அவையடக்கம்

3.

பண்டாக மத்துட் பயிலாவுரை யென்று மிக்கார்
விண்டீங் கிதனை வெகுளார்விடல் வேண்டு
                                      வன்யான்
தண்டா மரைமே னடந்தான்றடந் தாள்வ ணங்கிக்
கண்டேன் கிடந்தேன் கனவின்னிது கண்ட வாறே.

4. ஆய்நீல வுண்க ணவளாயடங் காமை செய்யும்
பேய்நீல கேசி பெரியோனறங் கொண்ட
                                  பின்னைத்
தீநீல வுள்ளந் திரிந்தேறு திருவத் தளாய்
மாஞால மெல்லா மறமாற்றிய மாட்சி யளா.

5. தேவன் னுரைப்பத் தெளிந்தேன்பிற் றெளிந்த
                                 வெல்லாம்
மாவென் றுகொண்டேன் மடனேவலி யாக நின்று
நாவல் புலவ ரவைநாப்பண் நாட்ட லுற்றேன்
பாலின் னவென்று பழிப்பாரினி யில்லை யன்றே.

6. கண்டிங்கு நாளுங் கடல்வையங் காதல் செய்யும்
வெண்டிங்க டானும் விமலந்தனக் கில்ல தன்றே
கொண்டென்சொ லெல்லாங் குணனேயெனக்கூறு
                                      கென்னே
னுண்டிங்கோர் குற்ற மெனில்யானுமொட் டாமை
                                      யுண்டோ.

7. தெள்ளி நரைத்துத் தெருளாதுறு தீமை செய்யும்
புள்ளி னுரையும் பொருளாமெனக் கோட லினா
லெள்ளுந் திறத்தஃ துரையென்றிது நீக்க
                                    லின்றாய்க்
கொள்ளும் முலகங் குணமாணறம் வேண்டு
                                    மென்றால்.