அவையடக்கம்
|
3. |
பண்டாக மத்துட் பயிலாவுரை யென்று மிக்கார்
விண்டீங் கிதனை வெகுளார்விடல் வேண்டு
வன்யான் தண்டா மரைமே னடந்தான்றடந் தாள்வ ணங்கிக் கண்டேன் கிடந்தேன்
கனவின்னிது கண்ட வாறே.
|
4. |
ஆய்நீல வுண்க ணவளாயடங் காமை செய்யும்
பேய்நீல கேசி பெரியோனறங் கொண்ட
பின்னைத் தீநீல வுள்ளந் திரிந்தேறு திருவத் தளாய் மாஞால மெல்லா
மறமாற்றிய மாட்சி யளா.
|
5. |
தேவன் னுரைப்பத் தெளிந்தேன்பிற் றெளிந்த
வெல்லாம் மாவென் றுகொண்டேன் மடனேவலி யாக நின்று நாவல் புலவ ரவைநாப்பண்
நாட்ட லுற்றேன் பாலின் னவென்று பழிப்பாரினி யில்லை யன்றே.
|
6. |
கண்டிங்கு நாளுங் கடல்வையங் காதல்
செய்யும் வெண்டிங்க டானும் விமலந்தனக் கில்ல தன்றே கொண்டென்சொ
லெல்லாங் குணனேயெனக்கூறு
கென்னே னுண்டிங்கோர் குற்ற மெனில்யானுமொட் டாமை
யுண்டோ.
|
7. |
தெள்ளி நரைத்துத் தெருளாதுறு தீமை
செய்யும் புள்ளி னுரையும் பொருளாமெனக் கோட லினா லெள்ளுந் திறத்தஃ
துரையென்றிது நீக்க
லின்றாய்க் கொள்ளும் முலகங் குணமாணறம் வேண்டு
மென்றால்.
|