தொடக்கம் |
|
|
|
யாக்கையின்
இழிதகைமை
|
11. |
நன்கணம் நாறும்இது என்றுஇவ் உடம்பு நயக்கின்றது ஆயின் ஒன்பது வாயில்கள் தோறும் உள்நின்று அழுக்குச் சொரியத் தின்பது ஓர்நாயும் இழுப்பத் திசைதொறும் சீப் பில்கு போழ்தின் இன்பநல் நாற்றம் இதன்கண் எவ்வகையால் கொள்ளலாமே. |
|
உரை
|
|
|
|
|
|
இதுவும் அது
|
12. |
மாறுகொள் மந்தரம் என்றும் மரகத(ம்) வீங்குஎழு என்றும் தேறிடத் தோள்கள் திறத்தே திறந்துளிக் காமுற்றது ஆயின் பாறொடு நாய்கள் அசிப்பப் பறிப்பறிப் பற்றிய போழ்தின் ஏறிய இத் தசைதன் மாட்டு இன்புறல் ஆவது இங்கு என்னோ!
| |
உரை
|
|
|
|
|
|
இதுவும்
அது
|
13. |
உறுப்புக்கள் தாம்உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவதேல் இவ் வுறுப்புக் குறைத்தன போல் அழுகிக் குறைந்து குறைந்து சொரிய வெறுப்பில் கிடந்த பொழுதின்
வேண்டப் படுவதும் உண்டோ!
| |
உரை
|
|
|
|
|
|
இதுவும்
அது |
14. |
எனதனெச் சிந்தித்தலால் மற்று இவ்வுடம்பு இன்பத்துக்கு ஆமேல் தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவும் மூத்தவும் ஆகி நுனைய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட இனைய உடம்பினைப் பாவி யான்எனது என்னல் ஆமோ!
| |
உரை
|
|
|
|
|
| இறைமாட்சி |
15. |
இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய் உறைந்த தம்மை எல்லாம் உடன் ஆக்குவான் பிறந்த மூர்த்தி ஒத்தான் திங்கள் வெண்குடை அறங்கொள் கோல் அண்ணல் மும்மத யானையான்
|
|
உரை
|
|
|
|
|
|
இதுவும்
அது
|
16. |
சீற்றம் செற்றுப்போய் நீக்கிச் செங்கோலினால் கூற்றம் காய்ந்து கொடுக்க எனும் துணை மாற்றமே நவின்றான் தடுமாற்றத்துத் தோற்றம் தன்னையும் காமுறத் தோன்றினான்.
| |
உரை
|
|
|
|
|
|
குற்றம்
கடிதல்
|
17. |
மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டாதே அன்று வாய்மை நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த கண்ணுளான் கண்டம் தன் மேல் கறையை யார் கறை அன்று என்பார்.
| |
உரை
|
|
|
|
|
|
இடுக்கண் அழியாமை
|
18. |
மறிப மறியும் மலிர்ப மலிரும் பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும் அறிவது அறிவார் அழுங்கார் உவவார் உறுவது உறும்என்று உரைப்பது நன்று. | |
உரை
|
|
|
|
|
|
இதுவும் அது
|
19. |
வேரிக் கமழ்தார் அரசன் விடுக என்ற போழ்தும் தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும் பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொலிவு இன்றி நின்றான் பாரித்தது எல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்.
| |
உரை
|
|
|
|