கடவுள் வாழ்த்து


1.

இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்
நல்லார் வணங்கப் படுவான்பிறப் பாதி நான்கு
மில்லானுயிர்கட் கிடர்தீர்த்துய ரின்ப மாக்குஞ்
சொல்லான் றருமச் சுடரானெனுந் தொன்மையினா
னெல்லா முணர்ந்தா னவனேயிறை யாக வேததி.

இதுவுமது

2.

அன்னான் பயந்த வறவாரமிர் துண்டு நின்றார்
இன்னா ரினையரெனவேண்டுவ தில்லை யார்க்கும்
பன்னாந் துணையும் பணிந்தாகிய பத்தி யினா
னென்னா லுரைக்கப் படுகின்றதொன் றீங்குளதே.