6. ஆசிவக வாதச் சருக்கம்
|
659. |
நூலாசிரியர் கூற்று
கண்ணார் சிறப்பிற் கபில புரங்கடந்து விண்ணாறு
செல்வாள் வியன்மலைபோற றோற்றத்தாள் உண்ணால் வினையு மொருவி யொளிர்மேனி
யெண்ணா துணர்ந்தானை யேத்தத் தொடங்கினாள்.
நீலகேசி அருகனை வாழ்த்துதல்
(இச்செய்யுள் தொடங்கி 6 செய்யுள்கள்
ஒரு தொடர்) |
660. |
அங்கம் பயந்தா னறைந்த சுதக்கடலுள் பங்கங்கள்
சாராப் பரசமையர் சொல்லுளவோ பங்கங் கள் சாராப் பரசமையர் சொல்லேபோற்
புங்கவன்றன் சேவடியைச் சேராத பூவுளவோ.
|
661. |
பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுள் சார்த்திப்
பிறவாத் தவநெறிக டாமுளவோ சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்
றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளவோ.
|
662. |
புலவ னுரைத்த புறக்கேள்வி சாரா துலக நவின்றுரைக்கு
மோத்தெங் குளதோ வுலக நவின்றுரைக்கு மோத்தேயு மன்றிப் பலவும் பகர்வாப்
பயந்தனவே யன்றோ.
|
663. |
அலரோடு சாந்த மணிந்தெம் மிறைவர் மலரடியை யல்லதியா
மற்றறிவ தில்லை மற்றறிவ தில்லாத வெம்மை மலரடிகண் முற்றவே செய்து
முடிவிக்கு மன்றே.
|
664. |
புனையுலகிற் காதிய புங்கவ னார்த மிணையடியை
யல்லதியா மின்புறுவ தில்லை இன்புறுவ தில்லாத வெம்மை யிணையடிக
டுன்புறவி லக்கதியுட் டோற்றுவிக்கு மன்றே.
|
665. |
இரவிடைநன் மணிபோலு மெண்ணா துணர்ந்தான் திருவடியே
யல்லதென் சிந்தனையி லில்லைச் சிந்தனையொன் றில்லாத வெம்மைத் திருவடிக
ளந்திணையில் பேராற்ற லாக்குவிக்கு மன்றே.
நீலகேசி உறையூரினின்றும்
சமதண்டம் என்னும்
ஊரையடைதல்
வேறு |
666. |
தொக்குட னாயவென் றொல்வினை தீர்கென மூக்குடை யானடி
மூன்றினும் வந்தித்துக் குக்குட மாநகர் நின்று கொடிமினிற் றக்கதிற்
றான்போய்ச் சமதண்டம் புக்காள்.
நீலகேசி சமதண்டத்தில் உள்ள துறவோரைக்
கண்டு வினாதல் |
667. |
ஈண்டி யிருந்த விலிங்கியர் தங்கட்கு மாண்ட
துகிலல்குல் மாதரிது சொல்லும் காண்டற் கினிதே கடிமலர்ப் பூம்பள்ளி
யீண்டுறை வாரிவர் யாவர்கொ லென்றாள்.
துறவோர் விடை |
668. |
காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற் பேருணர்
வெய்திப் பெரிதும் பெரியவன் பூரண னென்பான் பொருவறக் கற்றவ னாரணங்
கன்னாட் கறிய வுரைக்கும்.
இதுவுமது |
669. |
புயலிருங் கூந்தற் பொலங்கொடி யன்னா யயலியர்
தாமல்ல வாசீ வகர்கள் வியலிடத் தியாரும் வியக்குந் தகையார் மயலறு
காட்சியிம் மாதவ ரென்றான்.
நீலகேசி வினாவுதல் |
670. |
ஆத்தனு நூலும் பொருளு நிகழ்ச்சியும் பாத்தன
சொல்லப் பயம்பெரி தாகலி னோத்துரை யேயிங் குரையென் றுரைத்தனள்
சாத்திரம் யாவையுந் தன்னிக ரில்லாள்.
பூரணன் கூற்று |
671. |
என்றலு மற்கலி தானே யிறையினி ஒன்பது வாங்கதிர்
நூல்யா முடையன மன்பெறு நுண்பொரு ளைந்தியல் பாயவை யென்ப நிகழ்ச்சியுங்
காழ்ப்பா டெனச்சொல.
இதுவுமது
வேறு |
672. |
அறிந்தா னிறைவ னவனா குதலாற் செறிந்தான் பெரிதுஞ்
செறியா துரைப்பி னெறிந்தா னனைய வியல்பா குதலான் மறிந்தான் றடுமாற்
றகத்தே மயங்கி.
இதுவுமது |
673. |
உரையா னிறைவ னுணலு மிலனாய்த் திரையா னரையான்
றெரிவில் லுருவம் வரையா வகைவா னிடுவில் லனையன் புரையா வறிவிற் புகழ்பூ
ரணனே.
நூலும் பொருளும் |
674. |
அடங்கல் குறிக்கோண் முதலா யினவாய்க் கிடந்த
கதிருட் கிளந்த பொருளுந் தொடங்கி யுரையாந் தொகையா குவதே யுடங்கே
யணுவைந் துருவா யுளவே.
நில முதலியவற்றின் இயல்பும் பாலும் |
675. |
நிலநீ ரெரிகாற் றுயிரி னியல்பும் பலநீ ரவற்றின்
படுபா லவைதாம் புலமா கொலியொன் றொழிய முதற்காஞ் சலமா யதுதண் மையையே
முதலாம்.
இதுவுமது |
676. |
எறித்தன் முதலா யினதீ யினவாம் செறித்த லிரையோ
டிவைகாற் றினவா மறித்தல் லறிதல் லவைதா முயிராம் குறித்த பொருளின்
குணமா லியையே.
இதுவுமது |
677. |
அணுமே யினவைந் தவைதா மனைத்துங் குணமே யிலவாங்
குழுவும் பிரியு முணன்மே யினுமுள் புகுதல் லுரையேங் கணமே யெனினும்
மொருகா லமிலை.
இதுவுமது |
678. |
இவையே பொருள்கள் இவற்றி னியல்பும் சவையே அறியச்
சிலசாற் றுவன்கேள் சுவையே யுடையம் மெனநீ யிகழல் லவையே பிறரா லழிதற்
கரிய.
நீலகேசி பூரணன் கூற்றை
வழிமொழிந்து கோடல்
வேறு |
679. |
அண்ணலு நூலும் பொருளு நிகழ்வு
மிவையெனலு மெண்ணினு மேனை யெழுத்தினு மிக்காங்
கிருந்தவர்முன் கண்ணினு மன்றிக் கருத்தினும் வேறெனக்
காட்டலுற்றுப் பண்ணலங் கொண்டசொல் லாளவை பேர்த்தும்
பகர்ந்தனளாய்.
இதுவுமது |
680. |
முற்ற வறிந்துரை யாதவன் மோனாந் திருந்தனனேற்
செற்றம் பெரிது முடையனச் சீவன்க டம்மொடெல்லா மற்ற முடையவர் சொல்லின வாகம
மன்மையினாற் பெற்ற வகையென்னை பேதா யதனைப் பெயர்த்தனெவே..
இதுவுமது |
681. |
ஒக்கலி யோகலி யென்றிரு தெய்வ முரைத்தனவேன் மற்கலி
யார்போ லறிந்தன வாயிற் செறிந்தனவாம் தக்கில வேயறி யாதன சொல்லுத
றத்துவத்தை யிக்கலி யாள ருரைத்தவு மேதமே னாய்பிறவோ.
இதுவுமது |
682. |
அறிந்தா னறிந்தன தான்சொல்லி
னார்வச்
சினத்தனனா யெறிந்தா னனையதோ ரேதத்தை
யெய்துமவ்
வேதத்தினான் மறிந்தா னகன்றடு மாற்றத்
தகத்தெனின்
மாண்புணர்ந்தாய் செறிந்தாங் கிருக்கிற்பி னீயுஞ்சிற் றாத்தனை
யாகிற்றியே.
இதுவுமது |
683. |
ஆத்த னறிந்தன யாவையுஞ் சொல்லல
னாய்விடினிச் சாத்தனும் யானு மவன்றன்னிற் சால
விசையுடைய நாத்தனை யாட்டியோர் நன்மைகண் டாலு
நினக்குரைத்து மீத்தன முண்டு மிருமைக்கு மேத
மிலம்பிறவோ.
இதுவுமது |
684. |
வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய் தானுடம்
போடு பொறியின னாதலிற் சாதகனா மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர்
வீழ்புயன்மேற் றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே.
இதுவுமது |
685. |
முற்ற வறிந்தனன் யானென்று
மோனங்கொண்
டேயிருந்தா னற்ற மகலவென் றானீ யறிந்தமை
யாதினினாம் பெற்ற வகையெனப் பேச்சின்மை யாலெனிற்
பிள்ளைகளும் மற்றிம் மரமு மலையுமம் மாண்பின
வாம்பிறவோ.
இதுவுமது |
686. |
முடக்கு மெனினு நமிர்க்கு
மெனினுந்தன்
மூக்குயிர்த்து நடக்கு மெனினு மிருக்கு
மெனினுந்த
னல்லுறுப்பி னடக்கு மியல்பல்ல னன்னவற்
றார்வத்த
னாகுமன்றி யுடக்கு மிவையில்லை யேலுயிர்
தானுண்மை
யொட்டுவனோ.
(இது நீலகேசியின் உட்கோள்)
வேறு |
687. |
நிலப்பாலு நீர்ப்பாலுந் தீப்பாலும் காற்றின்
புலப்பாலு நெட்டுயிரின் போக்கில்லாப் பாலும் சொலற்பால வல்லாத சொல்லுதலால்
யானு மலப்பா தொழியேனிவ் வாசீ வகனை யருகிருந்தார் தாமறிய வாசீ வகனை.
நீலகேசி பூரணனை நோக்கிக் கூறல் |
688. |
வண்ணாதி யெல்லாம் வகுப்பின் னிலப்பாலாம் நண்ணாத
மூன்றிற்கு நன்பால் பிறவாகிக் கண்ணாதி யாலவற்றைக் காணப்பா டில்லையா
யெண்ணாதே யிந்தியக்கோ ளெய்தாமை வேண்டும் எனைத்தும் பெறப்பாடு மில்லாத
வேண்டும்.
இதுவுமது |
689. |
நீர்ப்பாலுந் தீப்பாலு நில்லா வளிப்பாலும்
பேர்ப்பாலே பற்றிப்பிறப்பிறவா நீபெருக்கி யோர்ப்பி யாதுஞ்செய்யா துரைத்தா
யுரைத்தமையிற் கூர்ப்பியாது மின்றிநின் கோளழியு மன்றே கொணர்ந்துநீ
யைந்தென்ற கோளழியு மன்றே.
இதுவுமது |
690. |
பொருடாமி வைந்தொழியப் போத்தந் துரைப்பா யிருடாமி
வைந்தனு ளெக்கூற்ற தாமோ விருடாமி வைந்தனுளு மெக்கூற்று மில்லே
லருடாழ்ந்து நீயிருப்ப தியாதின்பா லாமோ அணுமயமாங் கந்தங்க டாமனந்த
மன்றோ.
இதுவுமது |
691. |
பலவாக நீசொன்ன பாலெல்லாந் தம்முட் கலவாவா
யப்பொருளே யாதலையுங் கண்டா லுலவாதோ வொற்றுமையும் வேற்றுமையு மென்றாற்
சலவாதி யொன்றுஞ் சமழலையே கண்டாய் சமத்திடை யொன்றுஞ் சமழலையே கண்டாய்.
இதுவுமது |
692. |
பாறாம் பலவாகிப் பாலாகு மப்பொருளே வேறாது மில்லை
யெனவே விளம்புவாய் நீறாக நின்ற நிலப்பால் பெறவேலா நாறா வகையெனக்கு
நக்குரைக்கல் வேண்டும்.
நலிந்தாற் பிறபொருட்கு நாட்டலே
வேண்டு்ம்.
இதுவுமது |
693. |
இன்றேய தாயி னிவைபா லிவைபொருள்க ளென்றே பலவா
வெடுத்துரைப்ப தென்செய்யக் குன்றோ மலையோ குவடோ வடுக்கலோ வன்றோவ
தன்றாலஃ தியாப்பாதல் வேண்டூம் அவையவையே சொன்னாலஃ தியாப்பாதல் வேண்டும்.
இதுவுமது |
694. |
நோயில்லை வாழி கடவு ளெனவுரைத்தா னாயினோ
யின்மையினேர்ந் தாய வழியொருநாட் டீயினும் வெய்யநோய் சேர்தலையுங் காண்டுநீ
சாயினும் தத்துவத்தைச் சாராதா யன்றோ தடு்மாற்றக் காழ்ப்பாடுந் தாமுளவே
யன்றோ.
இதுவும் அடுத்துவருஞ் செய்யுளும் ஒரு தொடர் |
695. |
கடுங்கதிரோன் மீதூரக் காணாக்கோ ளெல்லாம்
படும்பொழுது மெழுச்சியினுந் தம்பயனே செய்யு நெடுங்காலம் பல்பிறவி நின்றன
வெல்லா மொடுங்காதே யேய்ந்துண் டுழிதரலே வேண்டும் உதவாத வார்தலையு
மொட்டலே வேண்டும்.
|
696. |
எப்பாலுந் தான்கெடா வில்லனவுந் தோன்றாவென்
றொப்பியாது மில்ல துரைத்தளியின் றானுண்ணும் துப்பாயதூச் சோற்று தூய்தல்லா
தாழ்ந்துளதென் றிப்பாவி செய்யு மிழிதகவி தென்னோ விழுதைதான் செய்யு
மிழிதகவி தென்னோ.
இதுவுமது |
697. |
நின்றீக கொண்டீக வுண்டீக தின்றீக வென்றிவைகள் கூறி
யிடுவார்க் கறம்வேண்டான் கொன்றீகை தீதென்றுங் கொல்பாவ மில்லென்றுந்
தன்றீகை யுண்ணாதான் றான்கண்ட தென்னோ தவத்தினு மில்வாழ்க்கை தான்கண்ட
தென்னோ.
இது நீலகேசி பூரணனை
முன்னிலைப்படுத்தோதியது |
698. |
இல்லாத தோன்றா கெடாவுள் ளனவென்பாய் சொல்லாயே
நெய்சுடராய்ச் சுட்டிடுமா றென்றேனுக் கல்லாந் தயிர்த்தோடி யாழ்மிதப்புச்
சொல்லுதியா லெல்லாமொன் றொன்றிற் கிடங்கொடா வன்றே யிழிவுயர்ச்சிக்
காரணமு மில்லாதா யன்றே.
இதுவுமது |
699. |
ஓட்டுங் குதிரையு மொன்றே யெனிற்குதிரை யூட்டும்
பொழுதொடுதான் புல்லுண்ணும் போழ்தின்கா னாட்டிய வீதி யதிசயத்தை
நீயெமக்குக்
காட்டி யுரைப்பினின் காட்சியைக் கோடும் கடவுட் குழாத்தார்தம்
காழ்ப்பெலாங் கோடும்.
இதுவுமது |
700. |
வண்ண முதலா வுடைய குணமெல்லாம் எண்ணுங்கா லப்பொருளே
லீந்தி னிளங்காய்க்கட் கண்ணினாற் கண்ட பசுமை கனிக்கண்ணுந் திண்ணிதாக்
காட்டிற் றெருண்டாயே யென்றும் திரிந்தொழிந்த காட்டினாற் றேவனே யென்றும்.
இதுவுமது |
701. |
வட்ட முதலா வுடைய பொருளெல்லா மொட்டிநீ யப்பொருளே
யொன்றும்வே றில்லென்பாய் தட்ட மழித்தோடஞ் செய்தா லதன்கண்ணும் விட்ட
வடிவு விரித்துநீ காட்டாய் விகார மனைத்தும் விரித்துநீ காட்டாய்.
இதுவுமது |
702. |
மிதப்பனவு மாழ்வனவும் வேண்டுவன்யா னென்னிற்
பதப்பொரு டானான்கின் பன்மைமுடித் தாயா மிதப்பனவே யாழ்வனதாம் வேறியாது
மில்லே லுதப்பேனு நின்சொ லுதவலவே கண்டா லுடனேநின் பக்க முடைத்திட்டாய்
கண்டாய்.
இதுவுமது |
703. |
தொழிற்சொற் குணச்சொல் வடிவுச்சொன் மூன்றும்
பிழைப்பில் பதமாப் பிரிவிடத்துக் காண்டு மிழுக்கில் பொருளோ
டியைத்தக்காற் சந்தி யெழுத்தியலிற் கூட்டமு மெப்பொழுதுங் காண்டு
மிலக்கண நின்சொ லியையலவே கண்டாய்.
பொருள்களின் நால்வகை ஆக்கமுறைகள்
வேறு |
704. |
அதுவா வதுவு மிதுவாம் வகையு மதுவாந் துணையு
மதுவாம் பொழுதுஞ் சதுவா நியதத் தனவா வுரைத்தல் செதுவா குதலுஞ் சிலசொல்
லுவன்யான்.
நீலகேசி அந்நான்கு முறைகட்கும் நிரலே
ஒவ்வொன்று எடுத்துக் காட்டல் |
705. |
அரிவை யவளாங் குழவி யவளை யுரியா வகையா லுவந்தாங்
கெடுத்த லரிய முழமூன் றளவாம் பொழுதும் வரிசை யுரைத்த வருட மதன்பின்.
இது மறுப்பு |
706. |
குழுவித் திறமுந் துறவா ளவளும் முழுவித் ததுவும்
முளையா துளதா மிழவெத் துணையு மியல்பேன் முடியா தழிவித் திடுவே னயநீ
விரையல்.
இதுவுமது |
707. |
முலையும் மகவும் முறுவல் லவையும் தலையுண் மயிரும்
முகிரும் முடனே நிலையில் லமையு மிலவா மெனினே யலையுந் நினகோ ளுடனே
யெனலும்.
இதுவுமது |
708. |
உளவே யெனின்முன் னுரைத்தந் நியதங் களவே யெனலாங்
கடையா மெனநீ கிளவா தொழியாய் கிளந்த குழவிக் களவே முழமா வவைதாம்
பலவால்.
இதுவுமது |
709. |
உடையள் ளிவடன் னுதரத் தொருபெண் ணடையு மவளுக்
கவளவ் வகையாற் கடையில் குழவி யவைதன் னியல்பா நடையு மதுவே னகையாம்
பிறவோ.
ஆமாங்காம் முதலியவற்றிற்கு மறுப்பு |
710. |
இனியாம் வகையு மிசைத்தி யெனினுந் நனிகா ரணமாய்
நடுக்கு நினகோட் டனிகா ரியமும் முளதேற் றவறா முனிலா மொருவன் பொழுதும்
முடிவாம்.
இதுவுமது |
711. |
நியதந் நிகழ்ச்சிந் நியதா வுரைப்ப தயதி யெனினீ
யமையுஞ் சலமேல் வியதி யெனினும் வெகுளல் இழுதை பயதி யெனினு நினக்கோர்
பயனே.
உயிரியல்பும் மறுப்பும்
வேறு |
712. |
பாலைப் பழத்தி னிறத்தன வாய்ப்பல மாட்டொடுகண்
ணாலெத் துணையு மகன்றைந்து நூறாம் புகையுயர்ந்து ஞாலத் தியன்றன நல்லுயி
ரென்பது நாட்டுகின்றாய் மாலித் துணையுள வோநீ பெரிதும் மயங்கினையோ.
இதுவுமது |
713. |
ஒன்றினு ளொன்று புகலில வென்ற
வுயிர்களெல்லா நின்றன தந்த மகலமு நீளமும்
பெற்றனவாய் நன்றுநீ சொல்லுதி நாந்தொக் கிருந்துழி
நல்லுயிர்க டுன்றின வென்பது சொல்லா தினியென்ன
சொல்லுதியோ.
இதுவுமது |
714. |
தானுள தாய வழியதன் றன்பா லியல்பெனலா மூனுள தாய
வுயிர்ப்பிர தேச முணர்வதுபோல் வானுளம் போயுழி மன்னு மறிவிலை யேலதனை
நானுள தென்றுரை யேனதற் கியாரினி நாட்டுகிற்பார்.
இதுவுமது |
715. |
ஒன்றென நின்ற உயிர்தா னுருவின
தாதலினாற் பொன்றுந் துணையும்பல் போழெய்தும் பூசணிக்
காயினைப்போ லின்றெனி னாகம மாறது வாமினி
யவ்விரண்டு மின்றெனிற் சால வெளிதாம் பிறவத
னின்மையுமே.
இதுவுமது |
716. |
எண்டனை யாக்கி யிடவகை யுட்பொரு ளீறுசொல்லி மண்டல
மாக்கி மறுத்துங் கொணரு மனத்தினையேற் கண்டிலை நீமெய்ம்மை காழ்ப்பட்டு
நின்ற கனவுயிர்க்கெண் ணுண்டெனி னில்லை யகன்றடு மாற்ற முலப்பின்மைபோல்.
நிலப்பால் முதலியனவும், மறுப்பும்
வேறு |
717. |
மேற்சீர தீயோ டுயிர்காற்று விலங்கு சீராம்
பாற்சீர நீரு நிலந்தானும் பணிந்த சீரா மேற்சீர மேற்போம் விலங்கோடு
விலங்கு சீர்கீ ழாற்சீர வீழும் மவையென்னினு மாவ தென்னோ.
இதுவுமது |
718. |
தீயு முயிருந் தமக்காய திசையி னாலே போயு மொழியா
திவணிற்றல் பொருத்த மன்றால் வீயும் வகையும் வினையாக்கும் திறமு மெல்லாம்
நீயு மவற்றை நினைவாயுள வாக வன்றோ.
இதுவுமது |
719. |
தென்றை யுளையத் திசைதானுறப் போய காற்றேற் பின்றை
யொருநாட் பெயராததோர் பெற்றி யஃதான் முன்றை தழுவி முனிவாக்கும் வடந்தை
யஃதா வின்றைப் பகலே யிதன்மெய்ம்மை யிசைக்கிற்றியோ.
இதுவுமது |
720. |
முன்சென்று வீழுந் நிலநீரை முகிலு ணின்று
பின்சென்று பெய்யுந் துளிதானும் பெருந்த வத்தா யென்சென்ற தெய்துந்
திறந்தன் னையெனக் குணர நின்சென்ற வாற்றா லுரைத்தானெறி யாற்ற நன்றே.
காலம் இல்லை என்பதன் மறுப்பு |
721. |
பாலெங்கு மோதப் படுகின்ற பதப்பொ ருட்குக் காலங்கள்
சொல்லா யதுதானுன் கணக்கு மென்றாற் சீலங்கள் காத்துக் குணனின்மையைச்
செப்பு கின்றாய் மாலிங் குடையை யதுதீர்க்கு மருந்து முண்டோ.
நீலகேசி பூரணனுக்கு அறங்கூறுதல் |
722. |
நோயுற்ற நுன்போற் குணமொன்றில னாய யானும் பேய்மற்
றிவடா னெனக்கண்டோர் பெரிய வன்றா னீமற்றி துண்ணென் றறநல்க விளங்கப்
பெற்றேன் வாமத்து ணீயும் மதுபோலு மருந்தில் லையே.
இதுவுமது |
723. |
நோயைத் துணிந்தே யுறுநோய்முத னாடியந்நோய்க் காய
மருந்தே யறிந்தூட்டுமஃ துண்டு காட்டிற் பாய மறுக்கும் படியாமது பல்லு
யிர்க்கும் கூயத்தி னென்னை குரவருப தேச மென்றாள்.
இதுவுமது |
724. |
சாதி முதலாப் பிணிதாமிவை யப்பி ணியிற் காதி
யறியில் லவைதீவினை யூண தனாற் றீதின் றிதனில் லழுந்தல்திரி தோடத் தினால்
வேத னையது தீர்ப்பது மெய்யுணர் வாமே.
நீலகேசியின் அறவுரைகேட்டுப் பூரணன்
கூறுதல் |
725. |
மானின்ற நோக்கின் மறவேனெடுங் கண்ணி னல்லாய்
மேனின்ற வெல்லா மிகநல்லவிம் மெய்யுணர்ச்சி தானின்ற தன்மை தவிராதுரைக்
கிற்றி யேனின் னூனின்ற வாறே பொருணோக்குவன் யானு மென்றான்.
நீலகேசி அவனுக்கு மெய்யுணர்த்துதல் |
726. |
நின்ற விரலுந் நிலையாழ்ந்து முடங்க லாயிற் சென்றவ்
விரலும் மெனத்தானின் கூற்ற தாயிற் றொன்றவ் விரலே யுறலுண்மையு மின்மை
யும்மா மென்றவ் விரலே யிதுவென்றனள் வேற்க ணல்லாள்.
பூரணன் பாராட்டுரை |
727. |
ஆழ்ச்சி யொருபா லதுவல்லன தம்மோ டாழா தேழ்ச்சி
யொருபா லதுதன்னொடு மின்ன தென்னச் சூழ்ச்சி யமைந்த துணைத்தோளியர் சொற்க
ளென்று தாழ்ச்சி மனத்தா லிதுதத்துவ மென்ற னன்னா.
நீலகேசி பூரணனுக்குக் கூறுதல் |
728. |
பொய்ந்நின்ற வெல்லாம் புரைத்தாயினிப் பூர ணன்னே
மெய்ந்நின்ற பெற்றி யறிந்தாயிதன் மேலு நன்றாக் கைந்நின்று முண்டுங்
கடைப்பள்ளி வழியு மாக்கிச் செய்ந்நின்று நீசெய் தவந்தானெனச் செப்பி னளே.
இதுவுமது |
729. |
கல்லா தறிந்த கடவுள்ளிறை யாகு மெய்ந்நூல் சொல்லானு
மல்ல னவன்சொல்லின தாகு மும்மூன் றெல்லாப் பொருளுந் தம்பான்மை யியல்பு
மேன்று பொல்லாத போக்கி யினிப்பூரண சென்மி னென்றாள். |