|
2. குண்டலகேசி
வாதச் சருக்கம்
|
150. |
கொல்லை முல்லைபைங் கோங்கு
குருந்தங் கோடறண் குரவ நல்ல மல்லிகை
நறவம் ஞாழல் தாழைபுன் னாகம் பல்லி தழ்ப்பனிக்
குவளை பானல் பாதிரி பிறவு மெல்லை யின்மல
ரேந்தி யிறைவன திடவகைக் கெழுந்தாள்.
|
151. |
நீட்சி யோக்கமோ
டகல நினையநின் றெங்கணு நோக்கி மாட்சி யால்வலங்
கொண்டு மாதவத் திறைவனிற் பிழையாக் காட்சி யேனெனி
லெல்லாக் கதவமுந் திறக்கெனத் திறப்ப வாட்சி மூவுல
குடைய வடிகட மடியிணை தொழுதாள்.
|
152. |
அத்தி யாளியோ
டாமா னட்ட மங்கல மரிய பத்தி பாவைபல்
பறவை பயில்கொடி திமிசொடு பிறவும் வித்த கம்பெரி
துடைய விசித்திர வுருவநன் மலராற் சித்த நன்னெறி
பயந்தான் திருவடிக்கு அருச்சனை
செய்தாள்.
|
153. |
தூமஞ் சாந்தொடு
சுண்ணந் துதியொடு பரவுபு தொழுதே தாமந் தாழ்தர
நாற்றித் தத்துவ தரிசிய துருவே யாமென றையென
லியந்தாங் கன்ன வாயிரத் தோரெண் ணாம நல்லிசை
தொடுத்து நாதகீ தங்களை நவிற்றும்.
(இதுமுதல் எட்டுச் செய்யுள் ஒரு
தொடர்)
|
154. |
கன்று காலனைக்
கடந்தாய் காதற் காமனைக் கடிந்தாய் தொன்று மூத்தலைத்
துறந்தாய் தோற்ற மாக்கட லிறந்தா யொன்ற நோய்பகை
யொருங்கே யுடைந்து வெங்களத் துதிர வென்றி ருந்தனை
நீயே வீரர்தம் வீரர்க்கும் வீரா.
|
155. |
சாத னோய்சரை
பிறவி தாஞ்செய் தீவினைக் கடலுண் மாது யருழந்
துறுநோய் மறுகு மன்னுயிர்க் கெல்லாந் தீதி னன்னெறி
பயந்து திரைசெய் நீள்கரை யொருவிப் போத ரும்புணை
படைத்தாய் புலவர்தம் புலவர்க்கும்
புலவா.
|
156. |
அரிய வாயின
செய்திட் டமரர் துந்துபி யறைந்து புரிய பூமழை
பொழியப் பொன்னெயில மண்டிலம் புதைந்த விரிகொ
டண்டளிர்ப் பிண்டி மரநிழ லிருந்திரு வினையும் பிரியும்
பெற்றியை யுரைத்தாய் பெரியவர்ப் பெரியவர்ப்
பெரியாய்.
|
157. |
பொங்கு சாமரை
யேந்திப் புடைபுடை யியக்கர்நின் றிரட்டச் சிங்க
வாசனத் திருந்து தெளிந்தொளி மண்டில நிழற்றத் திங்கண்
முக்குடை கவிப்பத் தேவர்தந் திருந்தவை தெருள வங்க பூவம
தறைந்தா யறிவர்தம் மறிவர்க்கு
மறிவா.
|
158. |
ஊறி யாவது
முணரா யுறல்வகை யிதுவென வுரைத்தி கூறு வேனெனக் கூறாய்
குரன்முர சனையதோர் குணத்தை சேற லுள்ளமு
மில்லையாய்த் திருமலர் மிசையடி யிடுதி தேறு மாறென்னை
நின்னைத் தேவர்தந் தேவர்க்குந்
தேவா.
|
159. |
கண்ணி னாலொன்றும்
காணாய் காணவு முளபொரு ளொருங்கே பெண்ணு மல்லவுஞ்
சாராய் பிரிதலில் பேரின்ப முடையை யுண்ணல் யாவது
மிலையா யொளிதிக ழுருவமஃ துனதா லெண்ணில் யார்நினை
யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு
மிறைவா.
|
160. |
சொற்றி யாவதுங்
கேளாய் சுதநயந் துணிவுமங் குரைத்தி கற்றி யாவது
மிலையாய்க் கடையில்பல் பொருளுணர் வுடையை பற்றி யாவது
மிலையாய்ப் பரந்தவெண் செல்வமு முடையை முற்ற யார்நினை
யுணாவார் முனைவர்தம் முனைவர்க்கு
முனைவா.
|
161. |
அன்மை யாரவர்
தாந்தா மறிந்தன வுரைத்த பொய்யாக்கி நின்மெ யாகிய
ஞான நிகழ்ச்சி நீவிரித் துரைத்த சொன்மை யாரிடை
தெரிந்தார் தொடர்வினை முழுவதுஞ் சுடுநின் றன்மை யார்பிற
ரறிவார் தலைவர்தம் தலைவர்க்குந்
தலைவா.
|
162. |
ஆதி யந்தளப்
பரிய அருகந்த பகவர்த மறஞ்சால் சேதி யம்புக்க
வர்தந் திருந்தடி களைப்பெருந் துதிசேர் போதி யிற்பணிந்
திருந்தாள் புன்னெறி தாம்பல வவற்றுள் யாதுகொ றான்மு
னென்னா லடர்க்கற் பாலது வென்றாள்.
வேறு |
163. |
ஊன்றின்ற
லிழுக்கென்னா னுயிரினையு முளதென்னா னோன்றலையு
நோன்பென்னா னோக்குடைய கணிகையரே போன்றிருந்து
பொதியறுக்கும்
புத்தன்றன் புன்னெறியை யான்சென்றஃ
தடிப்படுப்ப னறக்கரும மிதுவென்றாள்.
|
164. |
மண்டலத்தி
னோக்குவாள் மடுத்ததன தவதியால் கண்டனடான்
காம்பிலிக் காவலன் கடைமுகத்தோர் தண்டழைய
பொழில்நாவற் சாகைநட் டுரைபெறாக் குண்டலகே
சிப்பெயரைக் குறியாக வேகொண்டாள்.
|
165. |
தருமத்திற்
றிரிவில்லா டயாச்செய்தற் பொருட்டாக நிருமித்த
வகையினதா நெடுநகரை வலஞ்செய்து திருமுத்தப்
பீடிகைக்கட் சித்தரையுஞ் சிந்தித்தோர் பெருமுத்தப்
பெண்ணுருவங் கொண் டியைந்த
பெற்றியளாய்.
|
166. |
அந்தரமே
யாறாச்சென் றழனுதிவே லரசர்கட் கிந்திரனே
போன்றிருந்த விறைமகன திடமெய்திக் கந்திருவ மகளேன்
யான் காவலனைக் காண்குறுவேன் வந்திருந்த
துரைவிரைந்து வாயிலோ
யெனச்சொன்னாள்.
|
167. |
கருங்களிறுங்
களிமாவுங் கந்தோடு பந்தியவே நெருங்குபுபோய்
நீருண்ணா தேர்பண்ணா நெடுங்கடைக்குப் பெரும்படையுஞ்
சாராதிப் பெண்பாவி மரநட்டிங் கிருந்ததன்
றறத்தினா லெனக்கரிது புகலென்றான்.
நீலகேசி குண்டலகேசியை
வினாதல் |
168. |
வாயிலோ
னுரைகேட்டு வடிக்கண்ணாண் முகநோக்கி கோயிலையான்
புகவிலக்குங் குறையென்னை முறைதிருத்தும் பூசலிங்
குடையையோ பொருளிழவோ வுயிரிழவோ நீயிலையார்
புதனடற்கு நிமித்தமிங்
கென்னென்றாள்.
குண்டலகேசி
கூற்று
|
169. |
என்கருமம்
வினவுதியே லிலிங்கியரு ளென்னோடு நன்குரைப்பார்த்
தரல்வேண்டி நாவற்கொம் பிதுநட்டே னுன்கரும நீ
செய்வாய் நுழைந்தறிவு முடையையேல் மன்பெரியான்
றிருந்தவையுண் மாற்றந்தா வெனச்சொன்னாள்.
நீலகேசி கூற்று |
170. |
அப்படித்தே
யெனின்வாயி லடைப்பொழிக யானைதே ரெப்படியு
மியங்குகநும் மிறைமகற்கு மிசைமினென் றிப்படியா
லிவையுரையா விலைநாவ லிறுத்திட்டா டுப்போடு
கனிதொண்டை துயில்கொண்ட
துவர்வாயாள்.
காம்பிலி மன்னன்
செயல் |
171. |
வேந்தனு மதுகேட்டே விம்முயிர்த்த
வுவகையனாய்ப் பூந்தடங்க ணல்லார் புகுதுக
வெனப்புகலும் போந்திருக்க வெனவிருக்கை பொருந்திய
வாறவர்கட் கீந்துலகத் தியற்கையு மினிதினிற்
செய்திருந்தான்.
மன்னன் வேண்டுகோள் |
172. |
முதலவனோ
டவனூலு மந்நூலின் முடிபொருளு நுதலிய
பொருணிகழ்வுந் நுங்கோளு மெமக்கறியத் திதலைமா
ணல்குலீர் தெருட்டுமி னெனச்சொன்னா னதலையம்
பெருங்கதவ மடைப்பொழித்திட்
டலைவேலான்.
குண்டலகேசி கூற்று |
173. |
நன்றாக
வுரைத்தனைநீ நரதேவ நின்னவையுள் வென்றாக்கோர்
விழுப்பொருளும் தோற்றார்க்கோர் பெருந்துயரும் ஓன்றாக
வுரையாக்கா லுரையேன்யா னெனச்சொன்னாள் குன்றாத
மதிமுகத்துக் குண்டலமா கேசியே.
வேந்தன்
உடன்பாடும் மகளிர் மகிழ்ச்சியும் |
174. |
அறத்தகைய
வரசனு மதுகேட்டாங் கவர்க்குரைப்பான் சிறப்பயர்வ
னன்றாக வென்றார்கட் கின்றேயான் புறப்படுப்பன்
றோற்றாரைப் பொல்லாங்கு செய்தென்றாற் கிறப்பவும்
பெரிதுவந்தா ரிலங்கிழையா ரிருவருமே.
அம் மகளிரிருவரும் சொற்போர் தொடங்குதல் |
175. |
வேனிரைத்த
விரிதானை வேத்தவையார் வியப்பெய்தக் கோனுரைத்த
வுரைகேட்டே குண்டலமா கேசியுந் தானுரைத்தாள்
தான்வேண்டுந் தலைவனூற் பொருணிகழ்ச்சி தேனிரைத்த
கருங்குழலா டானும்பின் றெருட்டினாள்.
குண்டலகேசி
கூறிய தலைவன் முதலியவற்றின் இலக்கணம் (1)
தலைவன் |
176. |
ஆதிதான்
பெரியனா யறங்கெடு மளவெல்லா மூதியமே
யுணர்ந்தவ னுறுதரும மேயுரைத்தான் யாதனையுந்
தான்வேண்டா னயலார்க்கே துன்புற்றான் போதியா
னெம்மிறைவன் பொருந்தினா
ருயக்கொள்வான்.
(2) நூல் (3)
பொருள் (4) நிகழ்வு |
177. |
முந்துரைத்தான்
முந்நூலு மந்நூலின் முடிபொருடா மைந்துரைப்பி
லுருவுழப் பறிவோடு குறிசெய்கை சிந்தனைகட்
செலவோடு வரவுமே நிலையில்லை தந்துரைப்பி
ªù¤ரிநுதிபோற் றாங்கேடு
நிகழ்வென்றாள்.
நீலகேசி
குண்டலகேசியின் கூற்றிற்குக் குற்றங் காட்டத்
தொடங்கல் |
178. |
சொல்லியவந்
நான்மைமேற் றுணிவினையுந் தான்பெயர்த்து நல்லவையை
மனங்கொளீஇ நான்மையின் முதல்வைத்த வெல்லையில்
குணத்தலைவ ரிலக்கணமென் றெடுத்ததன்மேற் பல்வகைய
பெருங்குற்றம் பதம்பதமாயக்
கேளென்றாள்.
|
179. |
முன்னெனப்
படுவதுதான் முதலில்லாத் தடுமாற்றம் அன்னதன்கட்
பெரியனே லறங்கொண்ட தவமாகும் பின்ன தன்கட்
பெரியனேற் பிறழ்வெய்துங் காலச்சொ லென்னென்றான்
பெரியவா றிருமையினுந்
திரிந்தென்றாள்.
|
180. |
பெருமைமுன்
பெற்றனனேற் பின்னைத்தான் முடிப்பதோர் கருமமிங்
கெவனாகுங் காட்டுதியேற் பெற்றிலன்முன் றருமந்தான்
கருதிநீ சொன்னாயேற் றலைவரே யொருமையா
லறந்தெளிந்த வுழப்புலையர் முதலானார்.
|
181. |
தான்கெடினுந்
தக்கார்கே டெண்ணற்க வென்பதனை யூன்கொடுமை
யுரைத்தானஃ துணர்ந்திலனே யாகாதோ தான்கெடு
மளவெல்லா நினைத்துரைத்த தத்துவந்தான் மான்கடியு
நோக்கினாய் வழியறக்கெட்
டொழிவதோ.
இதுவுமது |
182. |
வழிவாழக்
கெடுகின்றார் மாந்தருள் மேலாயார் பழிபாவ
மோராதான் பற்றினார்ப் பாழ்செய்வான் ஒழிபாவி
தலைவனென் றுரைப்பதனை யுலகத்தார் கிழியோடு
மாறாக்கா சென்றான்சொற் கேட்பவோ.
|
183. |
நுனைத்தலைய
நுண்மயிரை நுனியுறீஇ விதிர்த்திட்டா லனைத்துணைய
தடங்கலு மறக்கிடந்த பிறந்துழப்பு நினைக்குங்காற்
பிறர்க்கேயா மென்றியா னீயன்னா யனைத்துணைய
பெரும்பாவ மவன்செய்தா னாகானோ.
|
184. |
துன்பந்தான் றீவினையின்
வழித்தோன்றுந்
துன்பேயா மென்பதனை நுமரேடி யெப்பொழுது
முரைப்பவாற் பின்புந்தான் பிறர்பிறர்க்குப் பிறந்துழப்பே
யாக்கினா லன்பினான் முன்செய்த தருவினையே
யாகாதோ.
|
185. |
தனக்கொன்றும்
பயனின்றித் தளையாளென் றான்வருந்தி யெனைப்பெருங்
குப்பையு மெருச்சுமப்பாற் கண்டக்கால் நினைப்பதொன்
றுடைத்தவன்செய் நெடும்பாவ நிச்சலும் மனக்கினிதா
வவன்றன்னை யாள்வார்மாண் புரையாயோ.
|
186. |
அவ்வகையா
லுழக்கின்றா னயலார்கள் படுகின்ற வுய்வகையில்
பேரிடரை யொழிப்பதன் பொருட்டாக விவ்வகையா
லருள்செய்யு மென்பதனை யெடுத்துரைத்தாள் கொவ்வையந்
துவர்ச் செவ்வாய்க் குண்டலமா
கேசியே.
|
187. |
அருளினாற்
பிறர்க்குழக்கு மவனென்ற வவ்வுரையைப் புரளல்நீ
பிறப்பொழியும் பொழுதின்க ணவ்வருளைப் பொருளன்மை
கண்டானோ புற்கலர்தா முலர்ந்தாரோ தெருளநீ
யுரைத்துக்காண் டிருந்தவையா
ரிடையென்றாள்.
|
188. |
ஊடுபுக் குயிரடுந் துயரந்தா
னொழிக்கின்றான் வீடுபெற் றிறந்தனனேல் விளிகவன
தருள்பாவி யோடுகிற் றிலனொன்றுந் தாதையையே
யுழப்பித்தோ னாடைபற் றெனவுரைத்த வவன்போன்றா
னாகாதோ.
|
189. |
அங்கிருவ ருளரன்றோ வறப்போக்கிப்
போவாரென் றிங்கிருந்து நீயுரைத்தா லிவனருள்யார்
தெளிகிற்பார் அங்கிருவ ருளரெனினு மவரின்முன்
னவையீரே நங்கரும முலைப்பித்து நாம்போது
மெனநக்காள்.
|
190. |
முன்கொன்றான்
றன்றாயை முழுமெய்யும் போர்த்திருந்து தின்கின்றான்
பிணம்வீடுந் தெருட்டுங்காற் சூனியமே யென்கின்றா னிவன்
போல்வா ரிறைவரில் லெனவுரைப்பாய் தன்கன்று
சாக்கறப்பான் றயாப்பிறிதிற்
குடையவனோ.
இஃது அவையோரை
நோக்கிக் கூறியது |
191. |
கண்ணொடுகா
திவையிலள் கரந்தன முலையிரண்டு முன்னும்வா
யுதட்டோடு மூக்கில ளுறுநோய்த்தி பெண்ணழகிற்
கிவள்பிறராற் பேசவும் படுவாளோ எண்ணுங்கா
லென்பேதை யெனவுரைக்கு மவனொத்தாள்.
இது புத்தனையும்
குண்டலகேசியையும் ஒருசேரப்
பழித்தது |
192. |
பருவரலொன்
றிலன்றாயைப் பழுப்பறித்தான் தலைவனிவள் கருவரைமேற்
றன்கணவன் காலனையுங் கவிழ்த்திட்டாள் இருவரையும்
போல்வாரிவ் விருநிலத்தின் மேலெங்கும் பெருவழியார்
பேரருளார் பிறர்யாரே யெனநக்காள்.
இது புத்தன்
நூலைப்பழித்தது |
193. |
ஒண்ணுதலா
யுன்றலைவ னொழிவின்றி யுணர்கலான் கண்முதலா
வுடையவிக் கருவியிற் கண்டுகேட் டெண்ணியு
முணர்தலா லிலைசுமக்கு மொருவன்போ னுண்ணுணர்வு
தனக்கில்லா னுரைத்ததுதா னூலாமோ.
பொருட்குற்றம் |
|
194. |
ஐங்கந்த
மெனல்பிழைப்பா மறிவினின்வே றாதலாற் சிங்குந்தன்
குறியுழப்புச் செய்கையென் றிவைமூன்று மிங்கொன்று
முருவினோ டிரண்டென்னாய் மிகவுரைத்தாய் சங்கந்தா
மல்லவேற் றத்துவமுந் தலைப்பட்டாய்.
|
195. |
முன்னைத்தன்
முழுக்கேடு முழுக்கேட்டின்
வழித்தோன்றும் பின்னைத்தன் பிறிதறிவும்
பெயர்த்துரைத்தல் பெரும்பேதாய் என்னொக்கு மெனினெருந
லிற்புகுந்தா னிடையிராத் தன்னைத்தந் தெனைக்கொண்டு
தான்சென்றா னெனலன்றோ.
இதுவுமது |
196. |
கள்ளனுந்
தானேயாய்க் கையாப்புண் டவனேபோ லுள்ளந்தா
னின்றவற்றை யுணர்ந்தவற்றோ
டறக்கெட்டிங் கொள்ளனைத்து மில்லென்றா லிறப்பறித
லெவனாகுந் தெள்ளியாய் தெளிந்திருந்து சிந்தித்துக்
காணாயோ.
இதுவுமது |
197. |
கோன்பட்டான்
குந்தத்தாற் குத்துண்டா னேனாதி தான்பட்டான்
றளவீரன் தப்பியோ டவனருகே யான்பட்டே னென்பவன்
போல் யாத்திருந்தே சொல்லுதியால் தான்பட்டான்
பட்டார்க்குத் தன்பாட்டை யுரைக்குமோ
!
|
198. |
பிறைப்பிறப்பும்
பிள்ளைகடம் பிறப்பினையு மெடுத்துரைப்பின் மறைபொருள்கள்
வெளிப்பட்டா மன்னுந்தாங் கருதுபவால் குறையென்னை
வான்வயிற்றாற் குண்டலமா கேசியித் தறையகத்துப்
பிறப்புரைத்தாற் றத்துவமாக்
கொள்வாமோ.
|
199. |
பின்னசந்
தானமும் பிறிதில்சந் தானமு மின்னவென்
றிரண்டுரைத் தெத்துணையோ பொழுதோதிச் சொன்னதன்
பொருளெல்லாஞ் சுவடின்றி யறக்கெடுதற் கன்னதே
யெனிலாத னாழிநாட் டாகாதோ.
|
200. |
எண்ணிலாப்
பலகந்த மிடையறா வென்றுரைப்பிற் கண்ணுறா
தொன்றுதலாற் கலப்பிலவா மாகவே திண்ணிதா
மிடையறவு தீண்டுமேற் றிரண்டொன்றா அண்ணறான்
முடிந்தறக்கே டரியதே போலுமால்.
|
201 |
வாசனையி னாமெனினும் வழியதனின்
முதலதொன் றாசனைத்து மில்லையே லறிந்துரைப்பு
மரிதரோ பேசினைநீ உளதெனினும் பெருந்தாமத்
துண்ணூல்போல் லோசனையி னெடியதோ ருயிருரைத்தா
யாகாயோ.
|
202. |
பாதிரிப்பூப் புத்தோடு
பாழ்ப்பினுந்தான்
பல்வழியும் தாதுரித்தாங் கேடின்மை யென்பதுநுன்
றத்துவமோ போதுரைத்த வோடுநீர் போலுடம்பு
பொன்றிடினும் மூதுரைத்த வாசம்போன் முடிவுயிர்க்கே
யாகாதோ.
|
203. |
சத்திதான் சென்றதே யென்றியே
லைந்தன்றிப் பொத்திநீ யுரைக்கின்ற பொருளோடா
றாகாவோ சத்திதா னதுவன்றி யைந்துமே யாயினும் பித்தியாய் முழுக்கேடு பேசினா
யாகாயோ.
|
204. |
அலைபலவே
யுரைத்தாளென் றருகிருந்தோர் கருதுதலுந் தலைவனூல்
பொருணிகழ்ச்சி தங்கண்மேற் குற்றங்க ணிலைபெற
வுரைத்தின்மை நிறுத்துவன்யா னென்றுதன் தலைவனீ
பொருள்களே தானாட்ட லுறவினால்.
புத்தனின் வள்ளன்மை |
205. |
கண்கொடுத்தான்
றடிகொடுத்தான் கயப்புலிக்குத்
தற்கொடுத்தான் பெண்கொடுத்தா னுடம்பினையும்
பிளந்திட்டுப் பிறர்க்கீந்தான் மண்கொடுத்தான்
மகக்கொடுத்தான் மன்னுந்தற்
சேர்ந்தார்க்கு விண்கொடுத்தா னவன்கொடுத்த
விரித்துரைப்பன் கேளென்றாள்.
வேறு |
206. |
ஏதி லாரிடர் தீர்க்கு
மெமவிறை சாத கம்மிவை யென்று தலைத்தலை யோகி னாணின் றொருபக
லெல்லையுங் கோதை வார்குழற் குண்டல கேசியே.
|
207. |
நூலு நாரு மிசைத்தன
வொத்தலா னீல கேசி நெடுங்க ணாள்சொல்லு மாலும் பேயு முடையவர்
செய்கையே போலு நீ சொன்ன புத்தர் சரிதையே.
இதுவுமது |
208. |
போழுங் கண்ணுந் தலையுந்
தடிகளுந் தாழ மின்றி யிவைதம்மி னோவென வாழு மாந்த ருழைவரு வாரில்லை கூழன்
றன்னுழை யேகொளச் செல்பவோ.
|
209. |
பிளத்த லுள்ளிட்ட வாய்ச்செல்
வதிந்திர னளத்தற் கேலவன் றானறி யும்பிற னுளத்தை யோரல னேலவன்
றேவனாக் கிளத்த றானோர் கிழமையும் போலுமே.
|
210. |
யாவ னாயினு மன்னவ
னின்மையிற் றேவ னென்று தெளியுந் தெளிந்தபின் சாவ னென்பதோர் சங்கையு
மின்றியே யீவ னென்பதோ ரிச்சையுந் தோன்றுமே.
|
211. |
உறுதி யல்ல
துணர்வுடையான்றனக் கிறுதி யேலென்று மிந்திர னெண்ணலன் மறுதி யின்மையின்
மாணிழை நீயெங்குப் பெறுதி முன்னொடு பின்னியை யாதவே.
|
212. |
ஆத னாற்குறந் தாங்கெழு
வான்றும்ம வேத மில்சுமை யேற்றெரு தாமென்றான் சாத கம்மிவற் றானருள்
சாதிப்பா னோதி னார்க்கு முணர்வொருப் பாயதே.
இதுவுமது |
213. |
எருது பாலின்மை யெண்ணலன்
றும்மலே கருது மாதனுங் கண்முத லாயின தருத லல்லது தங்குறை யீதனொர் மருதின்
வாழ்பகை யானவிம் மாந்தரே.
|
214. |
பாக மேபிளந் தாற்பர
காயமொன் றாகு மேயென வீவஃ தாதன்மை காக மேயுண்ணுங் கண்ணுமற் றன்னதே யேக
மெய்யும்விண் டாலியை யார்களே.
|
215. |
உள்ளந் தானிரு பாகினு
முண்மையாற் கொள்கின் றானிவ னேகொல்லு வான்றனை யெள்ளி நேரு மறிவில்லை
யேற்பிணங் கொள்ளென் றீர்ந்து கொடுப்பினுங் கூடுமே.
இதுவுமது |
216. |
கூறு கூறுசெய் தாலுடம்
புள்ளுயிர் வேறு வேறு செலல்வெளி றாக்கொளாய் பாறு வாயுரைக் கும்பர
மாத்தங்க டேறு வாருள ரோதெருண் டார்களே.
இதுவுமது |
217. |
புத்த னார்வண்ணங் கண்ட
புனையிழை சித்த னேயென்னைச் சேர்மின் மென்றலி னத்த கன்னருள் செய்கல
னாய்விடின் மத்த கம்பிளந் தானென்றன் மாயமே.
|
218. |
ஆவ தின்மை யறிந்து
மவத்தமே சாவ தேயுங்கள் சத்துவர் சால்பெனிற் காவல் பூண்ட கணவனோ
டீமத்தின் வேம வட்கும் வழுக்குண மாங்கொலோ.
|
219. |
சாந்தி யாகத் தரும முரைப்புழிக்
காந்தி பாலியைக் கண்டு கலக்கன்றா னேந்தி வெம்படை யாலெறிந்
தாற்கிடம் போந்து கொண்டதும் பொய்யினுட்
பொய்யன்றோ.
|
220. |
யானை யுள்ளர செங்குள
தங்கெலாம் வான நின்று வழிபடல் காண்டுமான் மீனு மல்லவும் வேதனை
யெய்துழித் தான தாதற்றா தாகதர் தன்மையோ.
|
221. |
குரங்கு மாயவை கொல்லிய
செல்வழி யிரங்கி யேயுயக் கொண்டது மென்றியாற் குரங்கு நேர்குதி யாக்குரங்
கெங்குள மரங்கள் பாய்ந்திடு மாண்பின வல்லவோ.
(இதுவுமது) |
222. |
சீல நல்லவர் நீள்குவர்
சேணெனிற் கோல மில்குரங் காட்டிக் கொல் வார்களைக் காலுங் கையு மெழற்கெனக்
காண்கிலான் வாலை நீட்டிக் கிடத்தறன் மாட்சியோ.
|
223. |
தாய்க்கொன் றான்றங்கு செங்குரு
திப்புனல் பேய்க்கொன் றீதல் பெருங்கொடை யென்பதை வாய்க்கின் றாயினி
மானுயர் மாசெலா நாய்க்கென் றாலிது நல்லற மாங்கொலோ.
அரசன்
கூற்று |
224. |
யான்செ யும்பொரு ளென்றங்கொ
ரேகாந்தன் தான்செய் திட்டனன் சாதக கற்பங்கள் மான்செய் நோக்கி
மதிப்பொழி நீயெனக் கோன்சொ னானிது குண்டல கேசிக்கே.
அரசன் அவையோர்க்குக்
கூறுதல்
வேறு |
225. |
முயலுரை யிதுவென மூடிக்
கொண்டிருந் தயலவர்க் குரைப்பவ ராத ரல்லரோ புயலிருங் கூந்தலி பொருந்தச்
சொல்லினாள் வியலவ ருரையொடு விரோத மில்லையே. அவையோர் வழிமொழிதலும்,
அரசன்
ஆணையும்
|
226. |
அரசிறை யிதுசொல வவையி
னார்களு முரைசெறி வுடையன உரைத்த நீர்மையண் முரைசொடு நெடுங்கொடி முழங்க
நாட்டுக விரைவொடு படுகென வேந்த னேயினான்.
நீலகேசி குண்டலகேசியை
வினவுதல்
வேறு |
227. |
இருப்பதென் னினியன்னா யிதுநுமக்
குரைத்தார்யார் சுருக்கினைக் கடிதாகச் சொல்லெனக்
கெனலோடும் திருக்கிளர் மதிலுஞ்சைத் தென்றிசை
யகனகரு ளருக்கசந் திரனென்னு மவாச்சிய
னெனச்சொன்னாள்.
குண்டலகேசியை அலக்கழித்து
வெளியேற்றுதல் வேறு |
228. |
கட்டுரை பலசொல்லிக் காவல்
நெடுங்கடை
நாவலைமுன் னட்டிவ ணகரிடை நகைசெய்து புகுந்தவிந்
நன்னுதலை வட்டிகொள் பறைகொட்டி வழுவுரை
பலசொல்லி வாரலென்று பெட்டன பலசெய்து பெருநகர் வாயிலைப்
புறப்படுத்தார்.
அரசன்
நீலகேசியைப் பாராட்டுதல் |
229. |
புனத்திடை நறுமலர்ப்
பூங்கொடி யன்னதோர் பொற்பினளாய் எனைப்பல நூல்களு
மியல்பினி னறிபவ ளேதமில்லாள் தனக்கினி யான்செயற்
பாலது தானென்னை யெனவுரைத்தான் இனத்தகை யேற்றரி
யிடியுரு மேறெனு மிவற்றை யொப்பான்.
நீலகேசி கூற்று |
230. |
ஆண்டகை அரசிறை
அதுசொல்லக் கேட்டவவ் வறத்தகையா டீண்டல னணிபிற
புனைவெனு நினைவிலன் றினையனைத்தும் வேண்டல னிலனொடு
விழுநிதி யினையவும் விறற்றகையா யீண்டினி யறநெறி
யுறுகென வேந்திழை யியம்பினளே.
இதுவுமது |
231. |
வந்தது மிதுபொருண்
மன்னவ யானென நன்னுதலா ளிந்திர னனையநின்
னிறைமையி னறநெறி யிகழலென்றாங் கந்தர நெறிசெலற்
காயிழை யரசனை விடுத்தருக்க சந்திர னிருந்தவத்
திசைமுன்னித் தளிரிய
றானெழுந்தாள். |