3.

           நெஞ்சறிவுறூஉ

நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போது அவிழ்ந்து
  கோலம் குயின்ற குழல் வாழி நெஞ்சே!

கோலம் குயின்ற குழலும் கொழும் சிகையும்
காலக் கனல் எரியின் வேம்வாழி நெஞ்சே!
காலக் கனல் எரியின் வேவன கண்டாலும்
சால மயங்குவது என் வாழி நெஞ்சே!
உரை
   

4.

          இதுவும் அது

வித்தகர் செய்த விளங்கு முடி கவித்தார்
  மத்தக மாண்பு அழிதல் காண் வாழி நெஞ்சே!

மத்தக மாண்பு அழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே!

உத்தம நன்னெறிக்கண் நின்று ஊக்கம் செய்தியேல்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே!
உரை
   

5.

மக்கள் யாக்கையும் செல்வமும்
பெறுதல் அரிது எனல்


வினைபல வலியினாலே  
      வேறுவேறு யாக்கை ஆகி
நனிபல பிறவி தன்னுள்
   துன்புறூஉம் நல்உயிர்க்கு
மனிதரின் அரியது ஆகும்
   தோன்றுதல்; தோன்றினாலும்
இனியவை நுகர எய்தும்
   செல்வமும் அன்னதேயாம்.
உரை
   

6.

     இதுவும் அது

உயர்குடி நனிஉள் தோன்றல்
     ஊனம்இல் யாக்கை ஆதல்
மயர்வு அறு கல்வி கேள்வித்
   தன்மையால் வல்லர் ஆதல்
பெரிது உணர் அறிவே ஆதல்
   பேரறம் கோடல் என்று ஆங்கு
அரிது இவை பெறுக லோடே
   பெற்றவர் மக்கள் என்பார்.
உரை
   

7.

       கற்புடை மகளிர்

நாடும் ஊரும் நனி புகழ்ந்து ஏத்தலும்
  பீடுறும் மழை பெய்க எனப் பெய்தலும்
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே.
உரை
   

8.

      கற்பு இல் மகளிர்

பள்ள முதுநீர்ப் பழகினும் மீன் இனம்
  வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம்
கள்அவிழ் கோதையர் காமனோடு ஆயினும்
உள்ளம் பிறிதாய் உருகலும் கொள் நீ.
உரை
   

9.

            இதுவும் அது

உண்டியுள் காப்பு உண்டு; உறுபொருள் காப்பு உண்டு;
  கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்பு உண்டு;
பெண்டிரைக் காப்பது இலம்என்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்று அறிந்தோரே.
உரை
   

10.

         இதுவும் அது

எத்துணை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி  
  புற்பனி உக்க மரத்து இலை நுண் மயிர்
அத்துணையும் பிறர் அஞ்சொலினார் மனம்
புக்கனம் என்று பொதி அறைப் பட்டார்.
உரை