முகப்பு |
தொடக்கம் |
சேணிகன் வரவு
|
|
3041. |
- மட்டு அலர் வன மலர்ப் பிண்டி வாமனார்
-
விட்டு அலர் தாமரைப் பாதம் வீங்கு இருள்
-
அட்டு அலர் பருதியின் அளிக்கச் செல்லும் நாள்
-
பட்டது ஓர் பொருளின் இனிப் பழிச்சு கின்றதே
|
|
|
|
|
3042. |
- கயல் இனம் உகளிப் பாய முல்லை அம் பொதும்பில் காமர்
-
புயல் இனம் மொக்குள் வன்கண் குறுமுயல் புலம்பிக் குன்றத்து
-
அயல் வளர்கின்ற ஆமான் குழவியோடு இரிந்து செந்நெல்
-
வயல் வளர் கரும்பில் பாயும் மகத நாடு என்பது உண்டே
|
|
|
|
|
3043. |
- இரும் பிடி தழீஇய யானை இழி மதம் கலந்து சேறாய்ச்
-
சுரும்பொடு மணி வண்டு ஆர்க்கும் துகில் கொடி மாட வீதிப்
-
பெருங் கடி நகரம் பேசின் இராசமா கிருகம் என்பர்
-
அருங் கடி அமரர் கோமான் அணிநகர் ஆயது ஒன்றே
|
|
|
|
|
3044. |
- எரி மிடைந்த அனைய மாலை இன மணி திருவில் வீசும்
-
திருமுடி ஆர மார்பின் சேணிகன் என்ப நாமம்
-
அருமுடி மன்னர் சூழ அலர் அணி பிண்டி வேந்தன்
-
திருவடி விருந்து செய்வான் திரள் முரசு அறைவித்தானே
|
|
|
|
|
3045. |
- பொன் நா வழியால் புகழ் நா வழித்து ஆய்ந்த மெல் கோல்
-
மின் ஆர் மணிப் பூணவன் மேவி விண்காறும் நாறும்
-
முன்னோர் வகுத்த முக வாசம் பொதிந்த வெந்நீர்
-
மன் ஆர வாய்க் கொண்டு உமிழ்ந்தான் மணிமாலை வேலோன்
|
|
|
|
|
3046. |
- தீம் பால் நுரை போல் திகழ் வெண் பட்டு உடுத்து வண்டு ஆர்
-
தேம் பாய சாந்தம் மெழுகிக் கலன் தேறல் மாலை
-
தாம் பால தாங்கிப் புகழ் தாமரைக் குன்றம் அன்ன
-
ஆம் பால் மயிர் வேய்ந்து அயிராவணம் ஏறினானே
|
|
|
|
|
3047. |
- எறி சுரும்பு அரற்றும் மாலை எரி மணிச் செப்பு வெள்ளம்
-
பொறிவரி வண்டு பாடும் பூஞ் சுண்ணம் நிறைந்த பொன் செப்பு
-
அறிவரிது உணர்வு நாணித் தலை பனித்து அஞ்சும் சாந்தம்
-
செறி இரும் பவழச் செப்புத் தெண்கடல் திரையின் நேரே
|
|
|
|
|
3048. |
- வந்து தேன் மயங்கி மூசு மலயச் செஞ் சாந்தம் ஆர்ந்த
-
சந்தனச் செப்பும் கங்கை தரு மணல் அலகை ஆற்றாச்
-
சுந்தரம் பெய்த யானைத் தூ மருப்பு இயன்ற வெண் செப்பு
-
அந்தரத்து அலர்ந்த பல் மீன் எனைத்து உள அனைத்தும் மாதோ
|
|
|
|
|
3049. |
- மை பொதி குவளை வாள் கண் மல்லிகைக் கோதை நல்லார்
-
நெய் பொதி நெஞ்சின் மன்னர் நிலம் பிறக்கிடுவ போலும்
-
கொய் சுவல் புரவி மான்தேர் குழுமணி ஓடை யானை
-
மெய் பொதிந்து உயர்ந்த கோமான் விரைப் பலி சுமந்த அன்றே
|
|
|
|
|
3050. |
- கொடிக் குழாம் குஞ்சி பிச்சக் குழாம் நிறை கோல மாலை
-
முடிக் குழாம் மூரி வானம் பால் சொரிகின்றது ஒக்கும்
-
குடைக் குழாம் இவற்றின் பாங்கர்க் குளித்தது குளிர் சங்கு ஆர்க்கும்
-
படைக் குழாம் பாரில் செல்லும் பால் கடல் பழித்த அன்றே
|
|
|
|
|
3051. |
- கனை கடல் கவரச் செல்லும் கண மழைத் தொகுதி போலும்
-
நனை மலர்ப் பிண்டி நாதன் நல் அறம் கொள்ளை சாற்றிப்
-
புனை முடி மன்னர் ஈண்டிப் பொன் எயில் புறத்து விட்டார்
-
வினை உடைத்து இன்ப வெள்ளம் விரும்பிய வேட்கையானே
|
|
|
|
|
3052. |
- வண்டு சூழ் பூப்பலி சுமந்து தான் வலம்
-
கொண்டு சூழ்ந்து எழுமுறை இறைஞ்சிக் கோன் அடி
-
எண்திசை அவர்களும் மருள ஏத்தினான்
-
வெண் திரைப் புணரி சூழ் வேலி வேந்தனே
|
|
|
|
|
3053. |
- பகல் வளர் பவழச் செந்தீப் பருதி முன் பட்டதே போல்
-
இகல் வினை எறிந்த கோமான் இணை அடி ஒளியின் தோன்றாது
-
அகல் விசும்பு உறையும் தேவர் ஒளி அவிந்து இருப்ப மன்னன்
-
முகில் கிழி மதியம் போலும் முனிக்குழாம் நோக்கினானே
|
|
|
|
|
3054. |
- கண் வெறி போக ஆங்கு ஓர் கடுந் தவன் உருவம் நோக்கி
-
ஒண் நெறி ஒருவிக் கோமான் ஒளி திரண்டு இருந்ததாம் கொல்
-
விண் நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன் கொல் என்று
-
எண் நெறி யாதும் ஓராது இருந்து இது கூறினானே
|
|
|
|
|
3055. |
- விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து விண்ணவன்
-
இளங் கதிர் எனத் துறந்து இருப்பக் கண்டனம்
-
வளம் கெழு முக்குடை அடிகள் வாய்மொழி
-
துளங்கினன் எனத் தொழுது இறைஞ்சினான் அரோ
|
|
|
|
|
3056. |
- மன்னவ கேள்மதி வானில் வாழ்பவர்
-
பொன் இயல் கற்பகப் போக பூமியார்
-
என்னதும் துறவலர் இறைவன் வாய்மொழி
-
சொன்ன ஆறு அல்லது எப்பொருளும் தோன்றுமே
|
|
|
|
|
3057. |
- அடிகளுக்கு இடம் மருங்கு இருந்த ஆய் மலர்க்
-
கடி கமழ் தாமரைக் கண்ணினான் இவன்
-
வடிவமே வாய் திறந்து உரைக்கும் வானவன்
-
ஒடிவறு பேர் ஒளி உட்கத் தக்கதே
|
|
|
|
|
3058. |
- திருவினோடு அகன்ற மார்பின் சீவக சாமி என்பான்
-
உருவினோடு ஒளியும் நோக்கின் ஒப்புமை உலகின் இல்லை
-
மருவினார் இமைத்து நோக்கின் மனம் பிறிது ஆகி நிற்பார்
-
அரிது இவன் முகத்து நோக்கல் அழகு ஒளி அன்ன என்றான்
|
|
|
|
|