4. மொக்கல வாதச் சருக்கம்
|
267. |
மொக்கலன் பள்ளி வருணனை நீவருத லொழியென்று நிறைபதும
புரத்துக்கே மாதிரந்தா னெறியாக
மனம்போலச் சென்றெய்தி மூதுரையுங்
காரணமு முழுதெழுதி யழகிதாய்ப்
போதுகளும் பொன்மணலும் புனைந்தினிய
பொலிவிற்றாய்.
இதுவுமது |
268. |
கொடிமகரக் கோபுரமு நெடுமதிலுங்
குடிஞைகளும் தொடிமகரத் தூணிரையுஞ் சொலற்கரிதாய்ச்
சுவர்க்கத்தின் படிமகரப் படிமையதப் பள்ளிகண்
டளியள்போய்க்
கடிமகரக் கடல்கடந்து கலந்தந்த
நலமென்றாள்.
இதுவுமது |
269. |
ஒழுக்கமுங் கல்விகளு முரைத்தனவே
யொப்பனகள் இழுக்கில்லாப் பெருந்தவத்தி லிங்கிகளைத்
தான்கண்டு
முழுத்தாள தாய்ப்பள்ளி முற்றத்தோ
ரரைமரத்தின் குழுக்கொம்பர் பிடித்தொருகாற் குஞ்சித்து
நின்றுதான்.
நீலகேசி ஒருதுறவியை
வினவுதல் |
270. |
துன்னஞ்செய் தாடையைத்
துவர்தோய்த்துக்
கொட்டியும் பொன்னஞ்செய் பத்தங்கப் புகையூட்டிக்
கைசெய்து தன்னமு மளித்தாய தலைசொறியு
மிடையிலையா லென்னவற்றி னாம்பயனை யெனக்கறிய
வுரையென்றாள்.
நீலகேசி மொக்கலனை வினவுதல் |
271. |
ஆங்கவ ளதுவுரைப்ப வதற்குரிய
மறுமாற்றந் தாங்களு முரைக்கில்லார் தலைசாய்த்தங்
கிருந்தார்
மூங்கைமையான் மொழிகொண்டேன் மொக்கலநற்
றேரயான் பாங்கினால் வினவுவன் படிறின்றி
யுரையென்றாள்.
இதுவுமது |
272. |
வீடிற்கே யெனின்ஞானம் வேண்டாதே
முடியுமாற் பீடிற்கே யெனினின்னிற் பெருஞ்செல்வர்
திருந்தினார்
மூடிற்றின் பயனென்னை யெனவினவ
மொக்கலனு மூடிற்றுஞ் சிறிதுளதா
லுருவறிதற் கெனமொழிந்தான்.
நீலகேசி கூற்று |
273. |
படைப்பெளிதாற் கேடரிதாற் பலகள்வர்
நவையாரா லுடைக்கியைந்த வொலியற்றா லூன்றருவார்க்
குணர்த்துமால்
விடக்கமர்ந்த வுள்ளத்தாய் வேடமு
மறிவிக்குந் தொடர்ப்பாடும் பெரிதன்றாற் றொட்டைநீ
பூணியோ.
இதுவுமது |
274. |
பொன்கொண்டா ராயினும் போர்வைபூச்
செனிற்புலையன் வன்கண்மை யாற்செய்த வஞ்சமே
யெனவளைப்பர் தன்றன்மை யாகிய
தான்பழிப்பார் தாமுளரோ வென்கண்டு
வந்திங்க ணிதுகொண்டா
யெனச்சொன்னாள்.
|
275. |
உண்ணன்மை தவமென்றங் குறுப்பெல்லா
மறைக்கின்றாய் திண்ணென்ற மனமிலைநீ சிறைபலவுஞ்
செய்தலால்
பெண்ணென்றும் பிறவென்றுந் தானோக்கிப்
பெரும்பேதாய் கண்ணன்றோ வுள்ளத்தைக் கலக்குவன
வவைகாவாய்.
இதுவுமது |
276. |
பெண்பாலார் கண்டக்காற் பேதுறுவ
ரெனவுரைப்பாய் திண்பான்மை யவர்க்கழியச் சிதையுநின்
றவமாயின்
மண்பாலா ரவருள்ள மாண்புளதா
யுரையாரா லெண்பாலும் படாதாகி
யிழுக்குநின் குணமந்தோ.
இது பௌத்தர் மண்டையின்
பயனின்மை கூறுகின்றது |
277. |
இழுக்கினு மிழத்தியா லிடறினு
மதுவேயால் விழுக்கலமால் வினைபெரிதால் வினைக்கேடாந்
தொழிறருமா
லொழுக்கிற்கு முரித்தன்றூ ணோரிடையூ
றுடன்கொடுக்கும்
வழுக்கின்றித் தவஞ்செய்யின் மண்டையாற்
பயனென்னோ.
|
278. |
சவருடைய மனைவாழ்க்கை யெனப்போந்து
தவம்புரிந்தாய் பவருடைய விறகிறுத்துப் பலகலங்க
ளொருப்படுத்துற்
றுவரோடு பல்கூறை யுடன்புழுக்கி
யொலித்திடு நீ துவரடுதி பூவடுதி
சோறடலே முனிந்தாயோ.
|
279. |
வண்ணாரம் துன்னாரம் மச்சிகமே கச்சாரஞ்
சண்ணார மெனப்பிறவுந் தவத்துள் நீ கற்றனவா லெண்ணார்ந்த காரங்க ளில்லகத்தே
பயின்றாயே லுண்ணாயே வயிறார வோர்ப்பொன்று மிலையேகாண்.
துறவோர்க்கு இன்றியமையாதது
சோறு ஒன்றே எனல் |
280. |
சிறந்தாய்க்கீ துரைக்கலாஞ்
சிந்தனையை
முடிப்பதே துறந்தார்க்குக் கடனாகிற் சோறலாற்
பிறவேண்டா
விறந்தார்க்கு மெதிரார்க்கு மிவட்காலத்
துள்ளார்வான்
பிறந்தார்க்கு மிதுவன்றிப் பிறிதொன்று
சொல்லாயோ.
|
281. |
உண்டியா லுடம்புளதா லுடம்பினா
லுணர்வாமென் றெண்டிசையும் பரந்திசைப்ப வீதுனக்கே
தெரியாதோ
தண்டியாய்க் கழியாது தவஞ்செய்த
லுறுதியேற் பண்டியாற் போக்குநின்
பஃறொடர்ப்பா டெனச்சொன்னாள்.
மொக்கலன் நீலகேசியைச்
சினந்து அவள் சமயத்தை ஆராய்தல் |
282. |
அருளுடையா ளுரைப்பக்கேட்
டாங்காரித
தவனுந்தன் பொருளுடைமைத் தருக்கினும் புன்ஞானக்
களிப்பினு மருளுடையார் மதிப்பினு மாற்றந்தான்
செயற்பொருட்டா
லிருளுடைந்த கூந்தலா ளிட்டத்தை
யெண்ணுவான்.
மொக்கலன் கூற்று |
283. |
தரணென்று நன்றென்றா ளென்றன்மை
யுருவென்றாள் அரணென்னத் தெளிந்ததுதா னாருகத
மேமன்னு முரணின்ற துண்மையான் மொக்கலனு
முனிந்துரைப்பா னிரணியனைப் போல்வந்திங்
கிடர்ப்பட்டா
யென்றானே.
நீலகேசி தன் வெற்றி
விளம்பல் |
284. |
என்னாலும் வெலப்பட்டா ரிருவருள
ரிங்கவரைச் சொன்னாலு மறிதிநீ துடிகடியு
மிடையுடைய கொன்னாணு நெடுவேற்கட் குண்டலமா
கேசியு மன்னாளுக் கறமுரைத்த
வருக்கமா
சந்திரனும்.
மொக்கலன் ஐயுற்று வினாதல் |
285. |
என்றாளை முகநோக்கி யிதுபெரிதும்
பொய்த்தனைநீ யொன்றாத கொள்கையா ருலகினுள
யாவரையும் வென்றாள்மற் றிவள்சம்பு விரதியாய்த்
திரிந்தெங்கும் தன்றாரம் பிறர்க்கீந்தான்
றருமங் கொண்டென்றானாய்.
நீலகேசி கூற்று |
286. |
வேதியரை முதலாக வெலப்பட்டா
ரிவரிவரென் றோதியாங் கவையவைதா மிவையிவையென்
றுரைப்பக்கேட்
டாதிகா லாவணத்து ளார்கதரை
வென்றதனை நீதியா லுரைத்தியே
னின்னையான்
வெல்லேனோ.
மொக்கலன் கூற்று |
287. |
எனக்கேட்டாங் கெடுத்துரைப்பா
னிந்திரர்க டொழப்படுவான் றனக்காய
தர்மமு மதர்மமுங் காலமுங்
கனப்பாட்டிற் காயமே யுயிருருவே
புண்ணியமே நினைக்குங்காற் பாவமே
கட்டுவீ டெனநிறுத்தி.
இதுவுமது |
288. |
இப்பொருட்க ணிகழ்ச்சியு
மிவையிவையா மெனவிரித்துச் செப்பினா
னாதன்றன் சிந்தைக் கெழுந்தவா
றப்பொருளு மந்நிகழ்வு மவையவையா
வறியாதே வப்பிள வனமுலையார்
மணல்விளையாட் டதுவேபோல்.
நீலகேசி கூற்று |
289. |
மொக்கலனு மிதுகூற முல்லைநா
றிருங்குழலா ணக்கனளா யிதுகூறு நாதன
தியல்பறியா யிக்கிரமத் திந்திர னிருடிகளைத்
தேவியரைத் தக்கதாத் தொழுதக்கா
லவர்தலைவ ரெனலாமோ.
இதுவுமது |
290. |
எந்தலைவ ரியல்பொடுநூ லின்னணமென்
றறியாதாய் சிந்தனைக்க ணுயினுந் தீமையு
முரைத்திலையாற்
றந்துரைத்த தலைவனூற் றத்துவமா
மாகவே முந்துரைத்த பொருணிகழ்வு
பிழைப்பின்மை முடியாவோ.
இதுவுமது |
291. |
அத்தியைந் தெனினல்ல வறுபொருளு
மவையாகா வுத்தியா வெடுத்தோது மொன்பதனோ
டொட்டலவாற் குத்திய பல்குறையே யன்றியுமிப்
பொருளெல்லாம் பொத்தியுங் காட்டுவாய்
பொருளியைவோ பெரிதென்றாள்.
|
292. |
சலம்படவே யுரைத்தனைநீ தருமத்திற்
செல்லுதுமென் றிலம்படுமே லியக்கில்லை யென்பதெம்
முரையென்போம்
கலஞ்செல்லுங் கடலதனைக் காற்றேபோ
லுந்தாதாம் பலம்படு முரைநினக்குப் பாம்புண்ட
பாலேபோல்.
இதுவுமது |
293. |
அல்லதற்கு மப்படியே யாமென்ற
லதுகொள்ளாய் செல்லவுஞ் செலுத்தவு நில்லவு
நிறுத்தவுஞ்
சொல்லியவாய் தேய்க்குறுவாய் சொல்லிக்கொள்
வலியதனால் பல்லொடும் படத்தேய்த்தாற் பயம்பெரிதும்
படுமன்றோ.
இதுவுமது |
294. |
கடனிலமா காயமே யமையாவோ
விவையிரண்டு முடனில்லை யாயினு மூனமிங்
கெவனென்பாய் மடனுடையை நீபெரிது மன்னுயிர்க்கும்
புற்கலக்கு மிடனெல்லா வுலகி
னெல்லையும் புறப்படுமோ.
|
295. |
பலசொல்லிக் குறையென்னைப் பஞ்சமா
கந்தமே யலகில்லாப் பெரும்பரப்பி னாகாய
நினக்கில்லை
நிலைசெலவிற் கிவை வேண்டா நின்பொருளு
மிவையல்லா வுலகெல்லை யுரைப்பான்புக் குணர்வினையே
வருத்துதியால்.
|
296. |
காலநீ வெண்டாயாய்க் கணிகமுங்
கற்பமும் சாலமும் புனைந்துரைத்தி சமழ்ப்பென்னு
மிலையாகிப்
பாலமா பண்டிதனே பழநோன்பி
யிவனென்பாய் மாலுமிங் குடையையோ
மயக்குவதொன் றுண்டனையோ.
இதுவுமது |
297. |
இக்கோட்க ளெழனோக்கி யிவையிவையே
யாமென்றா லக்கோட்க ளெழனோக்கி யவையவையாக்
கண்டிருந் தெக்கோளு மில்லென்பா யாண்டெண்ணி
யேத்துதியான் மெய்க்கோளா லென்றியான்
மிகைதெருட்டுந் திறங்காணேன்.
இதுவுமது |
298. |
கருத்தினாற் பெற்றாமோ கண்கூடாக்
கண்டோமோ பொருத்தனையென் றுரைக்கின்றா யுறுநோயைத்
தீர்ப்பதோர்
மருத்துநூ லில்லையான் மயங்கியே
சொல்லாது திருத்தியநின் னுணர்வின்மை தெருட்டிக்கா
ணெனச் சொன்னாள்.
|
299. |
பொறியுணர்வின் புலமாய புற்கலமே
யுயிரறியு மறிவினா லறியாதே யாமாகா
தனெவுரைப்பாய் நெறியென்னை யிந்திரன்றன் நெடுநகரக்
கவன்றேவி குறியேளா நெடியேளா
நூலொழிப்பாய் கூறிக்காண்.
|
300. |
மெய்யளவிற் றுயிரென்று மெய்யகத்
தடக்குரைத்தல் பொய்யளவைக் குடங்குடத்திற் புகலருமை
போலென்பாய்
மெய்யளவின் மெய்யுணர்வை மெய்யகத்
தடக்குரைத்தி யையனையே யடங்கானென் றதுவாதன்
வண்ணக்கால்.
இதுவுமது |
301. |
அருவாத லாலடங்கு
முணர்வுதா னங்கென்னிற்
பெருவாத மங்கில்லை பெற்றியொன்
றறியாத திருவாள னுரைவண்ணந் தீட்டொட்டுக்
கலப்பியாப் புருவாய வுடம்பினோ டுணர்வினுக்
குளதாமோ.
|
302. |
யாப்புண்டா லுழப்பதவ்
வுயிரென்றேற் கதுவன்று போய்ப்பிண்டத்
துழப்புழப்பப் புலம்புவ
தென்செயலென்பா யேப்புண்பட் டான்படநோ யேதிலர்க்காய்ச்
சோமாகிச்
சாப்புண்பட் டேனென்று சாற்றுவதுன்
றத்துவமோ.
இதுவுமது |
303. |
உழப்புழப்பச் செய்கையா
னுறுதுயருற் றேனென்றல்
பிழைப்பதுவாக் கருதாதே பெருவழியு
ளிடறுதியா லுழப்பறிவு குறிசெய்கை யொருவனவே
யெனச்சொன்னார்க்
கிழிக்குவதிங் கில்லாமை யிதனாலே
யறியென்றாள்.
|
304. |
அருவாயில் யாப்பில்லை யன்றாயிற்
குறைபடூஉ மிருவாறின் கூட்டமுந் தீதென்ப
தெம்மிடமே மருவாதா யுரைத்ததனை மனங்கொள்ளா
யதுவன்றிப் பொருவாறொன் றுரைத்தாலு
மொ ருவாறு
முணராயால்.
|
305. |
அறிவெழுந் தவலிக்கு மென்பதூஉ
மதுவெழப் பிறிதொன்று பேதுறுமங் கென்பதூஉம் பெரும்பேதாய்
குறிகொண்டா ருரையன்றாற் குற்றமே கொளலுறுவாய் பொறிகொண்டு
காற்றினையும் போகாமற் சிமிழாயோ.
|
306. |
பிறன்சுமவான் றானடவான் பெருவினையு
முய்க்கில்லா வறஞ்செய்தா னமருலகிற் செல்லும்வா
யரிதென்று
புறம்புறம்பே சொல்லியெம் பொருணிகழ்ச்சி
யறியாயாற் கறங்குகளு மல்லனவுங் காற்றெறியத்
திரியாவோ.
|
307. |
மகனேயாய்ப் பிறப்பினு மாதுயரங் கேடில்லை
யவனாகா னாயினு மறஞ் செய்த லவமாகு மெவனாகு மென்றெம திட்டமே யுரைத்தியா
னகைநாணி நீநின்னை நன்பகலே மறைக்கின்றாய்.
|
308. |
வீயுடம்பிட் டுயிர்சென்று
வினையுடம்பு
முளதாகத் தாயுடம்பி னகத்துடம்பு தான்வைத்த
தின்றியே நீயுடம்பு பெற்றவா றுரையென்பாய்
நிழல்போலும் பேயுடம்பு பிறிதுடம்பிற் புகல்பேதாய்
காணாயோ.
இதுவுமது |
309. |
எப்பொருளு மொன்றொன்றிற்
கிடங்கொடுத்த விரும்புண்ணீர்
புக்கிடங்கொண் டடங்குதலே போலவும்
தந்தைதாய் சுக்கிலமுஞ் சோணிதமுந் தழீஇச்சுதையு
ணெய்யனைத்தா
யொத்துடம்பி னகத்தடங்கி யுடன்பெருகு
மெனவுரைத்தாள்.
|
310. |
செய்வினைதா னிற்பவே பயனெய்து மென்பதூஉ
மவ்வினை யறக்கெட்டா லதுவுளையு மென்பதூஉ மிவ்விரண்டும் வேண்டுத
லெமக்கில்லை யெடுத்துரைப்பி னைவினையி னிலைதோற்ற நாசந்தா னாட்டுங்கால்.
இதுவுமது |
311. |
பைம்பொன்செய் குடமழித்துப்
பன்மணிசேர் முடிசெய்தாற் செம்பொன்னா
னிலையுதலுஞ் சிதைவாக்க மவைபெறலு
நம்பொன்றிங் கிவைபோல நரர்தேவ
ருயிர்களையும்
வம்பென்று கருதனீ வைகலும்யா
முரையாமோ.
இதுவுமது |
312. |
பெரும்பாவ மறத்துய்த்துப்
பெறுதும்யாம் வீடென்னோ மரும்பாவ
காரிநீ யாவர்வா யதுகேட்டாய்
வரும்பாவ மெதிர்காத்து மன்னுந்தம்
பழவினையு மொருங்காக வுதிர்த்தக்கா லுயிர்த்தூய்மை
வீடென்றாள்.
வேறு |
313. |
சொன்ன சூனைத் துறந்தவற் றட்டன பின்னை
யுண்டல் பிழைப்புடைத் தென்றியா னன்னு தல்லைத் துறந்தவ ளட்டது தன்னை
யுண்டுந் தவசியை யல்லையோ.
|
314. |
கொன்ற பாவங் கெடுகெனக் கையிட்டு நின்ற
தென்பது நீயுரைப் பாயெனி னன்று துன்னின் தாதன்மை யாற்சொன்னாய்
சென்றும் வந்துந் தியானம் புகலென்றாள்.
|
315. |
இன்ப துன்ப மிருவினைக் காரிய மென்ப
வர்க்கென்னை யேதமுண் டென்றியேற் பின்பு பேணுந் தவத்தினி னாகிய துன்ப
வர்க்குந் துதாங்கனத் தொன்றுமே.
|
316. |
செய்த தீவினை சென்றின்ப மாக்குமென
றிஃது ரைப்பவ ரீங்கில்லை யாயினும் பொய்கள் சொல்லிப் புலைமக னேயெம்மை
வைதல் காரண மாநின்று வைதியோ.
|
317. |
இந்திரி யங்களை வென்றற் பொருட்டென
வந்து டம்பு வருத்தல் பழுதென்பாய் தந்து ரைத்த தலைமழி யாதிய சிந்த
னைக்கிவை செய்வதெ னோசொல்லாய்.
|
318. |
புனைவு வேண்டலர் போக நுகர்விலர்
நினைவிற் கேயிடை கோளென நேர்தலா லினைய வும்மல மேறினு மென்செய அனைய
தான்மாக்கள் யாக்கையின் வண்ணமே.
|
319. |
பாவந் துய்த்துமென் றோமல்ல துய்ப்பினு
மாவ தின்மைக் கரசுரைத் தாயன்றோ வோவ லின்பந் தருமெ னுயிரென்பாய் தேவ
னாகித் திரிந்துதான் காட்டிக்காண்.
|
320. |
அழிவு காலத் தறத்தொடர்ப் பாடெலா
மொழியல் வேண்டுமென் றொற்றுமை தாங்கொளீஇ வழியுங் காட்டுமம் மாண்புடை
யார்கண்மேற் பழியிங் கிட்டுரைத் தாற்பய னென்னையோ.
இதுவுமது |
321. |
சிந்த னையினுந் தீவினை யாமென்பார்க்
கந்திற் காம மமையுமென் றீரென்பாய் சுந்த மாகச் சுவடறு வீரென வந்தி
தோறும் புடைக்க வமையுமோ.
இதுவுமது |
322. |
பெண்ம கள்ளிர் பிறகிட வுண்பவர் கண்ணி
னாலில்லுட் கந்தியைக் காணினு முண்ண லம்மெனும் மோத்துடை யார்களைத்
திண்ண தாவைது தீவினை கோடியோ.
|
323. |
பிள்ளை பெண்ணலி யாயினும் மாண்வயிற்
றுள்ள தேயென் றொழுக்கங் கொடுத்தியாற் பிள்ளை பெண்ணலி யன்மையை யாதினா
லுள்ளங் கொண்டிழ வூசி யுரைப்பதே.
|
324. |
மோனம் பொய்யஞ்சிக் கொண்டவன் மெய்யுரைக்
கூனந் தோன்றி லுரைத்தன னென்றியேற் றானம் யாவர்க்குஞ் செய்வது நன்றனென்பா
யீன மென்னோ தெருச்சுமக் கிற்றியோ.
இதுவுமது |
325. |
உய்யக் கொள்வ னெனச் சொல்லி யுள்ளத்தாற்
கையிற் காட்டல் கரவுள தாமெனிற் பொய்சி தைத்ததென் சொல்லிப் பெயர்ந்துரை
பொய்யு ரைத்தில னென்றல் பொருந்துமோ.
வேறு |
326. |
கொல்வினை யஞ்சிப் புலால்குற்ற மென்பதை
நல்வினை யேயென நாட்டலு மாமென்னை வில்லினை யேற்றிநும் மெய்ம்மை கொளீஇயது
சொல்லினை யாதலிற் சொல்லுவன் யானே.
இதுவுமது |
327. |
புத்தர்கட் பத்தியிற் போதி மரந்தொழிற்
புத்தர்கட் பத்தரை யேதொழு புத்தர்கட் பத்தியை யாக்கு மதுவெனிற் (பற்றிய)
பத்தங் குடைசெருப் புந்தொழு பாவீ.
இதுவுமது |
328. |
ஆங்கவர் போல வருள்செய் பவர்களை
நீங்குமி னென்பது நீர்மை யெனினது வீங்கிதற் கெய்தா விடினிலை போதிக்கும்
தீங்கே நுமர்செய்கை தேரமற் றென்றாள்.
|
329. |
பல்லுடை யான்றன்னைப் பண்டுகண் டேத்தினுந்
தொல்லுரை கேட்டுறுப் பேதொழு தாலும்பி னல்வினை யாமென்று நாட்டுதி
யாய்விடிற் கொல்வதுந் தின்பதுங் குற்றமற் றென்னாய்.
இதுவுமது |
330. |
ஏத்தின ரேத்துக வென்றிறை போல்வன
பாத்தில பைம்பொற் படிமைசெய் தாலவை யேத்துநர் செய்தவ ரெய்துவ நன்றெனில்
வீத்தவர் தின்பவர் வெவ்வினைப் பட்டார்.
இதுவுமது |
331. |
வெற்றுடம் புண்பதும் வேலின் விளிந்தவை
தெற்றென வுண்பதுந் தீமை தருமென்னை யொற்றைநின் றாடுணை யூறு படுத்தவட்
குற்றமன் றோசென்று கூடுவ தேடா.
|
332. |
பிடிப்பது பீலி பிறவுயி ரோம்பி
முடிப்ப தருளது போன்முடை தின்று கடிப்ப தெலும்பதன் காரண மேனி தடிப்பத
லாலரு டானுனக் குண்டோ.
|
333. |
ஆட்டொரு கான்மயிற் பீலி யுகுமவை
ஈட்டுதல் போலுதிர்ந் துக்க விறைச்சியைக் காட்டியுந் தின்னுங் கருத்திலை
நீ தசை வேட்டுநின் றேயழைத் தீவினை யாளோ.
|
334. |
மானொடு மீனில மன்னு முடம்பட லூனடு
வாரிடு வாரை யொளித்தலிற் றானடை யாவினை யாமென்ற றத்துவந் தீனிடை
நீபட்ட தீச்செய்கை யென்னோ.
|
335. |
குறிக்கப் படாமையிற் கொல்வினை கூடான்
பறித்துத் தின்பானெனிற் பாவமாம் பூப்போற் செறிக்கப் படுமுயிர் தீவினை
பின்னு நெறிக்கட் சென்றாறலைப் பாரொப்ப னேர்நீ.
|
336. |
விலையறம் போலு மெனின்வினை யாக்க
நிலையுமீ றென்பது நேர்குவை யாயின் வலையினின் வாழ்நர்க்கும் வைகலு
மீந்தாற் கொலையென்றும் வேண்டலன் றோகுண மில்லாய்.
|
337. |
நும்பள்ளிக் கீபொரு ளாலுணர் வில்லவ
ரெம்பள்ளி தாஞ்சென் றெடுப்ப வெனினது கம்பலை யாம்வினை யில்கறிக் கீபொருள்
செம்பக லேகொலை யாளரிற் சேரும்.
|
338. |
நாவின்கண் வைத்த தசைபய னேயென வேவினை
நீயுமற் றின்பமஃ தாதலிற் றேவன்கண் வைத்த சிரத்தை செயலன்று தூவென
வெவ்வினை யைத்துடைத் தாயால்.
|
339. |
கன்றிய காமந்துய்ப் பான்முறைக் கன்னியை
யென்றுகொ லெய்துவ தோவெனுஞ் சிந்தையன் முன்றினப் பட்ட முயன்முத லாயின
நின்றன வுந்தின நேர்ந்தனை நீயே.
|
340. |
தூய்மையி லாமுடை சுக்கில சோணித மாமது
போன்மெனி னான்முலைப் பாலன்ன தூய்மைய தன்றது சொல்லுவன் சோர்வில வாம
னுரைவையந் தன்னொடு மாறே.
|
341. |
மேன்மக்க ணஞ்சொடு கள்வரைந் தாரது
போன்மக்க ளாரும் புலால்வரை யாரெனிற் றான்மேய்க்க ணின்ற தவசிமற் றெங்குள
னூன்மெய்க்கொண் டுண்பவ னுன்னல தென்றால்.
|
342. |
பார்ப்பனி யோத்துநின் னோத்தும் பயமெனி
னீப்பவுங் கொளபவு நேர்து மவையவை தூப்பெனு மில்லன வேசொல்லி நிற்குமோர்
கூர்ப்பினை நீயென்றுங் கோளிலை யென்றாள்.
|
343. |
தூவினி னுண்புழுத் துய்ப்பனென் னாமையிற்
றீவினை சேர்ந்திலன் றின்பவ னென்னினு மோவெனு முன்விலை வாணிக ரென்றினர்
மேவினர் தாம்விலை யேவினை வேண்டார்.
|
344. |
அடங்கிய வம்பு பறித்தன் முதலா
வுடங்குசெய் தார்வினை யொட்டல் ரென்பாய் மடங்கினர் வாழ்க வெனுமாற்
றார்போற் சடஞ்சொல்லித் தின்பதிங் கியார்கட் டயாவோ.
|
345. |
தின்னு மனமுடைப் பேயெய்துந் தீவினை
மன்னு மிகவிடைத் தாய்வினைப் பட்டில்லா ளென்னு முரைபெரி தேற்கு மிகழ்ச்சி
தன்னை வினைப்பட நீசொல்லி னாயால்.
|
346. |
அறஞ் சொல்லக் கொள்ளு மறமென் றறிந்தாங்
கறஞ்சொல்லி னார்க்கற மாமென் றறியாய் புறஞ்சொல்லி தன்று புலால்குற்ற
மென்று துறந்தொழிந் தாற்கொலை துன்னினர் யாரோ.
|
347. |
அறந்தலை நின்றாங் கருளொடு கூடித்
துறந்தனன் யானென்னுஞ் சொல்லு முடையாய் மறங்கொண்டி துண்டென்னை மன்னுயிர்க்
காமே சிறந்ததுண் டோவிது சிந்தித்துக் காணாய்.
இஃது ஆசிரியர் கூற்று |
348. |
பேயொப்ப நின்று பிணங்கிக்கண் டார்க்கெனு
மாயத்தி னூனுண்ண மன்னு மருமையி னாயொப்பச் சீறி நறுநுத லாளொடு காயக்
கிலேசத்திற் கட்டுரைக் கின்றான்.
மொக்கலன் கூற்று
வேறு |
349. |
வெயிறெறவ் வுணங்கியும் வெள்ளிடைந்
நனைந்துமூன் டயிறலிற் பட்டினிகள் விட்டுமின்ன கட்டமாய்த் துயிறுறந்
திராப்பகற் றுன்பவெங் கடலினார்க் கயிறெறுந் நெடுங்கணா யாவதில்லை யல்லதும்.
|
350. |
காயம்வாட்டி யுய்த்தலிற் கண்ட நன்மை
யுண்டெனின் தீயினாற் சுடுதலுந் தெற்றியேறி வீழ்தலு நோயினாற்
றிரங்கலுந் நோன்மையென்ன லாம்பிற நீயனா யிதற்கினி நேமியென்று சொல்லென.
நீலகேசி கூற்று
(இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்) |
351. |
புண்ணினைத் தடிதலும் போழவாற்றி நிற்றலும்
கண்ணினைக் கழிகள்ளான் மிண்டிக்கொண்டு நீட்டலும் விண்ணுயர் நெடுவரைவ்
வீற்றுவீற்று வீழ்தலும் அண்ணலார்தஞ் செய்கையு மாவதில்லை யல்லதும்.
|
352. |
தூக்கடம்மை யாக்கலே தொல்லைநல் லறம்மெனின்
நாக்களைப் பறித்தலுந் நான்றுவீழ்ந்து பொன்றலுந் தீக்கள் பாய்ந்துசாதலுந்
தீயசெங் கழுவ்வின்மேன் மேக்கினைக்கொண் டேறலு மேன்மையென்ன லாம்பிற.
`பாரமிதைழு |
353. |
தானஞ்சீல மும்பொறை தக்கதாய வீரியம்
மூனமில் தியானமே யுணர்ச்சியோ டுபாயமும் மானமில் லருளினைவ் வைத்தலேவ
லிம்மையுஞ் ஞானமீரைம் பாரமீதை நாடுங்கா லிவைகளும்.
|
354. |
விருக்கமூலி யாகலும் வெள்ளிடை யுறைதலும்
மிருத்தனிற்ற லன்றியு மிட்டகூறை யெய்தலும் மருக்கையின் மயானத்துட்
சேக்கையும் மனைகளை வருச்சியார் புகுதலும் மற்றவற்றொ டுண்டலும்.
இதுவுமது |
355. |
அத்திட்டாடை கோடலும் மமையுமென்ன
நீங்கலும் பெற்றதன்னிற் சேக்கையும் பேர்த்துண்ணா
தொழிதலும்
குற்றமென்னப் பிச்சையுங் குறித்துழிப்
புகாதுதான் றுற்றியுய்த்த றன்னொடு துதாங்கென்றாத்தர்
சொன்னவே.
|
356. |
பாரமீ துதாங்கொடு பற்பல கிலேசமும்
நேருமனையி லுண்மையா னீரும்வேண்டி னீரெனக் கூரிமம் வெயில்பசி கூடலங்
கூடினாற் சேர்தலில்லை நல்லறஞ் சிந்தையென்று செப்பலும்
|
357. |
அருந்தடிக ளீரவும் மறஞ்செய்வாளிற் போழவும்
வருந்துவான துள்ளநீ மாட்சிநன்று மென்றியா லிருந்துநின்று நன்னெறிக்
கிடைப்படாத சிந்தையாற் பெருந்தவங்கள் செய்ந்நரைப் பேசுவாயோர் பேதையே.
இதுவுமது |
358. |
புத்தராகு மாண்பினார் போதிசத்து
வர்கட்காம் பத்துமாய பாரமீதை பாரவிட்ட மென்றலும் சித்தராகு மாண்பினாற்
சீலமும் வதங்களும் மெத்துணையும் மாயிரம்மா மென்றுமியாமு மென்றனள்.
|
359. |
உடம்பினுள்ள பல்லுயிர் சாவவூனுண்
மானுக்குத் தடங்கொண்மா வரைமிசைத் தன்னையீத னன்மையேற் படம்புனைந்த
வர்கடாம் பலருமுண்ணு நீரினுள் விடம்பெய்தாற்கு நன்றுகொல் வியாதியாளன்
றீர்கென.
இதுவுமது |
360. |
அல்லவர்கள் சாதலை அறிந்தனன் னவனெனில்
நல்லதில்லை நஞ்சினா லென்றுநாட்டு வாயெனி னெல்லையில்ல பல்லுயிர்
தன்கணுள்ள வெஞ்சலுங் கொல்லவந்த வூன்களும் குற்றமென்ற வாறுகொல்.
வேறு |
361. |
நீட்சி திரிவா மயிருகிர் காட்டினை
மாட்சியில் லாமயிர் மன்னுயி ருள்வழித் தாட்க ணிமிருந் தலைநிமி ராவெழல்
காட்சி மரத்திற்குக் காறலை யெங்கும்.
|
362. |
மரங்கள் வளருமென மன்னுங் கூம்பி
விரிந்த விலையின் வேற்றுமை சொன்னாய் பொருந்து மிவையு மல்லவு மன்றோ
வொருங்கிவ் வுலகத் துயிர்களு மென்றாள்.
|
363. |
வயாத்திரு வாக்கி வளர்பூ சணிக்குத்
தயாச்செய்கை தீதென்னுந் தத்துவங் கண்டா யுயாப்பிழைத் தாய்மெழு கூனொடு
பட்ட வயாவதற் கீண்டுப் பயத்தலி லன்றே.
|
364. |
யாதினு மாழ்குமம் மாழ்கியு மென்றுழி
நீதின்னுந் தோலை நெருப்பொடு கூட்டத்தி னோதினை தேறுற நீர்க்குரைத்
தாய்மற்றுஞ் சேதனை யில்லாய் திரிவென்னை வண்ணம்.
|
365. |
அரும்பு மலரு மரும்பிணி தீர்வு
மொருங்குதங் காரணத் தாக்க முணர்த்து மரங்களு மன்னுயி ரெய்தின வென்ன
விரும்பொடு காந்த மியைவி றிரிவே.
|
366. |
ஒப்ப மரங்கட் குயிருண்மை யாமினி
யிப்படித் தோன்று மிருதுக்கள் சார்ந்தனெச் செப்பிய வேதுத் திரிவெனக்
காட்டிய வெப்பங் குளிரவை தாமவை யேயால்.
|
367. |
மரங்கிளை யொப்புமை யாலுயி ரென்னக்
கிரந்தியும் வெப்புங் கிளக்குவை யாயி னிரந்த வுடம்பின் விகார நினக்குப்
பரந்துண ருண்மையைப் பார்ப்படுத் தாயால்
|
368. |
வாட்டங்க ளுண்மையின் வாழ்மரஞ் சேர்ந்தவை
நாட்டிய வாதலி னல்லுயி ரோவெனக் காட்டிய தோலொத் திராமையும் வாடுமத்
தோட் டஞ்செய் சேம்புயிர் தொன்முடி வன்றோ.
|
369. |
அற்ற வுடம்புக ளாறுத லான்மரந் தெற்ற
வுயிருண்மை செப்பத்தி னாமெனப் பெற்ற பிழைசொல்லிப் பித்தெழுந் தாரொப்பக்
குற்ற மிவையெனக் கூறுதி யன்றோ.
|
370. |
காட்டின மண்ணை முதலா வுடையன வோட்டி
யுரைத்த வுயிரென வொட்டலர் நாட்டினுள் வாழ்பவ ரின்னரென் றாவந்த நாட்டை
யவரென்ன நாட்டிய வாறே.
|
371. |
தாவர மாய மரமிவை தாமென யாவருஞ்
சொல்லுப வஃது மறிந்திலை நீவி ரெவர்சொல்லச் சொல்லினீ ரென்றுநின்
சீவரம்போற் கட்டில் செப்புவ தென்னோ.
|
372. |
மக்களுட் டோன்றிய போழ்த மரவுயிர்க்
கொப்ப வுடம்பறி வன்றியொன் றில்லெனிற் றக்கதன் றன்மையுடைப் போதி சத்துவன்
மிக்கதென் னோதிக்கு வேற்றுமை வேண்டார்.
|
373. |
நாண முடைய மரமுத லியாவையும் மூணின
வாழந்துமுண் ணாவிடிற் சாதலைக் காணவும் பட்டது கஞ்சியோ டல்லதை யாண
மிலாப்பொரு ளாட்சியர் போன்றே.
நூலாசிரியர் கூற்று
வேறு |
374. |
மயக்குடை யாட்சியி னார்க்கு மரங்கட்கு
மன்னுயிர்தாம் பயப்பட வொக்கு மெனவே யெனமன்னும் பற்றிலனாய் வியப்புடை
யாகம மீதனெ நீயும் விரித்துரைக்கு நயப்பிர மாணங்கண் மேற்குற்ற நாடுவன்
யானெனவே.
மொக்கலன் குற்றங் கூறுதல் |
375. |
நிற்றலுங் கேட்டினோ டுண்மையு மின்மையு
நேர்தலினு மொற்றுமை வேற்றுமை தம்மையு மொட்டப் படுதலினுங் குற்ற
மிவையிவை யாதலைக் கேளெனக் கூறினனே முற்று மவளது பக்க மறிதலில் மொக்கலனே.
|
376. |
வேயொத்த தோளி நிலையுதல் வேண்டப்
படுதலினாற் காயத்தின் றன்மைய வாயெக் கருமமுங் காண்பரிதா நாசத்
தவமெனிற் றோன்றுவ தாமு நவநவமாம் தோசத்த வாநின் பொருளெனக் கேட்டிது
சொல்லினனே.
|
377. |
நின்றன வேயென்று நில்லல வேயென்று
நேர்பவர்க்கு மொன்றென வேயும்பின் வேறென வேயுந்தம்
முண்மையின்கட்
சென்றன வேயென்றுஞ் செல்லல வேயென்றுஞ்
செப்பினர்க்கே அன்றென லாமோ வறைந்தபல் குற்ற
மவையவையே.
|
378. |
நின்ற குணங்களி னித்தியமென்று நிலையிலவா
மென்ற குணங்க ளநியத மென்று மியம்புதலாற் சென்ற குணங்க ளிருமையு மல்ல
தவற்றினிற்றீர்ந் தொன்றங்குநின்ற பொருளுள்ள தேலா
தனெவுரைத்தான்.
|
379. |
கேடில வாய குணத்தி னிலையுங் கெடுங்குணத்தி
னீடல வென்பது நேர்ந்தினி யப்பொரு ணேர்தலில்லாய் மூடலை யாவதன் காரண மென்னை
முடிகுணத்திற் கூடல தாய குணிப்பொருள் கூறினர் யாவரென்றாள்.
மொக்கலன் கூற்று |
380. |
குணங்களல் லாற்பொருள் வேறில்லை
யாயிற் குறிப்பொருளாம் பிணங்கல
வாகிப் பிறபிற வாயிற் பிறபொருளா
முணர்ந்தன தாமிரு சொல்லினு
மொன்றெனி னொன்றவையா நுணங்கிய
கேள்வியி னாயொன் றுரையென
நோக்கினனால்.
நீலகேசியின் மறுமொழி |
381. |
நிலையா தனெவு முயிரில்லை யென்று
நெறிமையினாற் றொலையாத் துயரொடு தூய்தன்மை யென்றின்ன
தொக்குளவாக் கலையா விழுப்பொருட் கந்தங்க ளைந்திற்கும்
காட்டுதலான் மலையா திதுநுங்கண் மார்க்கத்தொ டென்றனள்
மாணிழையே.
|
382. |
ஆரிய சத்தைய லாற்கந்தம் வேறில்லை
யேற்குறியா மாரிய சத்தையுங் கந்தமும் வேறெனின்
வேறவையாம்
பேரிவை தாமிரண் டொன்றினுக் கேயெனி
னொன்றவையாங் கூரிய சிந்தையி னாயொன்று சொல்லென்று
கூறினளே.
மொக்கலன் கூற்று |
383. |
சொல்லலன் யானெனச் சொல்லுவை
யாயினுஞ் சொன்மலைவாம் சொல்லல னென்ன
வினவினு மென்னினுஞ் சொல்லிலையாம்
சொலுவ னல்லன் ஒருவகையாச் சொல்லினவ்
வகையாற்
சொல்லிய குற்றங்க டுன்னு மெனவது
சொல்லினனே.
நீலகேசி மறுமொழி |
384. |
தன்மையி னன்மையுந் தன்னல்
பொருள்களி னுண்மையுந்தம் பன்மை
யுடையவப் பண்புக ளெல்லா
முடனுரையுஞ் சொன்மை யுணரா தவர்கட்குத் தான்சொலற்
பாடின்மையாற்
புன்மை யுடைய புறத்தீ ருரைக்கு
முரையுமென்றாள்.
மொக்கலன் கூற்று |
385. |
சேற்பொருள் போலரி சிந்திய கண்ணாய்
சிதர்ந்துரைக்கு நூற்பொரு டாம்பரி ணாமத் திரிவென
நோக்குதியேற்
பாற்பொரு டான்றயி ராய பொழுதின்கட்
பாழ்த்திலதேற் பாற்பொரு ளேயின் றயிரெனச் சொல்லப்
பழுததென்றான்.
நீலகேசி மறுமொழி |
386. |
உருவப் பிழம்பப் பொருளென்
றுரைப்பனிப் பாறயிர்மோர் பருவத்தி
னாம்பரி யாயப் பெயரென்பன்
பாலழிந்து தருவித் துரைத்த தயிருரு வாய்மும்மைத்
தன்மையதாந்
திருவத்த தென்பொரு ளாதலைத் தேர
தெளியிதென்றாள்.
மொக்கலன் கூற்று |
387. |
பெற்றது தானுங்கும் மாயத் திரிபு
பயற்றியல்பே யிற்ற திதுவென திட்டமென் பாயிவ்
விருமையினுந்
தெற்றெனத் தீர்ந்தோர் பொருளென்னை தேற்றினித்
தேற்றலையேன் மற்றது வாமை மயிரெனச் சொல்லுவன்
மன்னுமென்றான்.
நீலகேசி மறுமொழி |
388. |
கெட்ட திரட்சியுந் தோன்றிய
சாந்தும் பொருளெனவும் பட்டன
வப்பொருள் பையைகளே என்னும்
பான்மையினால் விட்ட திரள்வினுந் தோன்றிய சாந்தினும்
வேற்றுமையாம்
நட்டமுந் தோற்றமு நாட்டே னுருவிற்கு
நானுமென்றாள்.
மொக்கலன் கூற்று |
389. |
திரியும் பொருள்க டிரிந்தாம்
பயறுகும் மாயமுமாய் விரியும் மெனவது
வேண்டுகின் றாயறக் கெட்டமைக்கேற்
கரியும் முடையன் பயறொடு நீருங்
கலந்துபெய்தா
லெரியுறு கின்றதன் றேயிது வோவொப்ப
விற்றதென்றான்.
நீலகேசி மறுமொழி |
390. |
பருமை யுடைய பயற்றின் வழியொன்று
பாவியுண்டா யருமை யுடையவந் நீருக்கு மாவியன்
றோவதன்றி
யிருமையுங் கெட்டுட னாயிற்கும் மாயமு
மில்லற்கனும் பெருமையி னாலொன்று பெற்றொன்று பேறின்மை
பேதைமையே.
மொக்கலன் கூற்று |
391. |
கெடுவன தோன்றுவ நிற்பன தாமுங்
குணமென்றியேற் கெடுவன தோன்றுவ நிற்பன தாங்குண மாயினக்காற் கெடுவது
தோற்ற நிலையுத றானப் பொருளெனவும் படுவஃ தாக வுரைப்ப தியாதின்
பயத்ததென்றான்.
நீலகேசி மறுமொழி |
392. |
கூறிய தெக்குண மக்குணந் தானக்
குணிப்பொருளே தேறிய தெக்குணி யக்குணி தீர்ந்தில
பல்குணமும்
வேறென வொன்றென விவ்வகை வேண்டுகின்
றேற்கவைதா மாறென்னுங் கொள்ளா முடிபு மொழிநின்
மயக்கமென்றாள்.
மொக்கலன் கூற்று |
393. |
புற்கல மாய முதற்பொரு டத்தமுட்
புல்லினவாய்க் கற்களு நீருந் நிலத்தொடு காற்றழ
லென்றினைய
பற்பல கூற்றாற் பிறங்கிப் பரக்குந்
திறமென்னையோ வுற்றவை யொன்றொன்றி னுட்புகு மோத்துடை
யாய்க்கெனலும்.
நீலகேசியின் விடை |
394. |
யாத்தற் கமைந்த குணத்தின வாய
வணுப்பொருள்க ணீத்தற் கரியன நீத்த வருக்க நெறிமையினா லேத்தற் கியைந்த
விரண்டணு வாதியி னின்னணமா மோத்திற் கிடந்த வகையிது கேளென் றுரைத்தனளே.
மொக்கலன் கூற்று |
395. |
இரண்டணு வாதியி னின்னண மேறுநின்
கந்தமெனிற் றிரண்டன வாய்த்தம்முட் சென்றுடன் றீண்டு
மிடத்தவைதா
முருண்டன தாமொன்றி னுள்ளும் புடையு
முடைமையினாற் றெருண்டனம் பாகுபா டுற்றற்கு மென்றனன்
றேரனுமே.
நீலகேசியின் விடை |
396. |
ஓரிட மாய முதற்பொருட் குள்ளும்
புடையுஞ்சொல்லிப் பேரிட மாக்கிப் பிளப்ப னெனவும் பிதற்றுகின்றா யாரிட
மாய வறிவிற்கு மின்னண மாதலினா னேரிடத் தாற்பன்மை யெய்தி யுருவா
நெறியுமென்றாள்.
மொக்கலன் கூற்று
வேறு |
397. |
வண்டாயுங் கோதாய் வரைநெல்லியின்காய தங்கை
யுண்டாய போதே யுறையூரகத் தில்லை யென்பாய் கண்டாயிம் மெய்ம்மை
பிறர்காண்டற் கரிய தென்றான் பெண்டான மீயு மறங்கொண்ட பெருமை யினான்.
வேறு
நீலகேசியின் விடை |
398. |
வெய்தாய தீயுங் குளிராகிய
நீரும்விண்டோய்ந் தைதாய காற்று மவையாரு மறிப வென்றாற் பொய்யாகு மென்னா
யவைபுத்த வசன மென்பாய் செய்தாய் முழுக்கூ ழதுபோலச் சிதைக்க வென்றான்.
மொக்கலன் கூற்று |
399. |
கந்தின்கட் காணாய் களியானையை யில்லை
யென்பாய் வந்திங்க ணின்ற பொழுதுண்மை மறுக்க லாமோ தந்திங் குரைத்த
வுரைதானுங் கெடுக வென்றான் வெந்திங்கு வித்தின் னனைத்தாகிய வீடு கண்டான்.
நீலகேசி கூற்று |
400. |
ஆண்டில்லை யென்பன் னதுவுள்வழி யுண்டு
மென்ப னீண்டின்மை யுண்மை யிவையாக விசைத்துநின்றேன் வேண்டி யனவே
முடிப்பாய்விரி பொன்னெ யிலு ளீண்டி யிமையோர் தொழுவானெம் மிறையு மென்னாய்.
மொக்கலன் கூற்று |
401. |
கொல்லேற்றின் கோடு குழக்கன்றது வாயி னக்கா
லில்லாகு மென்றி யிவையிங்ஙன முண்மை யின்மை சொல்லேனு மல்லே னதுசொல்லுவன்
யானு மன்னாய் கொல்லேற தாகாப் பொழுதேயுடன் கூறு கென்றான்.
நீலகேசி கூற்று |
402. |
ஏறாய காலத் தெழினல்லது வத்து பேதங்
கூறாரெ ழாத குழக்கன்றினுக் கின்மை முன்னா வீறாகி நிற்கும் முதலுண்மையிற்
கின்மை யெங்கு மாறியாது மில்லை கலைக்குண்மையு மற்றுமென்றாள்.
மொக்கலன் கூற்று |
403. |
கன்று முயலுங் கழுதைப்பெயர் பெற்ற னவுங்
குன்றுந் தலையுட் பெறப்பாடெய்தல் கோடு றுப்பா வென்றும் மவற்றுக்
கெழலில்லைநின் பேத மென்றாற் சென்றுஞ் சிலவிற் சிலவின்மையு மாகு மென்றான்.
நீலகேசி கூற்று |
404. |
இல்லாத கோட்டை யுளதாக வெடுத்து மென்று
சொல்லார்கள் பேதம் சொலவேண்டுவை யாயி னக்காற் புல்லாது நில்லாப்
பொருடங்களுக் குண்மைக் கின்மை கல்லாது நீயுங் கழுதைக்கருள்
செய்தியென்றாள்.
மொக்கலன் கூற்று |
405. |
இல்லை வலக்கை யிடக்கைவகை யால தென்றுஞ்
சொல்லின் னதற்கு மதுவேயெனுஞ் சூழ்ச்சி மிக்கா யொல்லை யிரண்டு முளவாக
வுணர்ந்தனை நீ நல்லை பெரிதும் மெனமொக்கல னக்க னனே.
நீலகேசி கூற்று |
406. |
இக்கை வகையா லதுதானுள தாயி னக்காற்
றொக்க விரண்டும் முடனாதலிற் றூய்தொருபால் பக்கம் மதுவும் படுபாழினிக்
காலு மற்றாய்ச் செக்கின் கணைபோன்றினிச் சென்றுருள் சேம மென்றாள்.
மொக்கலன் கூற்று |
407. |
கைகால் வகையால் பெறப்பாடிலை காலு மற்றாய்
மெய்தா மொழிய வவைபாறெய்தல் வேண்டு தலாற் கொய்தார் நறும்பூங் குழலாய்குழ
மண்ணர் களாச் செய்தா யுலகிற் சிறுமானுயர் தம்மை யென்றான்.
நீலகேசி கூற்று |
408. |
கால்கால் வகையா லுளகைகளுங் கையி னற்றாய்ப்
பாலாய் முடிய மவைபண்டை யியல்பி னாலே யேலா திவைதா முளவெத்திறத் தானு
மென்னி னாலாவ தான முடிவி னாயொடு நண்டு மொத்தாய்.
மொக்கலன் கூற்று |
409. |
அல்லென் றுரைத்த வுரைதானுமெம் மாக மத்து
ளில்லென்ற வாறென் றிவையிங்ஙனம் வேண்டு கின்றாய் சொல்லன்று நாயைந்
நரிதானென்னச் சொல்லு கின்றா னில்லென்ற வாறோ நரிதன்னையு மென்ற னனே.
நீலகேசி கூற்று |
410. |
நாய்கொன் னரிகொல் லெனத்தோன்றுமுணர்வு
நண்ணி யாய்சொல் லிரண்டின் னுணர்ந்தல்லதுவின்மை யென்றாய்
நீசொல் லறியா யறிவார்நெறிநேடு கில்லாய் பேய்சொல லுபவே பலசொல்லிப் பிதற்ற
லென்றாள்.
மொக்கலன் கூற்று |
411. |
பேரும் உணர்வும் பொருளில்லதற்
கில்லையென்றி சார்வும் மகல்வுந் தலைப்பெய்தலோ டுள்ள மின்மை நேரிங்
கிவையு முணராமையிற் கென்ற னனாய்த் தேரன் சிறிதே தெரிகோதையை நக்க னனே.
நீலகேசி கூற்று |
412. |
ஆத்தன் னுரைத்த பொருடன்னையவ் வாசகத்தாற்
சாத்தன் பயின்றா லறியாவிடுந் தன்மை யுண்டோ வீர்த்திங் குரைத்த
பலதம்முளொன் றின்ன தென்னா யோத்தின் வகையாற் பெயரோடுணர் வின்மைக் கென்றாள்.
மொக்கலன் கூற்று |
413. |
ஒன்றி னியற்கை யொருவான்பொருட்கில்லை
யென்றே யென்று முரைத்தி யிரும்பெய்திய வெம்மை யந்நீர் சென்றும்
மறுகித்தெறு தீக்குணஞ் சேர்ந்த தற்றேற குன்றும் பிறவோ வினிநீகொண்ட கோளு
மென்றான்.
நீலகேசி கூற்று |
414. |
கொண்ட வுடம்போடுயிர் தானுடன் கூடி
நின்றாற் கண்டு முணர்ந்து மவையாதென் கல்வி யில்லா யுண்டங்க ணின்ற
வுயிர்க்காக வுரைப்ப தொக்கும் பிண்டந் நிகழ்ச்சி பிழைப்பாகு நினக்கு
மென்றாள்.
மொக்கலன் கூற்று |
415. |
மெச்சி யிடத்தாற் பிறிதின்மை விளம்பு
கின்றாய் பிச்சை முதலாப் பெரிதாவறஞ் செய்த வன்றா னச்செல் கதியுள்
ளமரன்னெனப் பாடு மின்றே வீச்செய்கை யெல்லா மிகழ்வாம்பிற வென்ற னனே.
நீலகேசி கூற்று |
416. |
ஊனத்தை யின்றி வழங்காவுழல் கின்ற போழ்து
மானத்தி னீங்கி வதங்காத்து வருந்தும் போழ்தும் வானத்த தாய பொழுதுமன்
னுயிர தென்றா டானத்தி னுண்மை யிதுதத்துவ மாக்கொ ளென்றாள்.
மொக்கலன் கூற்று |
417. |
காலம் பிறிதிற் பொருளில்லெனக் காட்டு
கின்றாய் ஞால மறியத் தவஞ்செய்தவ னல்லு யிர்தா னேலங்கொள் கோதா
யெதிர்காலத்தி னின்மை யாமேற் சீலங்கள் காத்தல் வருத்தஞ்சிதை வாக வென்றான்.
நீலகேசி கூற்று |
418. |
ஆற்ற வருந்தித் தவஞ்செய்து மரிய காத்துந்
நோற்றும் பெரிதுந் நுணுகாநின்ற பொழுதி னானும் மேற்ற முடைய விமையானெனப்
பட்ட போழ்துஞ் சாற்றி னுயிர்தன் பொழுதே யுண்மை தங்கு மென்றாள்.
மொக்கலன் கூற்று |
419. |
நூறா னிரும்பாய் நிகழாமை நொடிதி யாங்கே
பாறான் றயிரா மெனநின்று பயிற்று தியான் மாறா னுடையா ருரையொக்குநின்
மாற்ற மென்னாத் தேறார் தெருண்டா ரெனச் சொல்லினன் றேர னும்மே
நீலகேசி கூற்று |
420. |
தத்தந் நிமித்தந் தலைப்பெய்துதங் காரி
யம்மா யொத்த பொருள்க ணிகழ்வாக்க முரைத்து நின்றேன் பித்தனி னொப்பப்
பிறிதிற்பிறி தாமென் பனோ வித்தின் வழியா னுரைநீயும்வெள் யானை யென்றாள்.
மொக்கலன் கூற்று |
421. |
கூடா பொருள்கள் பிறிதின்குணத் துண்மை
யென்பாய் பாடாலப் புட்பத் தனவாகிய பண்பு நாற்றம் மோடாவ தெய்திற்
றெனவையமுரைக் கின்ற தஃதா னாடாது சொன்னா யதனன்மை யொழிக வென்றான்.
நீலகேசி கூற்று |
422. |
போதுக்க வாசம் புதுவோட்டைப்
பொருந்தினாலும் மேதக்க நாற்ற மிதுபூவின தென்ப மிக்கார் தாதுக்க நின்று
மவைபோக்குந் ததாக தற்கென் றேதுக்கள் காட்டி முடித்தாளிணை யில்ல நல்லாள்.
வேறு
மொக்கலன் கூற்று |
423. |
வீட்டிட மென்று நின்னால்
வேண்டவும் பட்ட தன்னை நாட்டுவ னதுவு
நாயிற் கென்றுநன் றென்றி யாயிற்
சூட்டடு நரகந் தானுஞ் சுடர்ந்தநற்
சுவர்க்கந் தானும்
பூட்டின முரைத்த வக்காற் போந்ததங்
கென்னை யென்றான்.
நீலகேசி கூற்று |
424. |
கதியின வகைய வாறுங் கந்தபிண்
டங்கள் சொன்னான் பதியின வென்ன நின்றாய் பாக்கனாய்
காட்டு தீயால்
விதியினின் வினையட் டார்தம் வீட்டிட
மின்ன தென்றாற் கதுவென்னை யென்னச் சொன்னா லாகம
மல்ல தாமோ.
மொக்கலன் கூற்று |
425. |
பேர்த்திவண் வார லில்லாப்
பிறவியாந் தான மென்னிற் றீர்த்திவண்
வார லின்மை சேர்விடக் குண்மை
யாமோ கூர்த்தலில் வினையி னின்மை கூறுவ
னென்றி யாயி னார்த்துள னவனே யாயி னண்ணுமே
வினையு மென்றான்.
நீலகேசி கூற்று |
426. |
பிறப்பதை வீடு மென்னே னவ்விடம்
பேர்ப்பின் றென்னே னுறத்தகு வினைக டாமு முண்மையா
லொட்டு மென்னேன்
மறத்தலில் யோக பாவ மாசுதா மீட்டு
மென்ப திறப்பவும் வேண்டு கின்றேற் கெய்தல
நின்சொ லென்றாள்.
மொக்கலன் கூற்று |
427. |
பிறக்குந்தன் ஞானத் தாலும்
பின்னுந்தன் னுண்மை யாலும்
புறப்பொருள் கொண்டு நின்று புல்லிய
சிந்தை யாலுஞ் சிறப்புடை வீடி தென்று செப்புநீ
தீவி னையைத்
துறக்குமா றில்லை நல்லாய் சொல்லுநீ
வல்ல தென்றான்.
நீலகேசி கூற்று |
428. |
நன்றியில் கார ணங்க ணாட்டிநீ
காட்டி னவ்வு மொன்றுநா னொட்டல் செல்லேன் யோகொடு
பாவ நின்றாற்
குன்றினிற் கூர்ங்கை நட்டாற் கூடுநோ
யாதிற் குண்டோ வொன்றுநீ யுணர மாட்டா யொழிகநின்
னுரையு மென்றாள்.
மொக்கலன் கூற்று |
429. |
கருவிதா னொன்று மின்றிக்
கடையிலாப் பொருளை யெல்லா மருவிய
ஞானந் தன்னா லறியுமெம் மிறைவ
னென்பாய் கருவிதா னகத்தி னாய கடையிலா
ஞான மன்றோ மருவியார்க் கமிர்த மொப்பாய் மாற்றந்தா
விதனுக் கென்றான்.
நீலகேசி கூற்று |
430. |
வினையுமவ் வினையி னாய விகலஞா
னங்க டாமு மினையவே கருவி யென்றா லிங்குநின்
னுள்ளம் வையாய்
முனைவனாய் மூர்த்தி யல்லான் மூடுமே
மாசு மென்பாய் கனைகட லெல்லை காணுங் காக்கையொத்
தாய்கொ லென்றாள்
மொக்கலன் கூற்று |
431. |
கொண்டதன் கரணந் தானு மில்லையேற்
கூற்று மில்லை மண்டினர் வினவு வார்க்கு மலைச்சிலம்
பனைய னென்றா
லுண்டுதன் கரணந் தானு முரைக்குநர்க்
குறுவ னென்னிற் பண்டுசெய் நல்வி னையைப் பகவனே
யென்று மென்றான்.
நீலகேசி கூற்று |
432. |
தனுவெனுங் கருவி தன்னாற் றன்னடைந்
தார்க டன்னை வினவின வுணர்ந்து சொல்லும் வினையினுக்
கின்ன துண்டோ
சினவினுந் தேர வொன்று செப்புவன்
செல்க தீயுட் கனவினு நின்ன னாரைக் காணல
னாக வென்றாள்.
மொக்கலன் கூற்று |
433. |
முறையினா லறிய லன்னேன் மூத்தலே யிளமை
சாக்கா டுறையல வொருவன் கண்ணே யுடனவை யாக வொட்டி னிறைவனா ருணர்வு
தானுமின்மைமே லெழலும் வேண்டி யறைதுநா மன்ன மன்னா யன்னண மாக வென்றான்.
நீலகேசி கூற்று |
434. |
சீலவான் றெய்வ யாக்கை திண்ணிதா
வெய்தி நின்றார் காலமூன் றானு முய்த்துக் காட்டலுங்
காண்டு மன்றோ ஞாலமூன் றானு மிக்க ஞானவா
னான நாதன் போலுமென் றோர்தல் செல்லாய் போர்த்தனை
யகமு மென்றாள்.
மொக்கலன் கூற்று |
435. |
நாளெல்லா மாகி நின்ற நன்பொரு
டம்மை யெல்லாங் கோளெல்லாந் தானொ ருங்கே கொள்ளுமே
லீர்ங்கு வள்ளைத் தாளெல்லாந் தானொ ருங்கே தானுநல்
லானோர் நல்ல வாளினா லேறு முண்டேல் வாய்க்குநின்
னுரையு மென்றான்.
நீலகேசி கூற்று |
436. |
நீருநீர் தோறு மொவ்வா நிலையிற்றே
திங்க ளென்று மூரினூர் தோறு மொவ்வா வொளியிற்றே
ஞாயி றென்றும்
யாரின்யார் கேட்ட றீவா ரன்னனே
யண்ண லென்றார் தேரனீ சொன்ன தன்னம்
சேரல வாக வென்றாள்.
மொக்கலன் கூற்று |
437. |
அளவிலாப் பல்பொ ருள்கட் காகுபண்
பாகி நின்ற வுளவெலாப் பொதுக்கு ணத்தா னொருங்குகோ
ளீயுமென்னிற்
பிளவெலா மாகு மன்றே பெற்றிதா
மொத்த லில்லேற் கொளவெலா ஞானந் தானுங் கொள்ளுமா
றெவன்கொ லென்றான்.
நீலகேசி கூற்று |
438. |
ஒன்றல்லாப் பலபொ ருளு
மொத்தொவ்வாப் பெற்றி யாலே
நின்றுகோட் செய்யு மென்றா னீடிய
குற்ற மாகா தென்றலா லின்ன தன்மை யிறைவன
தறிவு மெய்ம்மை யின்றெலாங் கேட்டு மோரா யேடனீ
யென்று சொன்னாள்.
மொக்கலன் கூற்று |
439. |
எல்லையில் பொருள்க டம்மை எல்லையி லறிவி
னாலே யெல்லையின் றறியு மெங்க ளெல்லையி லறிவ னென்பாய் எல்லையில்
பொருள்க டம்மை யெல்லையின் றறியி னின்ற வெல்லையி லறிவு தானு மெங்ஙன மெய்து
மென்றான்.
நீலகேசி கூற்று |
440. |
துளக்கில்லாப் பலபொ ருளுந்
தொக்கதன் றன்மை யெல்லாம் விளக்குமே
ஞாயி றொப்ப வென்பது மேலுஞ்
சொன்னேற் களக்குமே யன்ன மன்னா யாத்தன
தறிவு மென்றென்
றிளக்கிநீ என்னு மஃதே சொல்லுதி
யேழை யென்றாள்.
மொக்கலன் கூற்று |
441. |
ஓதலி லுணர்வு மின்றே லூறவற்
குண்டு மாகு மோதலி லுணர்வு முண்டே லொன்றுமே
பலவும் வேண்டா
மோதலி லுணர்பொ ரூடா முள்ளவும்
மில்ல வும்மே லேதமா மில்பொ ருண்மே
னிகழ்ச்சிதா னிறைவற் கென்றான்.
நீலகேசி கூற்று |
442. |
சென்றவக் குணங்க டாமுஞ் செல்லுமக்
குணங்க டாமு மன்றையக் குணங்க டாமு மப்பொருட்
டன்மை யாலே
நின்றதன் ஞானந் தன்னா னிருமல
னுணரு மென்றாற் பொன்றின வெதிர்வ வென்றல் பொருள்களுக்
கில்லை யென்றாள்.
மொக்கலன் கூற்று |
443. |
பிறவிதா னொன்று மில்லான் பெரியனே
யென்று நின்றான் மறவிதா னில்லை யோனி மன்னுநான்
கென்னு மில்லா
னறவியா யுந்த நூலுள் ளாத்தனா
மாயி னக்காற் புறவினிற் புரளுங் கல்லும் புண்ணிய
னாக வென்றாள்.
நீலகேசி கூற்று |
444. |
பிறத்தலே தலைமை யாயிற் பிள்ளைக
ளல்ல தென்னை யறக்கெட றான தென்னி லட்டக
வித்து வெந்தாம்
புறப்படும் போர்வை யாலேற் புண்டொழு
நோய ராகச் சிறப்புடை யண்ண றன்னைக் கல்லெனச்
சொல்லு வாய்க்கே.
இதுவுமது |
445. |
அடைவிலா யோனி யானா யாருமொப்
பாரு மின்றிக் கடையிலா ஞான மெய்திக் கணங்கணான்
மூன்றுஞ் சூழ்ந்து
புடையெலாம் போற்றி யேத்தப் பொன்னெயிற்
பிண்டி மூன்று குடையினா னிறைவ னென்றாற் குற்றமிங்
கென்னை யென்றாள்.
நீலகேசி மொக்கலன்
தோற்றமையுணர்த்தல் |
446. |
கோதியிட் டுள்ள தெல்லாங் குண்டல
கேசி யென்பா ளாதிசா லாவ ணத்து ளார்கதர்
தம்மை வென்ற வீதியயீ தென்று சொல்லி வீழ்ந்தனை
நீயு மென்றா ணீதியாற் சொல்லி வென்ற
நீலமா கேசி நல்லாள்.
வேறு |
447. |
பேதைக ளுரைப்பன வேசொல்லிப்
பெரிதலப் பாட்டினைநீ பேதைமற்
றிவன்பெரி தனெப்படும் கருத்துடை
மிகுதியினாய் தாதையைத் தலைவனைத் தத்துவ தரிசியைத்
தவநெறியி
னீதியை யருளிய நிருமலன் றகைநினக்
குரைப்ப னென்றாள்.
வேறு |
448. |
பகைபசி பிணியொடு பரிவின பலகெட
முகைமலர் தளிரொடு முறிமரம் வெளிசெய மிசைநிலம் விளைவெய்த விழைவொடு
மகிழ்வன திசைதொறு மிவைபிற சுகதன செலவே.
|
449. |
குழுவன பிரிவன குறைவில நிலையின எழுவன
விழுவன விறுதியி லியல்பின வழுவலில் பொருள்களை மலர்கையின் மணியென
முழுவது முணருமெ முனைவர னறிவே.
|
450. |
நிறைபொறி யுளவவை யறிதலி னெறிமைய
முறைபொரு ணிகழினு முறைபடு மறிவிலன் மறைபொரு ளுளவவ னறிவினை மறையல
விறைபொருண் முழுவது மறிதிற மிதுவே.
|
451. |
பிணிதரு பிறவிய மறுசுழி யறுவதொர்
துணிவிது வெனநம துயர்கெடு முறைமையு மணிதரு சிவகதி யடைதலு மருளுதல்
பணிதரு பரமன தருள்படு வகையே.
|
452. |
சொரிவன மலர்மழை துளிகளு நறுவிரை
புரிவன வமரர்கள் புகழ்தகு குணமிவை விரிவன துதியொலி விளைவது சிவகதி
எரிவன மணியிதெ மிறைவன திடமே.
|
453. |
அரசரு மமரரு மமர்வனர் வினவலின் வரைவில
பிறர்களு மனநிலை மகிழ்வெய்த உரைபல வகையினு முளபொரு ளுணரவொர் முரைசென
வதிருமெ முனைவரன் மொழியே.
|
454. |
வினையிரு ளடுவன விரிகதி ரியல்பொடு
கனையிருள் கடிவன கடுநவை யடுவன மனையிரு ணெறிபெற மதிகெட வடைவன வினையமெ
யிறையவ னிணையடி யிவையே.
வேறு |
456. |
ஆத்த னிவனென் றடிக ளடிமிசைப்
பூத்தனைத் தூவிப் பொருந்து துதிகளி னேத்துநர் கண்டா யிருவினை யுங்கெடப்
பாத்தில் சிவகதிப் பான்மைய ரென்றாள். மொக்கலன் நீலகேசியை வினவுதல்
|
457. |
ஏந்த றிறங்க ளிவையே லமைந்தன போந்த
வகையாற் பொருளும் பிழைப்பில வீந்த விவற்றினின் வேற்றுமை வீட்டிற்கு
மாய்ந்த வகையா லறிவிமற் றென்றான்.
நீலகேசி வீட்டியல்பு விளம்பல் |
458. |
வித்தென்றும் வெந்தால் முளையல தாயெண்மை
யொத்தினி துண்டா முயிரும் பிறப்பின்றிச் சித்தி யகத்துச் சிதைவிலெண்
டன்மையி னித்திய மாகி நிலையுள தென்னாய்.
மொக்கலன் கூற்று |
459. |
ஒக்கு மிதுவென வுள்ளங் குளிர்ந்தினி
மொக்கலன் சொல்லுமிம் மோக்கத்தைப் பாழ்செய்த தக்கில தாகுந் தலைவ ரியல்பென
நக்கன னாய்க்கென்று நன்னுத லென்றான்.
இதுவுமது |
460. |
பண்டே யெனக்கிம் மயக்கம் பயந்தவன்
கண்டார் மயங்குங் கபில புரமென்ப துண்டாங் கதனகத் தோத்துரைக் கின்றனன்
றண்டா தவனொடு தாக்கெனச் சொல்லி.
|
461. |
சிறப்பின தென்பதைச் செப்பலுந் தெற்றெனப்
பிறப்பறுத் தின்பெய்தும் பெற்றியின் மிக்க வறப்புணை யாகிய வாயிழை யாயான்
மறப்பில னென்று வலஞ்செய் தொழிந்தான்.
நீலகேசி கபிலபுரம்
செல்லுதல் |
462. |
அருளே யுடைய னறனே யறிவா டெருளா தவரைத்
தெருட்டல் லதுவே பொருளா வுடையாள் புலனே நிறைந்தாள் இருடீர் சுடர்போ
லெழுந்தா ளவன்மேல் |