51.

         இதுவும் அது

யாறொடு யாழ்ஞெலிகோல் நிலவார் கொடிப்
  பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கு இவை
வேறுஓர் இடத்து வெளிப்படல் நன்றாம்.
  
உரை
   

52.

      பின்னும் இரண்டு உவமைகள்

ஆய்குரங்கு அஞ்சிறை வண்டினம் போல்க என்று
  பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்து நின் தோள் நம்பி
யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய.
  
உரை
   

53.

          ஆறு

வாரி பெருகப் பெருகிய காதலை

 

வாரி சுருங்கச் சுருக்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி அறஅறும்
வார்புனல் ஆற்றின் வகையும் புரைப.

  
உரை
   

54.

            யாழ்

எங்ஙனம் ஆகியது இப்பொருள் அப்பொருட்கு

 

அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின்
எங்ஙனம் பட்டனன் பாண் மகன் பாண்மகற்கு
அங்ஙனம் ஆகிய யாழும் புரைப.

  
உரை
   

55.

       தீக்கடை கோல்

கரணம் பலசெய்து கையுற்றவர்கட்கு
  அரணம் எனும்இலர் ஆற்றில் கலந்து
திரணி உபாயத்தில் திண்பொருள் கோடற்கு
அரணி ஞெலி கோல் அமைவர ஒப்ப.
  
உரை
   

56.

           திங்கள்

நாள்தொறும் நாள்தொறும் நந்திய காதலை
  நாள்தொறும் நாள்தொறும் நய்ய ஒழுகலின்
நாள்தொறும் நாள்தொறும் நந்தி உயர்வு எய்தி
நாள்தொறும் தேயும் நகை மதி ஒப்ப.
  
உரை
   

57.

           பூங்கொடி

வனப்பிலர் ஆயினும் வளமை உளோரை
  நினைத்தவர் மேவர நிற்பமைக்கு அவர்தாம்
கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப்
புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப.
  
உரை
   

58.

          மரக்கலம்

தம்கண் பிறந்த கழி அன்பினார்களை
  வன்கண்மை செய்து வலிய விடுதலின்
இன்பொருள் ஏற்றி எழநின்ற வணிகர்க்கு
அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப.
  
உரை
   

59.

      கற்புடைய மகளிர்

ஒத்த பொருளால் உறுதி செய்வார்களை
  எத்திறத்தானும் வழிபட்டு ஒழுகலின்
பைத்தரவு அல்குல் பொன்பாவையின் நல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப.
  
உரை
   

60.

         விலங்கு

வீ பொருளானை அகன்று புறனும் ஓர்
  மாபொருளான் பக்கம் மாண நயத்தலின்
மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு
மாவும் புரைப மலர்அன்ன கண்ணார்.
  
உரை