5. புத்த வாதச் சருக்கம்
|
463. |
நீலகேசி கபிலபுரம் என்னும் நகரத்தை
அடைதல்
அணிநா டிவைதா மறல்யா றிவைதாம் பிணிநா டிவைதாம்
பெருங்கா டிவைதாம் மணிமா மலைதா மெனவே வருவாள் அணியார் சுகதன் நகரெய்
தினளே.
(இனி ஐந்து செய்யுள் கலிபுர வருணனை) |
464. |
அறையும் கடலும் அரவக் குரலும் பறையின் னொலியும்
படுகண் டிகையுஞ் சிறையின் மிகுமா லிதுசெம் படர்கள் இறைவன் னுறையு
மிடமா மெனலும்.
|
465. |
மழைசேர் நகரம் மலைபோன் றனவே கழைசேர் கொடியுங்
கதலிவ் வனமே விழைதா ரவரும் விரிகோ தையரும் முழைவாழ் புலியே மயிலே
மொழியின்.
|
466. |
நெடுவெண் டிரைமே னிமிருந் திமிலுங் கடுவெஞ்
செலவின் னுலவுங் கலனும் படுவண் டறையும் பொழிலும் மெழிலார் மடுவுந்
திடரும் மணல்வார் புறவும்.
|
467. |
கயன்மீ னிரியக் கழுநீர் விரியும் வயன்மாண் புடைய
வளமைத் தனெவும் முயன்மீ னெறியு முறியுங் கறியா தயன்மே யுறையா தணியிற்
றெனவும்.
|
468. |
கழுகின் னினமும் கழுதின் னினமும் முழுதும் மறுவை
பலமூ டினரும் கொழுதின் னிணனும் பிணனுங் குலவி இழுதென் னெலும்பா ரிடுகா
டெனவும்.
வேறு
நீலகேசி கூற்று |
469. |
சாதியே மிக்க தடுமாற்ற வெந்துயர மோதியே வைத்தாரவ்
வோத்தலொ மீக்கிடந்த வீதியே காணலா மென்றாளா னின்றாரும் போதியா ரீண்டைப்
புலால்பழியா ரென்றலும்.
நீலகேசி அம்மக்களை நோக்கிக் கூறியது |
470. |
அங்காடிப் பண்டவூன் றின்ன
வறமுரைத்தார்க் கிங்காடி வாழ்வனவு மூனாய்வந்
தீண்டியவாற் கொங்காடத் தேனறையுங் கொய்ம்மருதம்
பூவணிந்த பொங்காடை போர்த்தார்க்குப் பொல்லாதே
யென்னீரோ.
|
471. |
விலைபடைத்தா ரூன்வேண்ட வவ்விலைதான்
வேண்டி
வலைபடைத்தார்க் கெம்முயிரை வைக்கின்றாமின்ன கொலைபடைத்தா னோகொடிய னென்பனவே
போலத் தலையெடுத்து வாய்திறப்ப தாமிவையோ காணீர்.
இதுவுமது |
472. |
தன்றார மீந்தான் றனக்குறுதி யாவதனை யொன்றானும்
வேண்டான் பிறர்க்கே யுழந்தானூன் தின்றானுந் தீவினையைச் சேருமெனச்
சொன்னாற் பொன்றாவாய்ப் பல்விலங்கும் பூமிமேல் வாழாவோ.
இதுவுமது |
473. |
உரிதா வுணர்ந்தானொன் றோரா துரையான் பரிவே
யிதுவுந்தன் பாலரோ டெல்லா மெரிதோய் நரகம்பா ழேற்றுவா னேயாம் பெரிதா
மளியன் பெருந்தகைய னேகாண்.
இதுவுமது |
474. |
கொடைககொட்டி விற்பானுங் கொள்வானு மன்றி
யிடைச்செட்டி னாற்பொருளை யெய்துவான் போல முடைக்கொட்டி முத்துரைத்து
மூடிக்கொண் டேகுங் குடைச்சிட்ட னாருயிர்க்கோர் கூற்றமே கண்டீர்.
இதுவுமது |
475. |
ஆடுவார் காண்பா ரவரருகே தான்சென்று தோடுவார்ந்
தாலொப்பச் சொல்விரிப்பான் போற்பாவம் கூடுவார் கூடாதார் கொன்றார்தின்
றாரென்னும் சேடனார்க் காண்டுநா மென்றுதான் சென்றாளே.
வேறு |
476. |
அணிசெய் கோழரை யரைநிழ லழகனைப் பொருந்தி மணிக
டாம்பல கதிர்விடு மலருடை மணைமேற் றுணிவு தோற்றினை யெனச்சிலர் துதியொடு
தொழுது பணிய யாதுமோர் பரிவிலன் படம்புதைத் திருந்தான்.
|
477. |
ஆத்த னேயெனத் தெளிந்தவ ணமர்ந்திருந் தவர்க்குச்
சூத்தி ரம்மிது வினையமு மிதுவிது பிறிதாஞ் சாத்தி ரம்மிவை மூன்றென
வன்றவத் தோன்றல் பாத்து ரைக்குந்தன் பதப்பொருள் பலவகைப் படவே.
|
478. |
கந்த மைந்திவை கணிகத்த வாமெனக் கரைந்து முந்தி
நாடினோ ருணரவல்ல தில்லையென் றுரைத்தும் புந்தி யாலங்கோர் புற்கல னுளனெனப்
புணர்த்து மந்தி லாற்சொலாப் பாட்டினோ டியாதுமில் லெனவும்.
|
479. |
தத்து வம்மிவை தாமெனத் தமர்களுக் குரைக்கும்
புத்த னார்தம்மைப் புயலிருங் கூந்தலி பொருந்திப் பித்தர் போற்பல
பிதற்றனீர் பிதற்றிய விவைதா மெத்தி றத்தினு மிசைவின்மை யிசைக்குவ னெனவே.
நீலகேசி கூற்று |
480. |
ஓதி னீர்சொன்ன கந்தமைந் துளவெனி னுருவே வேத னையொடு
குறிசெய்கை யிலவென விரிப்பும் போதியா லங்கோர் புற்கல னுளனெனப்
புணர்ப்பும் யாது மின்மையோ டவாச்சிய மறும்பிற வெனவே. புத்தன் விடை
கூறலும்; நீலகேசி நகைத்தலும்.
|
481. |
ஐந்தில் யான்சொன்ன பலகளு மமைவில வெனினும் கந்த
முண்மைக்கட் கருத்துள தாம்பிற வதனாற் சிந்த மாயவு முளவெனத் தெளியினி
யெனலும் நந்த னார்க்கற முரைத்திர்நீ ரோவென நக்காள்.
நீலகேசி கூற்று |
482. |
இட்ட நீபல வுரைத்தனை யிவற்றுளொன் றொழிய நட்ட
மாயினு நன்மையை நின்வயிற் றருவோய் குட்ட மேமுழு மெய்யினு மெழுந்தவன்
குடுமி தொட்டி யானெனி னுந்தூய னோவது மாமோ.
புத்தன் தன் தத்துவங்களை
விரித்துரைத்தல் |
483. |
நல்ல வேயென நாட்டிய கந்தமிவ் வைந்து மில்ல வேயெனத்
தெருட்டுவ னெடுத்துரை யெனத்தான் சொல்ல வேதுவ ராடைகண் மூடிய சேடன்
மெல்ல வேயிவை கேளென விரித்தவ னுரைக்கும்.
வேறு
ஐங்கந்தங்கள் |
484. |
உருவே திரிவே தனையா றுணர்வும் மருவா தனமாண்
குறியத் துணைசெய் இருவே றவைசெய் கையிரு பதுமாந் திருவே யிவையெம்
பொருடே ரெனவும்.
உருவக்கந்தம் |
485. |
முறைசெப் பியவைந் தினுண்முன் னையுரு வரையிற் பலவட்
டகமுள் ளுறுத்த விறைபட் டனவெட் டெனவொட் டினகே ணறையிற் பொலிகோ தைநறுந்
நுதலே.
இதுவுமது |
486. |
நிலநீ ரெரிகாற் றோடுரு விரதந் நலமா கியநாற் றமொடூ
றிவைதா மிலவே யவையெட் டினும்விட் டதிறஞ் சொலவா முடன்கேட் டொடுதோற்
றமுமாம்.
இதுவுமது |
487. |
வலிதா நிலமை யதுநீர் வெய்துதீக் கலியே தருகாற்
றியக்கம் கருமப் பொலிவேற் பொறையயர்த் தல்புலர்த் துளர்த்தன் மலிபூ
தங்கணான் கின்மாண் பின்னவையே.
நுகர்ச்சிக் கந்தம் |
488. |
இனிவே தனையா வனவின் பமொடு துனிவே தருதுன் பமுமா
மிடையுன் நனிதா நலதீ வினையன் மையினாம் பனிவேயிணைபன் னியதோண் மடவாய்.
அறிவுக்கந்தமும் குறிக்கந்தமும் |
489. |
அறிவா வனதா மினியா வெனினைம் பொறியோ டுமனம்
மிவைபுல் லினவேற் குறிதா மிவையா றினுங்கூறுவதென் னெறியா மிவைநீ
லநிகர்த் தகணாய்.
மூவகை வினை |
490. |
குயலா குயலம் மெனக்கூ றும்வினைப் பயனாற் பலபா
கெனப்பட் டவைதா மயலா மனமே வசிகா யத்தினா மயலா ரிவைதா மினியா ரறிவார்.
கந்தங்களின் தோற்றக்கேடுகள் |
491. |
கடனா கியகந் தமிவைந் துகளும் உடனே யவைதோன் றியொரு
கணத்துட் கெடுமே யவைகேட் டினும்வாட் கணல்லாய் சுடர்மே யசுடர்ந்
நுதிபோன் மெனவும்.
உயிர் |
492. |
கவையொப் பனகை விரலைந்து களும் இவையிப் படிக்கைப்
பிடியென் றதுபோ லவையப் படிக்கந் தங்களைந் துகளும் நவையைப் படுநல்
லுயிரா மெனவும்..
வீடுபேறு |
493. |
அவைதா நிலையா துயரா மசுவம் நவையா ருயிர்நாட்
டிலங்காட் டமிலை யிவைநான் மையென்வாய் மையிவ்வா றுணர்வா ரெவையே
செய்துமெய் துபவீ டுமென்றான்.
வேறு நீலகேசி புத்தன் மெய்க்காட்சிகளை
மறுத்தல் |
494. |
பல்லியல் பாகிப் பரந்தவைங் கந்தமுங் கந்தங்கடாம்
புல்லிய வொற்றுமை யிற்குறி யாகிய பொய்யுயிருஞ் சொல்லிய கேட்டவள் வேட்டக்
குரம்பை சுடுபவர்போ லல்லியங் கோதைநின் காட்சி யழித்திடு வேனெனத்தான்.
|
495. |
பிண்டம் பிரிவில வேயெனச்
சொல்லுத
லாலவற்றுக் குண்டங் கொருகுணி யாங்கவை தாங்குண
மாகுமன்றேல்
விண்டங் கவையவை வேறுள தாதலும்
வேண்டுமன்றோ பண்டங்கு நீசொன்ன முட்டியிற் பஞ்சாங்
குலிகளும்போல்.
இதுவுமது |
496. |
பூதங்க ணான்கும் புகுந்தே தெருட்டலுற் றாயவற்றுக்
கேதமி றன்மை கரும மிரண்டா வியைந்தவைதாம் பேதமு மாமென்ற பெற்றியி னாற்பொரு
ளிற்றென்றலாற் சாதமு மாமுயிர் தன்மையிற் றேற்றத் தவறெவனோ.
இதுவுமது |
497. |
நின்சொல்லப் பட்ட வலிப்புந் தரிப்பு நிலத்தினவே
லென்சொல்லப் பட்ட வுணர்வொடு காட்சி யுயிரனவா முன்சொல்லப் பட்ட நிலந்தா
முடியின் முடிவுளதாம் பின்சொல்லப் பட்ட வுயிரும் பெரிய பிரச்சையினாய்.
இதுவுமது |
498. |
வற்பமல் லானில மில்லெனச் சொல்லுவ னாங்கதுபோற்
பொற்ப மிலாவுயிர் தானுமில் புத்திய லாலெனலும் வற்பமலா நிலமன்னுந்
தரிக்குமென் பாயல்லையோ கற்பமெல் லாம்பிறர்க் கேநின் றுழந்த கருணையினாய்.
இதுவுமது |
499. |
உரிய வலிமையல் லானில மோரல னென்னிருந்தாற் பெரிய
நிலத்தை யறிவிக்கும் பெற்றியில் லாய்பெரிது மரிய வுவிரை யறிவுறக்
காட்டென்றி யெப்பொருளும் தெரியக் குணமுகத் தாலன்றி யென்றுந் தெருட்டுளதோ.
உருவக் கந்தகத்திற்குக்
குற்றங்கூறல் |
500. |
விருத்த நிலைமையும் வேண்டலம் யாமென வேண்டுகின்றீ
ரருத்த மெனக்கொண்ட வட்டகம் யாவையும் விட்டிலவாற் றிருத்தமி றீவயி னீருறை
திட்ட விரோதமன்றோ பொருத்தம லாதன வேசொல்லும் புத்தநின் புத்தியிதோ.
இதுவுமது |
501. |
தன்மை கருக மவற்றன வேயென்ற றானென்னைவே றின்மை
முடியினெ னிட்டமுரைப்பினுங் கெட்டதென்னோ மன்னுமந் நான்கு மறுதலை தத்தமு
ளாதலினா லென்னு மியல்பும் பயனு மழிக்குமென் பேனல்லனோ?
இதுவுமது |
502. |
ஊரிது காடிது தானென லென்னை யொருங்குளவே னீரிது
தீயிது தானென லாமோ நிகழ்வுடனே யாரிவை கேட்டறி வாரவை யட்டக மென்னினலாற்
பேரிது வேயெனச் சொல்லுத றானும் பிழைக்குங்கொலோ.
இதுவுமது |
503. |
தொக்கவை யாயுட னேயவை நிற்பினு
மாங்க வற்றுண்
மிக்கத னாற்பெயர் சொல்லுவன் யானென்று
வேண்டுதியேற் புக்கன தாம்பொறி யானின் புலமன்றிப்
பொய்யெனத்தா னக்கனர் சாக வெனுநீ
யுரைக்கு
நயங்க ளென்றாள்.
இதுவுமது |
504. |
உருவுடை யட்டக மன்றியு மைந்தினுட்
பட்டவெல்லாம் மருவொடு கூடியுந் தீண்டியு மாக்குந்
திறமரிதான்
மருவுடை யார்களை மாயங்கள் சொல்லி
மருட்டியுண்ணுந் திருவுடை யாயவ காயத்துத் தேரை
யடித்தெருட்டாய்.
நுகர்ச்சிக்கந்தமும் குறிக்கந்தமும் |
505. |
திரிவே தனைகளுந் தீரா நுமக்குள
வாதலன்றே
கரிவே தனையவர் காமுறு காமங்
கடிந்ததுதான் பரிவே பெரிதுடை யீர்முன் னுரைத்தபல்
செய்கைகளின் விரிவே யவையோரின் வேதனை
வேறில்லை
யாம்பிறவே.
இதுவுமது |
506. |
உணர்ச்சியி னாற்செய்கை யாக்கியச் செய்கையி
னாலுழப்பாம் உணர்ச்சியி னாங்கோர் பொருட்சுவ டுள்ளது
போல்கின்றதா
லுணர்ச்சியொ டல்லன வொன்றொன்றில் நோக்கில
வாமெனினு மிணர்ச்சி யிழந்து பிறபிற வாகிப்
பெறலிலவே.
அறிவுக்கந்தமும் உயிர்ப்
பொருளுண்மையும் |
507. |
ஆறினி னொன்றே நிகழும்
பொழுதினல்
லாவுணர்வு தேறின வாறவற் றுண்மை யெனக்குத்
தெருட்டனலிந்
தாறின வோவில்ல தாழ்ச்சியி னாலுள
தாமெனினீ கூறிய வாற்றா லுயிருண்மை கூறலுங்
குற்றமென்னோ.
இதுவுமது |
508. |
ஓருணர் வுள்ள பொழுதி னொழிந்த
வுணர்வுகடம் பேரு முணரப் படாமைபெற் றாமென்னும்
பேச்சுமுண்டா லீருணர் வில்லை யிருமூன்
றொருங்குள
வென்றுரைக்கு மோருணர் வேயுடை யீர்சொற்க ளொன்றொன்
றழிப்பனவே.
இதுவுமது |
509. |
ஒன்றே யுணர்வாய் நிகழற்குக்
காரண
மவ்வுணர்வாய் நின்றே யறிவான் றனிமையி னாலெனத்
தேரினிநீ
யன்றே யெனினவை யாறுந்த முண்மையின்
வேறென்னலாற் சென்றே புலந்தலைப் பெய்தலறி வுடன்
சீர்க்குமன்றே.
இதுவுமது |
510. |
இச்சையில் லாமையி னெல்லா
மொருங்குண
ராவெனினு மிச்சையெல் லாத்திற்கும் வேறே
லொருங்குட
னெய்துமன்றி யிச்சையெல் லாத்திற்கு மொன்றேற் குணிப்பொரு
ளிச்சையென்றாய் தச்சனஞ் சிச்சா ரகழ்கள்வ னென்கின்ற
தன்மையினாய்.
இதுவுமது |
511. |
பிறந்து பிறந்துநி னிச்சை
கெடலன்றிப்
பின்னொன்றின்மேற் சிறந்து சிறந்தாங் குணர்ச்சி விரியுந்
திறமரிதாற் கறந்த கறந்த கலஞ்சுவைத்
திட்டாற்
கறைக்கலங்க ணிறைந்த நிறைந்தவை பாறயிர் மோரெனத்
தானென்னையோ.
இதுவுமது |
512. |
எல்லா வுணர்ச்சியு மிச்சை வழியா
லெழுமெனலா
லில்லாம் பிறநுன திச்சையு மிச்சைமு
னின்மையினால் வல்லா யிதற்குமுண் டாயின் வரம்பின்மை
யாமதனாற் சொல்லா விடுந்திற மென்னோ
விரிவிற்குச்
சூனியமே.
உயிரும் ஆலயவிஞ்ஞானமும் |
513. |
வெளிப்பட்டு நின்றதொன் றன்றி
யொழிந்தவிஞ்
ஞானங்கடாங் குளித்தன தாங்கொள்ளப் பாடின்மை யாலின்மை
கூறிநின்றேற் களித்தவை தங்களுக் காலய மாலய
மாமெனநீ யொளித்தனை கொள்ளலுற் றாயுயிர் தன்னையோர்
பேருரைத்தே.
இதுவுமது |
514. |
இருளுடை மாலைக்கண் டோன்றா
தனெக்கென
நண்பகலே பொருளுடை யார்பொருள் கொள்வா
னகழுநன்
போன்றிலையோ வருளுடை யார்சொல்லு மாருயி ராலய
மென்றிருக்கும்
மருளுடை யாய்நின் மாண்பழிந் தெற்றான்
மயங்கினையோ.
உணர்வு பிறக்கும் முறை |
515. |
மூக்கொடு நாமெய்யும் மூன்றுந்தம்
மூன்று
புலன்களையும் தாக்கிய போழ்தே யறிதலுந் தத்துவ
மாமென்றியா
லாக்கிய மூன்றி லறிவு மருவா
லவையொருவாப் பாக்கியஞ் செய்தாய் பரிசங்கள் கொள்ளும்
பரிசென்னையோ.
இதுவுமது |
516. |
உற்றில வாயொலி கொள்ளுஞ்
செவியென
வோதுகின்றாய் கற்றிலை மெய்ம்மைநீ கட்புலந்
தன்னோடோர்
காலத்தினாற் பெற்றில நாமதன் பின்கொள
றானும்
பெருந்தவத்தாய் மற்றிது தான்றன் பொறியுறு காறும்
வரலினன்றே.
புத்தன் கூற்றும் நீலகேசி
தேற்றுரையும் |
517. |
வாய்த்துரை யீதனெ வாம
னிதுசொல்லும்
வந்துறுமேற் சேய்த்தனெக் கோடலுஞ் சேரா
தொலிசெவிக்
கண்ணதெனி னீத்தன தாமல வாயினு நீசொல்லு
முற்றறிவின்
றீத்தனைப் போலவுந் தேறென் றவனைத்
தெருட்டினளே.
கணிக மேற்கோளுக்கு நூற் பயிற்சி
கூடாமை |
518. |
பெற்ற வெழுத்தேற் பிரிவின்க
ணாறாம்
பெயர் நுனது முற்ற வுணர்ந்து முடித்துரை யென்னை
முதலெழுத்துப் பற்றின சித்தம் பலவுணர்ந் தேயவை
பாழ்படலாற்
கற்றினி யெல்லாக் கணக்குங் கலந்துரை
காண்பென்னையோ.
இதுவுமது |
519. |
ஓதிய கந்தங்க ளொற்றுமை யாலுயி
ரென்றதுபோற்
போதிய னாய்நின்னைப் புத்தனென் றாலது
பொய்பிறவோ வாதியி னாம்புத்தி யாவதல் லாலந்தத்
தன்களையா நீதியி னாற்சொல்லி நின்றுநின்
பேரு
முணர்விலையே.
இதுவுமது |
520. |
அன்றியு நின்சொ லறிபொரு டானில
வாதலினா
லொன்றி யுரைத்த வுனக்கு மெனைத்து
முணர்வருமை யென்றினி யாமுந் தெளிந்தோ மிதனா
லெனவுரைத்தாள் வென்றி யுடையன வல்லது
சொல்லா
விரிகுழலே.
வருகின்ற இரண்டு செய்யுளும் நீலகேசி
கூற்றும் புத்தன் விடையுமாய்க் குளகம். குறிக்கந்தம்
வேறு |
521. |
ஆறுகுறி யாவனவு மாயபுலந் தாமும் கூறுகுறி யாறுமவை
கொள்ளும்வகை தாமும் மாறுகுறி மாறிக்குறி யென்றுமயக் காதே வேறுகுறி
தாமுணர்வின் விள்ளுவ லினிக்கேள்.
|
522. |
கண்ணின்குறி மூக்கின்குறி மெய்யின்குறி செவியி
னண்ணுங்குறி நாவின்குறி நாடின் மனத்தோடு மெண்ணுங்குறி யாவனவிவ் வாறுமெனக்
கொண்ணீ பண்ணின்குறி யேசுமொழிப் பாவையெனச் சொல்லும்.
நீலகேசி கூற்று |
523. |
அறிவுகுறி யென்பனவி னாயபுல மொன்றே லறிவுகுறி
யென்பனவு மாகுமவை யொன்றே பிறிதுகொளு புலமுள்ள தாகுமெனிற் பேதம்
சிறிதுநெறி காட்டினது செல்லுமெனச் சொல்லும்.
இதுவுமது |
524. |
உண்மைகுறி கொள்ளுமுணர் வின்புலம தெய்தா
தெண்ணினுணர் வோடுகுறி யிவ்வகைய வென்னி லுண்மையுணர் வின்புலமோ டொன்றெனில
தொன்றே நண்ணலில வேலுணர்வி னாயபுல னின்றே.
இதுவுமது |
525. |
ஒருங்குகுறி யோடுணர்வு
தோன்றியுடன் கொள்க வொருங்குபுலந் தோன்றியவை
யொத்தகெட லானா லொருங்குகுறி யோடுணர்வு தோன்றலில வாமே
லொருங்குபுலந் தோன்றுதலி னொன்றுமுணர் வில்லை.
குயலாகுயலக் குறிக்கந்தங்கள் வேறு |
526. |
உள்ளஞ் சொல்லுடம் பென்றிவை மூன்றினாற் கொள்ளு
நுங்குச லாகுச லங்கடா மெள்ளி னேரு மிவையின்மை காட்டுவே னுள்ளக் காக
வுரைத்தவம் மூன்றினுள்.
இதுவுமது |
527. |
வேண்ட லேயென்றும் வெஃகுத லாயினா லீண்டி நின்றநி
னித்தொடைப் பாடெலாந் தீண்ட லன்னெனத் தீண்டிய வந்தவோ வீண்டை யேநிற்ப
விஃது மறிகிலை.
இதுவுமது |
528. |
நன்மை வெஃகுதல் நன்றெனச் சொல்லலு மன்மை வெஃகுத
லன்றெனக் கூறலு மின்மை யால்வெஃக லென்றதுந் தீமையி னின்மை யாய
நெறியொழி நீயினி.
இதுவுமது |
529. |
தீய வாய வெகுளியை யொப்பன மாய மான முலோப மனத்தன
காய்வு செய்திலை கண்டுநின் கள்ளமே நீய வையவை நேர்தலி னாம்பிற.
பொல்லாக் காட்சி |
530. |
காட்சி நல்லன காண்ட லனைத்தினு மாட்சி யாமெனின்
மன்னுமஃ தொட்டுவேன் வேட்கை யாலிது நன்றென வேண்டினு மாட்சி யொட்டி
வழித்தன னல்லனோ.
சொல்லில் தோன்றுந் தீவினைகள் |
531. |
பொய்கு றள்ளை கடுஞ்சொற் பயனில்சொ னைத லில்லன
நான்கிவை நாவினாஞ் செய்கை தீயன வாமெனச் செப்பினீ ரைய நன்மையென்
றீரவற் றப்புடை.
இதுவுமது |
532. |
மண்டை கெண்டிகை மாட மடாமனை கொண்டை குண்டிகை கூறை
குடங்குடை யுண்டி கட்டி லுடம்புயி ராதிய பிண்ட மாய பிறபிற
யாவையும்.
இதுவுமது |
533. |
கூட்ட மான குறியெனி னலதை பூட்ட லங்கோர்
பொருளின்மை வேண்டியு மீட்டு மீட்டிவை சொல்லின மெய்யுரை நாட்டு
மாறென்கொ லோவிளி நாசநீ.
வேறு
சத்தை |
534. |
நிலம்பொய் நீர்பொய் நெடுநகர் தாமும்பொய் கலம்பொய்
காற்றொடு தீயும்பொய் காடும்பொய் குலம்பொய் யேயெனக் கூறுஞ்செங் கூறையாய்
சலம்பொய் யன்றிதொன் றேநுங்கள் சத்தையே.
குறளை |
535. |
குற்ற மென்ற குறளையே யொப்பன மற்றுஞ் சால வுளபிற
மாண்பில வொற்றைப் பெண்ணுரை யாடுதல் போகங்கள் கற்ற லேகடுஞ் சொல்லின்ன
காத்தலும்.
கடுஞ்சொல் |
536. |
பையச் சொல்லுத னல்வினைப் பாலென்றா லெய்யக் குற்ற
வெறியப் புணர்க்குங்கால் வையத் தியாவரு மந்திர மாமவை செய்யச்
சொல்லுநர் செவ்விய ராபவோ.
இதுவுமது |
537. |
கடுக்கத் தாமடி கள்ளெனக் காய்ஞர்யா ரொடுக்கச்
சாம்பிவை தாலுவப் பாரில்லை கொடுக்க வென்றல் குசலமன் றென்பதோ படுக்க
லுற்ற பதகநின் பாடமே.
பயனில் சொல் |
538. |
பாவ மாம்பய னில்லன சொல்லலேற் பூவ மேபொருள்
கைக்கொண்டு புற்கலர் சாவச் சொல்லுவ தத்துவ மாம்பிற வேவ னன்றென்றி
யொப்பவொன் றில்லையேல்.
இதுவுமது |
539. |
காயத் தாற்கொலை காமங் களவென நீயத் தாசொன்ன நேருந்
திறமென்னோ மாயத் தான்மன மின்றி யவையவை தேயத் தியாருளர் செய்பவ
ரென்பவே.
உடம்பிற் றோன்றும் பிறதீவினைகள் |
540. |
வழிமுள் ளூன்றன் மனைசுடன் மாந்தரைக் குழியு
ளுந்துதல் கோயிற் கலஞ்செய்த லொழிவில் யானைமுன் னோட்டலோ டின்னவும்
பழியும் பாவமு மாக்குவ வல்லவோ.
பௌத்தர் கூறும் கொலையின் இலக்கணம் |
541. |
ஒன்றி நின்ற வுயிரை யுயிரிது வென்று சிந்தித்
தழிப்ப னெனவெண்ணி நன்றி யிஃறொழி றோற்ற நவையினாற் கொன்ற தேகொலை
யென்றைந்திற் கூறினாய்.
இதுவுமது |
542. |
தேவ னையிவன் றேவ னெனவெண்ணிப் பாவனையிற் பணியு
மனத்தனாய்த் தூவென மும்மையே தோற்றித் தொழானங்கோர் தாவ னைதொழு
தான்றவ றெய்துமோ.
இதுவுமது |
543. |
ஒத்த வன்றனை யுறுபகை யேயெனக் குத்தி னாற்குங்
கொலைவினை யில்லெனப் புத்த னீருரைத் தீரங்கோர் புற்கலன் செத்த வாறது
சிந்திக்கற் பாலதே.
நீலகேசி கொலைவினைபற்றித் தன்
கருத்துரைத்தல் |
544. |
கொன்ற பாவமுண் டாயின் குறட்கண்ணும் ஒன்று மேயென்
றுரைப்பனொப் பாரியார் பொன்றினும் புத்த ரேநீவிர் சொல்லின சென்று
சேர்தலைச் சித்தம தின்மையால்.
இதுவுமது |
545. |
பட்டி லன்பகை யாலெய்து பாவமங் கொட்டி நீயவ்
வுயிர்க்கொலை யாலென்னில் துட்டனைத் தொழு தோன்றுறந் தானெனக் கெட்ட
னன்னிது கேட்க வினைநிலை.
இதுவுமது |
546. |
ஆய்ந்த வைந்தினு மாம்வினை யார்ப்பெனின் வீய்ந்த
தின்மையின் வெய்ய வவீசிதான் காந்தி பாலி யிரங்கக் கலகனைப் போழ்ந்து
கோடல் பொருந்தல தொக்குமே.
நீலகேசியார் கொலை முதலியன பற்றிய
ஆருகதர்மேற்கோள் கூறுதல் |
547. |
கொல்வ னென்றவன் கூர்ம்படை குன்றினுஞ் செல்வ
னென்றய லார்மனைச் சேரினுங் கல்லு வானொ டெல்லார்க்குங் கருவினை சொல்லு
வானோ டுலகமுஞ் சுற்றமே.
காமத்தீவினை |
548. |
துப்பி னால்வினை சொல்லலன் யானென்று வப்பி
னார்முலை காய்வது வாமனீ யிப்ப லாரிடை யென்னையி தென்பதோ செப்பி னாலுஞ்
சிதைகின்ற தில்லையால்.
களவு |
549. |
பண்டு தான்வைத்தப் பண்டத்தை யொப்பதொன் றுண்ட
தாயி னதுவது வேயெனக் கொண்டு போகினுங் கொள்ளினுங் குற்றமில் கண்ட
போழ்துங் களவன்ற தென்றலால்
காமம் |
550. |
பஞ்சி மெல்லடி நோவப் பகனடந் தஞ்சி லோதியு மல்க
வவளெனத் துஞ்சு மில்லுடை யாளைச் சுமந்துபோய் வஞ்சி யான்கொள்க
வாழ்கபுத் தன்னென.
|
551. |
கந்த மாவன காகதந் தம்மெனப் பந்த மின்மையிற்
பாழ்செய்திட் டேனினி யந்தி னீசொன்ன வாரிய சத்தையுஞ் சிந்தை
யுஞ்சிதைப் பேன்சில சொல்லினால்.
நீலகேசி புத்தனை நோக்கிக் கூறல்
வேறு |
552. |
பிண்டமொன் றாயினும் பிரியநோக் கின்னது கொண்டுநின்
றாம்பிற கூறினைந் தேயெனக் கண்டநா மெய்ம்மையுங் காட்டுவா யீங்கெனி
னுண்டுதா மாகுல முணர்வுதான் கூறுவேம்.
துன்பம் |
553. |
முழுதுந்துன் பம்மென மொழியினஃ தாகிய பொழுதினா
னல்லவும் புல்லுமா மாதலாற் பழுதுதா னவ்வுரை பன்மைதா னின்மையில்
இழுதையா னான்குள வென்றுசொன் னாயென.
இதுவுமது |
554. |
உழப்புமூன் றும்முட னொக்கநோக் கின்னது
வழுக்கில்லா வாய்மையேல் வாய்மை சொல்லியினி யிழுக்கினாய் நீபிறர்க்
கின்பமீந் தேனெனல் பழுக்களே காய்வது பண்டுமுண் டேபிற.
இதுவுமது |
555. |
துக்கமே யாயினாற் றொழிலுமொன் றாய்ப்பய மொக்கவே
வேண்டுமா லுயர்விலாக் கீழ்க்கதி புக்குவீழ்ந் தார்பிறர் பொங்கிநின்
றாரெமர் மிக்கதே யென்னெறி யொன்றுவேண் டல்லெவன்.
இதுவுமது |
556. |
உறுதிகூ றல்லொழி யொழுக்கங்காத் தல்லொழி யிறுதியிஃ
றுன்பமே யின்பமில் லாயினாற் சிறிதுநீ தீப்புகாய் சேர்வதென் னைந்நிழல்
இறுதியில் லாத்துய ரின்னசெய் யாயினி.
தூய்மையின்மை
வேறு |
557. |
தூய்மை யில்லை முழுவது மென்பதை வாயும் நீசொல்லும்
வாய்மைய தாயினாற் றாமஞ் சாந்தம் புனைபவர் தாமெலாம் ஏம நன்னெறி கண்டில
ரேபிற.
இதுவுமது |
558. |
ஓது மோத்து மொழுக்குநின் னுண்டியுங் கோதில்
தூய்மைய வாமெனக் கூறியும் யாது நீயசு வாமெனச் சொல்லுவாய் நாத னீபிற
நன்கறிந் தாயவை.
இதுவுமது |
559. |
நீயி னேசொன்ன மெய்ம்மையை நோக்கலார் தூய்மை
யாம்பிறர் தூய்மை யிலரென்று காய்ப வேகவி மண்டைகள் என்றனள் வேயி னன்மை
விலக்கிய தோளினாள்.
இதுவுமது |
560. |
சென்று சென்றுன செந்நெறி கண்டவர் பின்றைத் தூய்மை
பெறுவது மில்லையே லின்று மின்று மியல்வது வாக்கொள்வாய்க் கின்றித்
தூய்தன்மை யென்னை யிழைத்ததோ.
இதுவுமது |
561. |
அழுகு பூசமி னங்கண மாடுமின் கழுகு ணூத்தையோ
டேனவுங் கவ்வுமின் மெழுகு மின்னிடை மெச்சிய மல்லதின் முழுதுந்
தூய்தன்மை சொல்லிய மூடர்கள்.
நிலையாமை
வேறு |
562. |
நில்லா வென்னி னில்லன்மையாலும் நில்லாவா யில்லா
மென்ற லின்புறு மேற்கோ ளிழுக்காகு மெல்லாந் தானே யென்றலி னேன விழவெய்தி
நல்லாய் சொன்ன நான்மையை நாட்டுந் திறமென்னோ.
இதுவுமது |
563. |
உழுவார் வணிக ரென்றிவ ருள்ளிட்டுலகத்துள்
வழுவார்க் கீய வான்பொருள் வேறாய் மறியும்மே லழுவார் தமையுங் காண்டுமஃ
தாமாறுரையீரோ புழுவாழ் கென்று புனன்மழை தந்த புகழுள்ளீ்ர்.
இதுவுமது |
564. |
தெய்வத மென்று தேறினர் செய்யுஞ் சிறப்பென்றும்
கையது வீயக் காமுறு தானக் கலப்பென்று மெய்தல ரேயின் னிவையிவை யெல்லா
மிழுக்காவோ மெய்பிளந் திட்டு வேண்டுநர்க் கீயும் விழுமிய்யீர்.
இதுவுமது |
565. |
ஒள்ளிழை யாரே யுறுபொருள் பிச்சைக் குரியார்கள்
தள்ளின போழ்தின் னவையவை தன்னைத் தலைநிற்பார் கள்ளர்க ளன்மை காட்டலு மாமோ
கருணையாற் பிள்ளைக ளேங்கப் பிறர்களுக் கீந்த பெருமைய்யீர்.
இதுவுமது |
566. |
நில்லா தாகக் கூறுத றன்னை நெறியென்றீர் பல்வகை
யானும் பாழ்செய்து பின்னே பரிகாரஞ் சொல்லுவி ராயிற் சொல்லிய மெய்ம்மை
துறவாமன் கொல்சின வேழங் குறிநிலை செய்த குணத்தின்னீர்.
உயிருண்மை |
567. |
ஓதி யாது முயிரில்லை யென்ப துரைத்து நின்றாயேற்
கோதி லங்கோர் குறியுயிரே கொள்ளி னுங்கோளழிவாம வேதி லார்சொல் பரிகற்ப னையி
னாலின் மைசொல்லி னீதி யாநின் கருத்தினா லுண்மை யுந்நேர்ந் தாயன்றோ.
இதுவுமது |
568. |
ஒன்று மில்லை யுயிரென்று ரைத்தநீ
யுண்மை யின்மை நின்ற வாறே நெறியாக நேர்கின்
றாய்நீ யாவனோ வன்றி முன்சொன் னவத்திறமெத் திறத்தா
னும்மா காமையா லின்றுந் நின்றுந் நீமொழிந்தா யெம்மிறை
யேயிறை யாகவே.
இதுவுமது |
569. |
போற லானு மதுபோ லாதென் றும்பு
னைவினாலும்
வேறல் லதில் லையெனவும் வினைவ லியும்யோ
கின்னாலும் தேறி நின்ற பொழுதோடிவ் வேழாந்திறத்தி
னாலுங் கூற லாமோ மீட்டுணர்வு
கொண்டு
ணர்வா னில்லாக்கால்.
இதுவுமது |
570. |
நாம சீவன் முதலாய நான்மை களின்முன் மூன்றிலுந்
தூய்மை சீவனுடைத்தாகு மன்றே னின்சொன் மாறுமாந் தாம சீவன் முழுவது மென்று
தருக்கு கின்றாய் வாம சீவ னிவற்றினா லுண்மை மறுக்க லாகுமோ.
புத்தன் வெகுண்டுரைத்தல் |
571. |
அறியும் மெய்ம்மை யும்மைங்கந்
தம்மாட்
சிய்யு மல்லவையுஞ் சிறிதும் மென்முன் னிலையின்மை காட்டிச்
சிதைத்தே னாலினிப் பிறிதொன் றுண்டே லுரைய்யென வுரைத்தாள்
புத்தன் றான்பெரிதும்
மெறிபட் டென்னெ றியினாலே யடக்கு
வன்னி னையுமென்றான்.
நீலகேசி அவள் சமயநெறியினை
இகழ்தல்
வேறு |
572. |
ஆதி யலாத வகன்றடு மாற்றமுஞ் சாதி யறுக்குந் தகையு
மிவையென வோதி வினைப்பயத் தொப்புரைப் பார்க்கன்றி நீதி யிலாநெறி நேரல
னென்றாள்.
புத்தன் கூற்று |
573. |
வித்தின் வழிவழித் தோன்றும் முளைகிளை சத்தியி
னாயசந் தானத்தை மாற்றென்பன் வெத்தவ வித்தினின் வேறன்று வீடிது தத்துவ
மாக்கொ டளிரிய லாயே.
இதுவுமது |
574. |
வினையு முளது பயனு முளது தினையனைத் தாயினுஞ்
செய்ஞ்ஞனு மில்லை யெனையவுங் கந்த மிருகண நில்லா நினையின்மற் றென்றா
னெறிபயந் தானே.
நீலகேசி கூற்று |
575. |
குணம்பொரு ளென்றி கொடைபொரு ளென்றி யுணர்ந்துசெய்
துண்பா னொருவனி லென்றி கணந்தனி லேநிலை கந்தமு மாயக்காற் பிணங்குவ
தொக்குநின் பேரெமக் கென்றாள்.
புத்தன் கூற்று |
576. |
தீதுள்ள மேலது தீயுழப் பேசெய்யும் யாதுள்ள
மாண்புள மேலின்ப மாமென்னை மாதுளம் பீசமுண் மாணரக் கின்னிறம்
போதுள்ளங் காண்பது போலமற் றென்றான்.
வருகின்ற சொய்யுள் மூன்றும் நீலகேசி
புத்தன் கூற்றினை விரித்தோதிய படியாம் (இம் மூன்றும் குளகம்) |
577. |
எட்டி னியன்ற விரண்டினு ளாங்கவை
யட்ட
வரத்தமு மல்லது மாய்ப்பய மட்டார் மலர்க்கண்ணுஞ் செம்மையு மற்றுமா
விட்டமுங்
காட்டுவ னீங்கிது போல ஐந்தி னியன்றவர் பிண்டத்த ராகிய
மைந்த
ரிருவர் குசலா குசலத்தர் சிந்தையி னல்லவன் றன்வழித் தேவனும்
வெந்தொழி
லான்வழி வீறி னரகனும்.
இதுவுமது |
578. |
பீச மெனப்பட்ட தெட்டே பிறிதங் கொன் றாசொன்று
மில்லைய வைந்திற்கு மன்னது நீ சொன்ன வாறிது நேருந் திறமென்னை யேசுவன்
கேள்யா னெடுத்தினி யென்றாள்.
நீலகேசி குற்றங் கூறுதல் |
579. |
அயலரக் கட்டக பீசமுண் டாங்கு வியலகத்
தைந்திற்கும் வேறொன்று காட்டாய் குயலமு மல்லது மாயினன் றாகும்
மயல்படைத் தாயொழி மாதுளங் காட்டல்.
இதுவுமது |
580. |
பூவின்கட் காட்டல் பொருந்தா ததன்வழி மாவின்க ணாக
மகன்செய் வினைப்பயன் தேவன்கட் போலத் திருந்திய மாதுளஞ் சாவின்கட்
செய்கையுஞ் சாங்களைந் தாயோ.
இதுவுமது |
581. |
வித்தொடு பூவின்கண் வேற்றுமை காட்டினும் துத்தல்
குழவி கிழவன்கட் சொல்லென்பன் பித்துடை யார்போற் பிதற்றி வினைப்பய
மெத்திறத் தின்னு மியைத் துரைக் கில்லாய்.
இதுவுமது |
582. |
அங்குரந் தன்கண்ணுஞ் செல்லா தரக்கொடு மங்கின
பீசத் துருவ மலரின்கட் டங்கின வென்னுஞ்சொற் றத்துவ மாக்கொண்ட வங்குலி
மாரனை யாதன்மற் றென்னாய்.
இதுவுமது |
583. |
அப்படி யாலரக் காமது போன்மெனிற் றப்படை யானுழப்
பெய்வழித் தங்குத றுப்புடை யான்சுர னாகிய வன்றுய்க்க லிப்படி யாயினீ
யென்றுரை யாயோ.
இதுவுமது |
584. |
எம்மை யுவப்ப வினைவழித் துப்பெனின் செம்மை வழியது
தீஞ்சுவை யென்றில்லை யெம்மை வினைவினை யாக்குநின் பூவுரை யிம்மையோ
டும்மை யிவையிலை யாலோ.
இதுவுமது |
585. |
உண்டது போலு முறுபயன் பன்மலர் கண்டது காரண மாகக்
கருதினு மண்டையா மான்றசை மீன்றடி தோன்றிய வண்டுண வாகலு மாமத னாலே.
இதுவுமது |
586. |
தீயுழப் பேசெயுந் தீவினை யென்பது வாயுழப் பாம்வழி
யேபுகுந் தாயினி நோயுழப் பாகிய நுஞ்செய்கை யாவையும் நீயுழப்
பாய்பிறர்க் கேயுழந் தாயால்.
இதுவுமது |
587. |
உள்ளம் வினையென வோதினை யேற்செய்கை யெள்ளின்
றுணையுமஃ தின்மை யினைந்தனெக் கொள்ளுந் திறமென்னை கூறாய் குணந்தினிக்
கள்ளமல் லாலென்றுங் கட்டுரை யாயால்.
இதுவுமது |
588. |
நின்னுடை யுள்ளமுஞ் செய்கையு மொன்றெனிற் றன்னிடை
யெய்துந் தரும தருமிமற் றென்னிடைக் கொண்டிலை யெங்குப்பெற் றாயிது
முன்னுடம் பாட்டின் முரணுள தாமால்.
இதுவுமது |
589. |
சித்தமுஞ் செய்கையும் வேறென்றி யேயெனி லொத்த
வினையுடன் பாடின்றி யாமினித் துத்த லையாதின் வழித்தனெச் சொல்லுதி
யொத்திய வல்ல துரையலை யாயால்.
இதுவுமது |
590. |
கண்டுணர்ந் தார்வத்தி னாற்செய்கை யாதலை யுண்டெனி
னாற்குண மொன்றினுக் கொட்டினை பிண்டிநீ ழலவன் பேரறஞ் சார்தலிற்
கொண்டநின் கோளின்கட் குற்றமுண் டாமோ.
இதுவுமது |
591. |
விளைவத னால்வினை யாக்குமென் பார்சொ லுளைவதிங்
கென்செய வோவுணர் வில்லாய் தளைபெய்து வைத்தென்னைத் தம்பொறி யெல்லா
மளைவது நன்றிது தானற மாமேல்.
இதுவுமது |
592. |
ஆர்வத்தி னால்வினை யாக்கு மெனச்சொல்லி
னார்வத்தைச் சித்தமென் றாருரைப் பாரினிச் சேர்வித்த துப்பினிற் செய்கையு
மாதலை நேர்வித்த வாறது நீயறி யாயால்.
இதுவுமது |
593. |
உணர்வினை ஆர்வ மெனவுரைப் பாயேற் புணரும்
பிறர்கடம் பொற்றொடி யார்மே லுணர்வன்ற தார்வ முழப்பெனச் சொல்லி
னிணர்பிரி யாத்துப்பி னால்வினை யென்றாய்.
இதுவுமது |
594. |
சித்தமுடைச் செய்கை செய்வினை யாதலின் சித்த
முடைத்துப்புஞ் செய்வினை யாம்பிற சித்தம் வினையெனச் செப்புத லாலெங்குச்
சித்தமுண் டவ்வழிச் செய்கையு முண்டே.
இதுவுமது |
595. |
செய்கையி னாற்றுப்பு மாக்கியத் துப்பினிற்
செய்கையு மாம்வகை செப்புவித் தேனினிப் பொய்கைசெய் தேசொன்ன பூவொடு
வித்துரை வைகவென் றாண்மல ருண்கண் மடவாள்.
இதுவுமது |
596. |
இருவகைப் பீசத் தியல்வு மழித்துத் திருவகைத்
தேவொடு பூவுஞ் சிதைத்தே மருவுகை யாய்நின் மதுரஞ்செய் மாவும் தருவனை
யாயிற் றகரு மதுபோல்.
இதுவுமது |
597. |
வலிசெய்து பீசத்தின் மாண்பு மழித்திட் டலிசெய்து
விட்டே னமையு மதன்மேற் பலிசையி னீசொல்லும் பாடங்க ளெல்லாம் நலிவனொன்
றொன்றா நடுவுணர்ந் தென்றாள்.
இதுவுமது |
598. |
பிறந்தவப் பிண்டம் வினையினோ டாங்கே யிறந்தன
வெத்திறத் தின்னுமற் றென்றாற் சிறந்தவத் தேவெய்திச் சேர்தலுஞ் சீரா
தறஞ்செய் தறானு மவம்பிற வன்றே.
புத்தன் கூற்று |
599. |
உரந்தனை யாது மொடுக்ககி லாளகிச் சுரந்தபல்
குற்றஞ் சொலக்கேட் டிருந்தான் பரந்தினி நீசொன்ன பல்வழி யெல்லாங்
கரந்தன போதலைக் காட்டுவன் கேணீ.
இதுவுமது |
600. |
அரக்கொடு பீச மறக்கெட்ட வாற்றல் கரப்பது போலிடைக்
காண்பரி தாகி மரத்திடை சென்று மலரின்கட் டோன்றிப் பரக்குமென்
றேன்பயம் பைந்தொடி யென்றான்.
இதுவுமது |
601. |
அன்னணஞ் செய்தா னறங்கெட் டவன்வழித் துன்னுஞ்
சந்தானத் தொடர்ச்சி நிகழ்ச்சியிற் பின்னை யதுபெறு மாதலின் யான்கண்ட
நன்னெறி நின்னா லறிவரி தென்றான்.
நீலகேசி கூற்று |
602. |
கந்தங்க ளெல்லாங் கடையறக் கெட்டக்க ணந்தமி
லாக்குற்ற மாமெனச் சொல்லுஞ் சந்தங்க டம்முட் சவலைச் சந்தானமும் வந்தஃ
தவென் செய்யும் வாமமாற் றென்றாள்.
இதுவுமது |
603. |
ஆற்ற மகன்கெட்ட போழ்தே யமரிற் றோற்றமு மென்னை
துடித விமானத்து ளேற்ற தவத்தவன் றேவென லென்கொல் சாற்றுஞ்சந்
தானத்தைச் சந்தித்துக் காட்டாய்.
இதுவுமது |
604. |
மக்க ளுடம்பொடு தேவ ருடம்பிடை மிக்க விடம்பெரு
வெள்ளிடை யாலிது புக்க தொடர்வில்லை யாதலி னீகொண்ட பக்க முடன்கெடு
மாலென்னை பாவம்.
இதுவுமது |
605. |
புளிபொறி யாடிநிழ றண்மதி யின்ன தெளிவுள தாஞ்செல
வின்முடி வென்னில் விளிபவ னுளபொழு தேவினை துய்க்கு மொளிகிளர் தேவ
னுளனென்னு மாறோ.
இதுவுமது |
606. |
சென்றில தேலிடை யற்றுழித் தோன்றுக வென்றலு
மிங்குள தோவது தானெனி னொன்றல பல்பொரு டாமொளி யாதிய நின்றல வோவுல
கெங்கும் நிறைந்தே.
இதுவுமது |
607. |
தண்மதி கெட்டதன் சாயை யுடன்பெற உண்மை யுண்டாயினி
னொத்துரை யொட்டுவன் கண்மதி யாததெக் காரிய மேயின்ன வெண்மதி யாயை
விலக்குநர் யாரோ.
இதுவுமது |
608. |
மதியென்று மில்லெனி னில்லொளி தானும் புதியதும்
பாழது பொன்றிய போழ்தே கதியினை நாட்டிய காட்டி யெமக்கிங் கதுவென்னை
சொல்லிய வாறுரை யாத்தா.
இதுவுமது |
609. |
அடியொடு பூவி னிடையற வின்றி நெடியதோர் கொம்பினை
நீமறந் தாயோ மடியிலார் செய்த மானுயர் தெய்வப் படியிது வென்றிடை
பாழ்செய்திட் டாயால்.
இதுவுமது |
610. |
தோற்ற மிடையற வில்லாத் தொடர்ச்சியைச் சாற்றுதும்
யாமுஞ்சந் தான மெனவென்னிற் காற்றுஞ் சுடருங் கரகத்துட் டாரையு மேற்றன
வல்ல விரண்டுண்மை யாலே.
இதுவுமது |
611. |
பித்தொடு கனவிடைப் பேயின் மயங்குநர்க் கொத்த
வுணர்வுண்மை யொட்டல தென்செய தத்துவ மாயசந் தான முளதெனிற் புத்தநின்
சொற்கள் பொருளில வேயால்.
இதுவுமது |
612. |
மூத்தல் வகையு முதலத னைம்மையு மாத்த கணந்தோ
றலர்ந்த நிகழ்ச்சியுஞ் சாத்திரத் தாலத் தவிரன்கட் டாழ்ச்சியும்
போத்தந்து காட்டுந் திறமென்னை புத்தா.
இதுவுமது |
613. |
கப்பம் பலபல கண்ணிமை யானுக்குத் துப்பு
முரைத்தென்னை தோன்றிய வக்கணத் தொக்க விளைவுரைப் பாய்பின் வழிவழிச்
செப்புதி யேற்செய்கை சென்றுசென் றுண்டே.
இதுவுமது |
614. |
காரண மென்னினுஞ் சென்றின்மை யாலில்லை ஏரண தேவ
விழுதைமை சொல்லுதி யூருணி நீர்நிறை வுண்டே யுறுபுனல் வாரண வாய்க்கால்
வரவில்லை யாக்கால்.
இதுவுமது |
615. |
நில்லா தறக்கெடுந் தோன்றிற்றுந் தோற்றமு மெல்லா
வகையினு மில்லதற் கேலில்லை சொல்லாய் தொடர்ச்சி தொடர்ச்சியென் றேநின்று
பல்லார் களையும் படுத்துண்ணும் பண்பா.
நூலாசிரியர் கூற்று |
616. |
சுடருடைத் தோற்றத் தொடர்ச்சியைச் சொல்லி
யிடருடைத் தாக விவையிவை காட்டி யடர்படுத் திட்டாட் கதற்கொன்று நாடிச்
சடருடை வாசனை சாதிக்க லுற்றான்.
பொருளாற்றல் (வாசனை) நீலகேசி கூற்று |
617. |
கெட்டபி னாற்றல்க ளெல்லாம் வழியதற் கொட்டு
நறுமலர் வாசமோ டோட்டின்கட் சுட்டுவ தொப்ப வெனச்சொல்லு நீகண்ட விட்ட
மிவற்றோ டியையல தென்றாள்.
இதுவுமது |
618. |
முன்னைய துள்ள பொழுதத்து மற்றதன் பின்னைய தில்லை
யதுபெற்ற போழ்து தன்னையு மில்லை யெனச்சொல்லின் வாசனை யென்னை யியையுந்
திறமிவை தானே.
இதுவுமது |
619. |
ஓடு மலரு மொருங்குள வாதலிற் கூடும் வாசமுங்
குற்றமொன் றில்லெனிற் கேடும் பிறப்பு முடனில்லை யாதலிற் கூடல வென்பது
கூறின மன்றே.
இதுவுமது |
620. |
கெடுவத னுண்ணின்று தோன்றுவ தன்கண் வடுவறச்
செய்வது வாசனை யென்னப் படுவதொன் றன்றுநின் பக்கத்தை யெல்லாஞ்
சுடுவதோர் கொள்ளி சுவடித்த வாறே.
இதுவுமது |
621. |
போதின்க ணின்றும்புத் தோட்டிற் பொருந்திய தாதின
நாற்றந்தண் ணீருக்குச் சொல்லுதி யோதின கந்த முடன்கெடின் வாசனை யாதின
தாகு மறிந்துரை யேழாய்.
இதுவுமது |
622. |
வாசனை வாசனை யென்று வழிவழி நீசொன்ன நீசொன்ன
நேர்வதிங் கென்செய்ய பாசன மாகிய பாதிரிப் பூவினைப் பூசின தெப்பொருள்
போத்தந்து காட்டாய்.
இதுவுமது |
623. |
பூவின்கட் கேடும்புத் தோட்டின்கட் டோன்றியு மேவிய
வாசனை யெங்குமுண் டாமெனின் சோபன மாகச் சுவாகதம் போந்ததென் றேவன்
றிருந்தடி சிந்திமற் றென்றாள்.
இதுவுமது |
624. |
அதற்கு மறக்கே டுளதெனில் வாச மதற்குமுண் டாயினி
யெல்லையின் றோடு மிதற்கெண்ணு மில்லெனி னில்லை யதற்கு முதற்சொன்ன
குற்றம் முடிந்தன வாமே.
இதுவுமது |
625. |
சென்றதென் றாலதன் கேடின்மை யாஞ்செல வின்றதென்
றாலத னாற்றமு மில்லற்க நன்றிதென் றேசொல்ல நல்லது நாமறிந் தன்றிதென்
றேம்முனே யாருரைக் கிற்பார்.
இதுவுமது |
626. |
கேடது தான்முழு தாதலி னீசொல்லும் வீடது வாகலும்
வேண்டும் விழுத்தவம் கூடு பவர்க்குங் குணமில் லவர்க்கு நீடல தேயுள
தாநிரு வாணம்.
இதுவுமது |
627. |
தோற்றம் வழியென்று சொல்லுத லாற்றடு மாற்ற
மதுவிதன் மார்க்கத்து மாண்பெனச் சாற்றுதி யேலுந் தவறத வாதலைத்
தேற்றுவன் கேணீ தெருண்டிருந் தென்றாள்.
இதுவுமது |
628. |
தன்வழித் தோற்றிக் கெடுமோ வதுகெடப் பின்வழித்
தோற்றம் பெறுமோ விரண்டனு ளென்வழித் தோற்றமஃ தாமா றிருளற நின்வழித்
தோற்றத்தை நீயுரை யென்றாள்.
இதுவுமது |
629. |
வழியொன்று தோற்றிக் கெடுமேன் மகப்பெற் றிழிகின்
றவள்போ லணைவுள தாகு மொழிகின்ற தேயது காணல தென்னிற் கழிகின்ற
கன்னிக்கோர் காதலற் காட்டாய்.
இதுவுமது |
630. |
பிறப்பித்துக் கேடும்பின் றோற்றக் கெடலும்
இறப்பவுங் கூடா திருதிறத் தானுந் துறப்பித்த வாறிது தூவெனக் கேட்டை
மறப்பித் துரைத்ததுண் டோசொல்லு வாம.
இதுவுமது |
631. |
சுலாப்பல சொல்லிச் சுழன்று விடாதே துலாத்தலைத்
தூக்கமு மோக்கமுங் காட்டி னிலாத்தலை யல்லா விரண்டு ளொன்றுண்டா
யிலாத்தலை யில்லே லமைவது மன்னோ.
இதுவுமது |
632. |
இல்லதற் கேயில்லை கேடென்னை காக்கையின் பல்லதற்
கோதார் பருமையு நுண்மையுஞ் சொல்லிதற் காவதுண் டேலெனச் சொல்லின
ணல்லதற் கல்லது நாப்பெய ராதாள்.
இதுவுமது |
633. |
துலாமில்லை யட்டக மேயது தானு மிலாமிரு பாற்றலை
யேதலை தாமு நிலாவகை யில்லுயர் வோடிழி வெங்கும் கலாமவை யாய்க்கடை
கண்டது பாழே.
இதுவுமது |
634. |
ஓல குளவி குருட்டெண் ணெய் வாணிச்சி கோலஞ்
சிதையுமென் றெண்ணெயட் டாளென்னும் பாலகர் பாட்டுரை போன்றது மற்றுநின்
நூலுரை யெல்லா நுழைந்துணர் வார்க்கே.
இதுவுமது |
635. |
கோற்றிர ளொன்றா யதன்றலைக் கேயுட னாற்றியு மோக்கமு
நாட்டினை யஃதொப்பத் தோற்முங் கேடுந் தொகுபிண்ட மொன்றிற்குச்
சாற்றுதி யாய்விடிற் றக்கதென் னேனோ.
இதுவுமது |
636. |
தலையன தாழ்ச்சியு மெழுச்சியு மன்றி நிலையிலை
கோலிடை நீக்கலு நீங்கு மிலையென வெட்டி னிடுகுறி யன்றெனிற் பலவினி
யிங்குப் படுவன கேணீ.
இதுவுமது |
637. |
கோலுந் தலையு முடனில்லை யாமெனின் மேலு முரைத்தன
மேயதன் மேற்பழி வாலுந் தலையு நடுவு மவையின்றிப் பாலும் படுவதோ ராவுள
தென்னாய்.
இதுவுமது |
638. |
புணரிய தாமவை பொய்யெனச் சொன்னேற் குணர்வதங்
குண்மையு மொட்டுவை யாயிற் குணகுணி யாயு மவயவி யாவும் பிணபிணக்
கெய்துமப் பேரிடர் செய்தாய்.
புத்தன் கூற்று |
639. |
இருபிண்ட முப்பிண்ட மெண்ணில்பல் பிண்டம் வருபிண்ட
மேற்பல மற்றவை நீங்க வொருபிண்டங் கொண்டாங் குயிர்க்குறுதி யிட்டுத்
திருவுண்ட செய்கையிற் செய்தவ னாக.
வேறு நீலகேசி வினாவும் புத்தன் விடையும் |
640. |
வினைசெய்தான் றுய்க்குமோ வேறொருவ னேயோ வனைவரு
மோவில்லை யோசொல்லா யோவென்னக் கனைகடலி னுண்மணலிற் கண்ணினையு மீந்தா
னினைவகைய கேளென் றெடுத்துரைக்க லுற்றான்.
புத்தன் கூற்று |
641. |
அவனேயு மென்னேன் பிறனேயு மென்னே னவனும் பிறனு
மவரேயு மென்னே னவனேயு மெய்தா னெனலேயு மாகா தவெனோ விதுதுய்ப்பா
னின்னணங்கே ளென்றான்.
இதுவுமது |
642. |
அதுவேயு மென்னேன் பிறிதேயு மென்னேன் அதுவும்
பிறிது மவையேயு மென்னேன் அதுபொன்ற வல்ல ததன்வழியின் மன்றொன் றிதுபோல
வென்பே னெடுத்துரையுங் கேணீ.
இதுவுமது |
643. |
இடுபீச மன்றா லிறுங்காதி யன்றால் வடுவாய
வவ்விரண்டும் வந்தனவு மன்றால் நெடிதாய தீங்கரும்பு நெல்லுமே போல
நடுவாக நோக்காய் நறுநுதலா யென்ன.
நீலகேசி கூற்று |
644. |
ஆத்தாவ தன்றேற் பிறிதா மரும்பெற னாத்தான் வருத்த
நீ நாட்டியதியாங் காணேம் போத்தாகா தேற்குதிரை பெட்டையது போலென்
சாத்தாகு மாகாமை சாதிக்க வல்லையோ.
வேறு இதுவுமது |
645. |
அவன்போற லானு மவனன்மை யானு மவன்றன் வழியா னவனாத
லானு மவன்றான் பிறனே யவனென்ற லானு மவன்றான் பிறனே யெனவழிவ துண்டோ.
வேறு
இதுவுமது |
646. |
கண்போலக் கயலெனினுங் காடன்றித் தூறெனினும்
பெண்பாலாற் பல்கியும் எல்லாம் பிறவேயாம்.
இதுவுமது |
647. |
அயலானே துய்க்கு மவன்றுவ்வா னென்பாய் முயலானு
மில்லான் முகஞ்சிறிதே யொப்பான் வயலாமை போல்வதோர் மக்குளி யிலானென்
றியலா தனவே யெடுத்துரைத்தி யென்றாள்.
இதுவுமது |
648. |
அயற்பிறனு மல்ல னவன்றானு மல்லன் புயற்றிறலைங்
கூந்த லிதன்போலப் பிறனுக்கேல் முயற்பிறவி மேயினீர் முன்செய்தா னங்கோர்
பயப்பெறுவ தில்லையேற் பாழ்பயனி தென்னோ.
இதுவுமது |
649. |
தற்பிறிதே யாகிப் பிறபிறிது தானல்லா நெற்பிறிது
போன்மெனவு நீயுரைத்தா யஃதொழிந்து சொற்பிறிது சொன்னாய் சுவர்க்கத்
தவர்க்குரைப் பிற்பிறனே யாகிப் பெறப்பிறனே யாகானோ.
இதுவுமது |
650. |
நெல்லின் வழிக்கரும்பு நீள்கரும்பி னானெல்லுஞ்
சொல்லுநீ சொல்லாயேற் சொல்லியநின் சொல்லெய்தா வல்லனாய்ச் செய்த மகன்வழியி
னான்மகன்றா னல்லனாய்ச் சொல்லின் னுலங்கரு வாமே.
புத்தன் மனங்குழம்புதல் |
651. |
செய்தானுஞ் செய்தானே துப்பானுந் துப்பானே
யிஃதாலென் மெய்ம்மை கிடந்தவா றென்றானுக் கெய்தார் பிறவோ விருசார்
வினைப்பயனுஞ் செய்தார்க டாமெனலுஞ் சிந்தித் திருந்தானால்.
நீலகேசி புத்தனை இகழ்தல் |
652. |
கண்ணுந் தலையும் பிறவுங் கருந்தடியும் பெண்ணுங்
கொடுத்துப் பிறர்க்கே யுழந்தாய்முன் னெண்ணுங்கா லின்னுநீ யெவ்வினையுஞ்
செய்தாரை யுண்ணுந் திறமொன்று மோதா தொழிந்தாயோ.
இதுவுமது |
653. |
எனைத்துணையு நீவருந்தி யெத்துணையோர் கால
நினைத்திருப்பி னல்லது நின்காட்சி தன்னால் வினைப்பயத்தின் கூட்டம்
விரித்துரைப்ப னென்னிற் றினைத்துணையு மாகாமை தேரிதுநீ யென்றாள்.
நீலகேசி புத்தனை நோக்கி நின்சமயத்தைக்
கைவிடுதி என்னல் |
654. |
முழுக்கேடு வேண்டாயேன் முன்னின்ற துண்டாம்
வழுக்குமே லவ்வுரைக்கு மாறுகோ ளிஃதா மிழுக்காமை புத்தீ ரெனைப்பலருங்
கூடிக் குழுக்களாய் வந்துநுங் கோளிறுமி னென்றாள்.
இதுவுமது |
655. |
நின்றே நிலையுமெனி னித்தியமே யாயொழியு மன்றேயஃ
தாயி லநித்தியமா மவ்விரண்டு மென்றே யுரைக்கி லிருவழிக் குற்றமுமா
மென்றே யுரைக்கின்றா யேகாந்த னாகுதியோ.
புத்தன் தன் தோல்வியை ஏற்றுக்கோடல் |
656. |
உச்சேதந் தானு மொருவகையா லவ்வகையே யச்சேத மின்மையு
மவ்விரண்டு மாய்நிகழ்ந்து பொய்ச்சேத மல்லாப் பொருண் முடிபொன் றுண்டாக
மெச்சாயே நீயெனயான் மெச்சுவனே யென்றான்.
நீலகேசி புத்தனுக்குத் தத்துவஞ்
சேவியறிவுறுத்துப் போதல் |
657. |
இறைவன்ற னூலுணரி னெவ்வுருவி னாரு முறையினா
லெய்துவர்தா முன்னிய வீடென்றான் மறையினா லாயினு மற்றொருவா றேனு
நிறையினாற் செல்லென்று நேரிழையுஞ் சென்றாள். |