வைத்த அனைய செங்கண் மாத்தாள்
-
பிணியார் பெரும் துருத்தி
-
அன்ன பெரும் கவுள பிறை ஏர் கோட்ட
-
பணியார் கமழ் கடாத்து அண்ணல்
-
அரசுவாப் பண்ணார் பாய்மா
-
இணையாதும் இல்லாத கண்ணீர்
-
வீழ்த்து உண்ணா நின்று இனைந்ததாமே
|
|
|
|
|
2969. |
- கழித்த கடிப் பிணையும் கை வளையும்
-
மாலையும் களைந்து முத்தும்
-
தொழித்த நறும் சாந்தும் சுண்ணமும்
-
பல் மணியும் கலனும் சிந்தி
-
விழித்து வியன் கோயில் பல் மீன்
-
பரந்து இமைக்கும் பனியார் வானம்
-
பழித்துப் பசும் பொன் உலகு குடி
-
போயிற்று ஒத்தது அன்றே
|
|
|
|
|
2970. |
- அழலார் சுரை எயிற்று வெம் சின
-
ஐந் தலை சுமந்த வெகுளி நாகம்
-
நிழலார் திருமணியும் தேவர்
-
திரு முடி மேல் நிலவி வீசும்
-
சுழல் ஆர் பசும் பொன்னும் வேய்ந்து
-
சொரி கதிர் மென் பஞ்சி ஆர்ந்த
-
கழலான் நகரம் அமுது கடை
-
கடல் போல் கலங்கிற்று அன்றே
|
|
|
|
|