|
3. அருக்கசந்திர
வாதச் சருக்கம்
|
232. |
உஞ்சை மாநக ரெய்தின ளாயத னிஞ்சி
மாட்சியு மெல்லையில் செம்மலு மஞ்சு தோய்நெடு மாடமும் வீதியு மஞ்சி
லோதி யவையவை கண்டபின்.
அருக்கசந்திரன் மாண்பு |
233. |
பருக்கை மால்களி யானைப்பல் வேந்தரு
மிருக்க போதக வென்னும் பெருமையான் றருக்க நீட்டமுந் தன்னிக ரில்லவ
னருக்க சந்திர னென்னு மவாச்சியன்.
இதுவுமது |
234. |
போதி சத்துவர் புத்த ரெனப்படு நீதி
யிற்பெரி யாரன நீர்மையா னோதி நூன்மும்மை யொப்ப வுணர்ந்தவன் வாதி
கட்கோர் வயப்புலி யேறனான்.
இதுவுமது |
235. |
மாடமோங்கி மழைநுழைந் தின்குயில் பாடு
பூம்பொழிற் பாங்கரோர் பள்ளியுட் பீட மேறிப் பெருந்தகை யார்க்கெலாம்
வீடு பேறும் வினையு முரைப்புழி.
நீலகேசியின் செயல் |
236. |
சென்று தானெய்திச் சிற்பிடத் தாற்புக்குத்
துன்று நீண்மணித் தூணணிந் தெண்ணென நின்று நீலவைம் பாற்பெய ராளுமங்
கொன்று பல்வகை யோத்துரை கேட்டனள்.
|
237. |
கொள்ளு மாறுந்தன் கோரகை யுட்கஞ்சி
மொள்ளு மாறு முதுகு நெளித்துண்டு னள்ளு மாறு மணலெடுத் திட்டவை மெள்ள
மெள்ள விழுங்கு மவைகளும்.
இதுவுமது |
238. |
வழிக்கு மாறுந்தம் மண்டையி னுண்டுமன்
ஒழிக்கு மாறுமஃ தூட்டு மவைகளும் மழிக்கு மாறுந் தலைகளை மையிட்டு
விழிக்கு மாறும் வினைய விதியினால்.
நீலகேசி
பொதுவின் வினவுதல் |
239. |
இனைய வேசொல்லி யிட்ட தலையராய் வினைய
நூலை வியப்பெய்து வார்க்கெலா மனைய தேநு மறநெறி யென்றனள் முனைவன்
றன்னெறி முன்ன முணர்ந்தவள்.
அருக்கசந்திரன் கூற்று |
240. |
அவ்வு ரையம ரானுய ராசனச் செவ்வ
ரைம்மிசைத் தீத்திரள் போல்பவ னிவ்வு ரையிவ ணென்னெனச் சொல்லினான்
றெவ்வ ரைத்திறல் வாட்டிய திண்மையான்.
நீலகேசி
கூற்று |
241. |
வீரஞ் செய்து விழியல் வினையநூல் பேர
தஃதேல் பெரிது மழகிதே யோரு மஃதோ ருறுவினை யென்பதைத் தேரச் சொல்லுநின்
றிண்பொரு ளென்றனள்.
|
242. |
வினைய தாகிய பெற்றி விரித்துநீ தினையி
னேரும் தெருட்டெனக் கென்னவே அனைய வவ்விர தத்தோ டறிசல மினைய கேளென்
றெடுத்தன சொல்லுமே.
நீலகேசி அவன்
கூறியவற்றிற்குக்
குற்றங்காட்டுதல் |
243. |
தன்னை யீந்ததும் தாரங்க ளீந்தது மன்ன
தன்பொருள் கேட்டறங் கொண்டவன் மன்னு மில்லயன் மாந்தரைக் காணுமேற்
பின்னைச் செய்வன பேசலு மாகுமோ.
இதுவுமது |
244. |
காம மூரிற் கணிகைய ரோடன்ன தூய்மை
யுண்மையிற் றோற்றங் கரந்தவட் சேம மாவகைச் செல்கமற் றென்பதும் வாம
நூலின் மறைபொரு ளல்லவோ.
இதுவுமது |
245. |
சிங்க தத்த ரெனப்படுந் தேரனார் சங்க
போதியி லாள்கட் டயாச்செய விங்கி தென்னென வேழாய் தவசிகட் கெங்கெங் காமி
லெனவுரைத் தானரோ.
இதுவுமது |
246. |
யாது மில்லை யுயிரென் றறநெறி யோதி
னானவ் வுயிரிலி தன்னொடு வேத னைதணிப் பான்வினை வீட்டிற்கும் சாத
னைநிற்குஞ் சத்துவ னாமென்றீர்.
|
247. |
சித்த மோடிக் கலங்கித் திரியாத நத்தம்
பெற்றது நற்றவ மேற்கொண்டான் பத்தின் மேலும் பழிசெய்யு மேற்பள்ளி
வத்தன கண்டீர் வழக்கின்கட் கூரியீர்.
இதுவுமது |
248. |
போதி யாருரு வெய்திய புற்கலர் வேதி
யாற்கிடந் தாருள ராயினான் ஞாதி யாரென நாட்டிய கூட்டமும் ஓதி
வைத்ததொன் றுண்மை யுணர்த்துமால்.
|
249. |
ஆரம் பிச்சி யிலிவிலங் கவ்வுருச்
சீரிற் கொத்தாள் கணிகை தெருண்டாள்பெண் ஓரு மில்லா ளுயிரிலி யூமையுந்
தார மாக்கொஃடி ரென்றல் சலமதோ.
|
250. |
பிறந்த வில்லினுள் வாழ்க்கை பிழைப்பெனு
மறங்கொண் டான்கொண் டவாச்சிய
வேடத்தாற்
சிறந்த வல்லன சிங்கின வெங்கணுந் துறந்த வான்பொருள் சொல்லவும்
வல்லையோ.
நீலகேசி புத்தசமயத்தாரொழுக்கத்தைப்
பழித்தல் |
251. |
உரைப்ப பேரரு ளுண்பன மீனொடூன் றிரைப்ப
மெல்லணை செய்வ விழுத்தவம் கரைப்ப தீவினை கண்டது சூனியம் புரைப்பின்
மார்க்கம் பொருத்த முடைத்தரோ.
வேறு |
252. |
எல்லா மசுசியு மென்ப வனவா லல்லா
லழுக்குற் றவனடிக் கேத்தலர் சொல்லார் சுகமுஞ் சுகத னவனென்று பல்லார்
வருத்தம் பழுதனெப் பண்ணுப.
இதுவுமது |
253. |
நிலையா வெனச்சொல்லி நேர்ப பொருடூய
மலையோ ரனைய மாட மெடுப்ப விலையே யுயிரென் றிறந்த நினைப புலைசே
யமர்ந்தவர் புத்தியின் வண்ணமே.
இதுவுமது |
254. |
மயித்திரம் பாவித்து மற்றவற் றூனை
யசிப்பன வேபோ லமர்ந்திருந் துண்ணுஞ் சயித்தியங் காணிற் றலையினை முட்டும்
பயித்தியங் கொண்டவர் பண்புமஃ தொக்கும்.
இதுவுமது |
255. |
புத்த ருருவுக்கும் போலிக்கும் போலியை
மத்தகத் தேத்தி வணங்கி வழிபடும் செத்த பொழுதினச் செந்தடி மென்றிடு
மத்த னுடைய வருள்வகை வண்ணம்.
பௌத்தத் துறவிகளின் துன்பநிலை
வேறு |
256. |
பேனறாக் கூறை பெருமுடுகு நாறுமேற்
றுக்கந் துக்கம் மானறா நோக்கி மணற்சுமையுந் தான்பெரிதாற்
றுக்கந் துக்கந் கூனிறாக் கண்டாலுங் கொள்ள முடியாதேற்
றுக்கந் துக்கந்
தானறாப் பஃறெழிலுந் தான்றுக்க மாதலாற்
சருவ்வந் துக்கம்.
வேறு |
257. |
பொய்பொத்திச் சொல்லினவும்
போங்கூலி கொண்டனவும் வையத்தஞ் சுட்டனவும் வாழ்மருது
கொன்றனவும்
கையத்தி னூனுக்கே கன்றிக் கலாய்த்தனவு
மையத்தை யின்றியடுப வாலோ
வழல்நரகத் துள்ளே யடுப வாலோ.
|
258. |
பற்றே மிகப்பெருக்கிப் பஃறொடர்ப்பா
டேயாக்கி
யற்றீர்போற் காட்டி யடைக்கலமே
வவ்வுநீர்
பெற்றீரே பேயுடம் பன்றேற்
பெரும்பாலு
மெற்றே யிருணரகிற் கீர்க்கு மாலோ விரக்கமொன் றில்லீரை யீர்க்கு மாலோ.
அருக்கசந்திரன் கூற்று
வேறு |
259. |
ஆங்கவ ளறங்கூறக் கேட்ட
வவாச்சியன்றான் றேங்கம ழொலிகோதாய் சித்தமே
யல்லதில்லை
தீங்கொழுக் கென்றதெல்லாந் தீவினையென்
னல்வேண்டார் பூங்கமழ் காராடை போர்த்தவெம்
புத்தரென்றான்.
நீலகேசி
கூற்று |
260. |
துத்தலே வேண்டிநின்று
தோந்தொடர்ப்
பாடுநீக்காய் சித்தமே நல்லதென்றாற் றேற்றலு
மாவதுண்டோ கத்திகொண்டில் லில்வாழ்பேய் காறலை
வேறுசெய்து
குத்துவதின் னும்போழ்திற் கூடுமோநன்
மையேடா.
இதுவுமது |
261. |
உள்ளமும் பாயிரம்மு மொக்குமேல்
வீடுமுண்டாம்
கொள்ளுமேற் குற்றமஃதாக் கூடுமே
பற்றுமாங்கண்
விள்ளுமேல் வேறதாய வேடமு
மன்னதேயாங்
கள்ளமே சொல்லிநின்று கன்றினாற்
காட்டலாமோ.
இதுவுமது |
262. |
புனைந்துநீ சொல்லும் வீடும்
போகவுண் டாக தந்தே நினைந்துநாங் காணி
னெல்லா நின்றதொன் றில்லை யென்றாற்
றுனைந்துதா னுண்மை நன்று சூனிய மாதற்
கென்றாட்
கினைந்தினைந் தேங்கி நல்லா யென்செயற்
பால தென்றான்.
நீலகேசி
அருக்கசந்திரன் வருத்தம்
போக்கல் |
263. |
செத்தவ ரப்பொழுதே தேவருட்
செல்பவேனு
மத்தலை யின்பநோக்கா ரஞ்சுவ
மாக்களந்தோ
தொத்துள வாகவென்னான் சூனிய
வீடுசொன்ன
புத்தனை நோதுமத்த புலம்பனீ
போகவென்றாள்.
இதுவுமது |
264. |
புன்னெறி யவைகளெல்லாம் போக்கிய
பாக்கியத்தாய் நன்னெறி நன்ஞானங் காட்சியு
நன்குகொண்டென்
சொன்னெறி திரிவாயேற் சோர்வில்பே
ரின்பமெய்தி மன்னுதி யென்றுமற்றுங் கூறினாண்
மாதராளே.
அருக்கசந்திரனின்
ஆக்கநிலை |
265. |
காட்டுழல் களிநல் யானை கால்கையி
னோர்ப்பித் தேறித் தோட்டியிட் டூர்வ தேபோற் சூரிய
சோமன் றானும்
வாட்டடங் கண்ணி நல்லாள் வாக்கெனுந்
தூக்க யிற்றாற் பூட்டுபு கொள்ளப் பட்டான் போதியார்க்
காதி யன்னான்.
வேறு |
266. |
அருக்கமா சந்திரனை யறங்கொளீஇ
யாங்கவனை யிருக்கும்வா யொருப்படுத்திங் கீதுநுனக்
குரைத்தாரைப்
பொருக்கநீ சொல்லென்னப் புத்தனார்
முதன்மாணி முருக்குவாய்சென் றவனாம் மொக்கல
னெனச்சொன்னான்.
|