8.
வைசேடிக வாதச் சருக்கம்
|
783.
|
நீலகேசி உலோகசித்து என்னும்
வைசேடிகத் துறவியின் பள்ளி
எய்துதல்
ஆட்டினா ளவனையு மாக்கிச் செல்பவள் வீட்டினார்
நெறியென விரித்த மேலையோர் காட்டினார் பலருளங் கணாத னேயெனு மீட்டினா னுலோகன
திடத்தை யெய்தினாள்.
உலோகசித்து நீலகேசியைக் கண்டு
தத்துவங் கூறல் |
784. |
வனப்புடை மாதரைக் கண்டு மாதவன் சினப்புடைக் கருத்தின
ளென்னச் சிந்தித்தே நினக்கினி நெறிவயி னின்ற மெய்ம்மையை மனக்கொளக்
கிளக்குவேன் மன்னுங் கேளென.
உலோகசித்து தத்துவங் கூறல் |
785. |
நெறியெனப் படுவது நின்ற மெய்ம்மையங் கறிதலுக் கரியன
வாறு சொற்பொருள் செறியயான் சொலிற் றிரப்பியங் குணந்தொழில் பொறியினாய்
பொதுசிறப் புடன் புணர்ப்பதே.
அப் பொருள்களின்
இயல்பு |
786. |
பூதமைந் தொடுதிசை மனம்பொ ழுதுயி ரோதினப் பொருள்கடா
மொன்ப தாமவை நீதியிற் குணமவற் றியல்பு செய்கையும் போதரும் பொருட்புடை
பெயர்ச்சி யாகுமே.
இதுவுமது |
787. |
பெரியதும் பின்னது மாய தப்பொது உரிதினிற்
பொருள்களைச் செலுத்து மொற்றுமை தெரிவுற வருவது சிறப்ப தாங்குணக் கிரியைக
ளிதற்கெனக் கிளத்தல் கூட்டமே.
இதுவுமது |
788. |
ஆறின் முதன்மூன் றத்தி மற்றவற் றீறின் மும்மையு
மின்மையை யெய்தின கூறின பொருள்களுங் குணனுஞ் செய்கையும் வேறென விரித்தனன்
விசேட வாதியே.
உலோகசித்து நீலகேசியை வினாதலும்
அவள் விடையும் |
789. |
தத்துவ மிவையெனத் தலையுந் தூக்கினாட் கொத்ததன்
றோவென வுரைநல் லாயினி யித்தவ மிப்பொரு டேறி யான்செயிற் பொய்த்தவ
மாதலிற் போவ னென்னவே.
உலோகசித்து இத்தத்துவங்கட்குப்
பொருந்தாமை காட்டென நீலகேசி அவற்றிற்குக் குற்றங் கூறத்
தொடங்குதல் |
790. |
மெய்ந்நெறி யிதுவென விரிப்பக் கேட்டிருந் திந்நெறி
யமைதியின் றென்னுஞ் சொல்லினாய் பொய்ந்நெறி யாதலைத் தேற்றிப்
போகெனக் கைந்நிறுத் தாளது காட்டக்
கேளென.
நீலகேசி அவன்
தத்துவங்களுக்குக் குற்றங்கூறல் |
791. |
நிலமுதற் பூதமாய் நின்ற நான்மையுங் குலமுதன்
மூர்த்தியாய்க் கூறி னொன்றவை யலமுதற் பொருள்களாய்ப் பன்னி னாயவை வலமுறை
யிடமுறை வருதல் காட்டுகோ.
நான்கு பூதமும்
திரிந்தொன்றாதல் |
792. |
உரியதோர் நீரணைந் துப்ப தாகுநெய் யெரியெழு
முளர்ச்சியா லிரைக்குங் காற்றதாம் பெரியதோ ருருமுநீர்ப் பிண்டம்
வந்துநீர் வரிசையிற் படலமாய் வந்த வல்லவோ.
வெளியினியல்பு |
793. |
ஒலியதன் குணமென வுரைத்தி யாதலால் வலியுடை நிலையில
மற்றெப் பூதமும் ஒலியொடு முதறம்முட் புல்ல லின்மையாற் கலிசெய லொழிகநின் காய
மென்றனள்.
திசை |
794. |
சுட்டின திசைத்திறஞ் சொல்லிற் சூரியன் பட்டது
மெழுந்ததும் பற்றி நான்குமாய் யெட்டெனப் பலவென வின்ன தன்மையாற் கட்டினர்
வழங்கினுங் காய மெய்துமே.
இதுவுமது |
795. |
மண்டிலம் பலரையு நிறுவி மத்திமங் கொண்டுநின்
றான்றிசை கூறு மின்னென வெண்டிசை யவன்வயிற் பிறக்கு மென்பவேற் கண்டில
நின்பொருள் காட்ட வல்லையோ.
இதுவுமது |
796. |
அத்திசை யவனுமா யல்ல னும்மென வெத்திசை யவர்களு
மிசைப்பி னேகநீ பத்திசெய் தினியென்னைப் பரமன் பாதமே சித்தியு முடிவெனச்
சேர்ந்து வாழ்தியே.
மனமும் காலமும் |
797. |
மன்னுமம் மனமெனப் படுவ தாவதே யின்னுயி ருருவினோ
டியைந்த வொற்றுமை யின்னுமக் காலமு மிருமைத் தாகலி னின்னுடைப் பொழுதவ ணிற்ற
லில்லையே.
குண குணிகள் |
798. |
குணங்களுந் தொழில்களுங் கூறி வேறெனிற் பிணந்தனைச்
சீவனாய்ப் பெற்ற தென்னையோ வுணர்ந்தில னுரையுமொன் றிலனெனி
னுறுதிநாம் புணர்ந்தில மவன்வயிற் போந்த தில்லையே.
இதுவுமது |
799. |
எப்பொரு ளெக்குணத் தானு மில்லையே லப்பொரு ளக்குணத்
தயல தாதலாற் செப்பிலக் குளிரினாற் றீய துண்மைபோற் றுப்பெனப் பொருள்களுந்
தோற்ற மில்லையே.
இதுவுமது |
800. |
குணத்தொடு குணிகளைக் கூறி வேறெனப் புணர்ப்பதோர்
பொருளினை வேண்டிற் பொய்யெனிற் குணத்தொடு குணிகளுங் கூட்ட
மின்மையா லுணர்த்துதற் கரிதவை யிளவு மல்லவே.
இதுவுமது |
801. |
ஒன்பதுந் தத்தம துண்மை யாற்பல வென்பது மெனைத்தனெ
வெண்ணப் பட்டதும் வன்பிதன் குணமிது வென்னப் பெற்றது மன்பதற் குடைமையி னறியப்
பட்டதே.
இதுவுமது |
802. |
அதனது குணமதற் கயல தாதலா லிதனது குணமென விழுக்கிற்
றென்னையோ உதனமு முணர்விலை யொன்ற தென்றக்கால் விதனமும் படாயது மெய்யு
மாகுமே.
இதுவுமது |
803. |
கெடக்கெடும் பொருளெனிற் கேடு முண்டெனப் படப்பெறு
மதற்குநீ பரிவ தென்னையோ வடக்குந்தன் றோற்றமு மொட்டி மும்மையு மடக்கிலு
மதுபெரி தழகி தாகுமே.
இதுவுமது |
804. |
குணங்கடாங் குணியெனுங் கூற்று முண்மையிற் பிணங்கலாய்ப்
பொருள்வயிற் பேறு முள்ளதே யிணங்கலா யிருமைய தின்மை யுண்மையும் வணங்கலாம்
வகையதோர் மாட்சி மிக்கதே.
இதுவுமது |
805. |
பண்பினாற் பொருள்களுக் காய பல்பயஞ் செண்பினா
னறிவினான் செறிவி னானென மண்பொனாற் குணநிலைக் காய மாட்சியா நண்பினா
னல்லது நடத்த லில்லையே.
இதுவுமது |
806. |
விலைபெறு நன்மையால் வெறுப்ப தீமையால் கொலைபெறுங்
களவினாற் குணத்தி னக்குண நிலைபெறும் பொருளினா னின்ற வொற்றுமை யலைபெறும்
வேறெனி னாவ தில்லையே.
இதுவுமது |
807. |
நல்வினைப் படுதலுந் தீவினைப் படுதலும் பல்வினைப்
பாகினாற் பயங்க ளெய்தலு மில்வினைக் குணங்கடா மென்றும் வேறெனிற் சொல்லில
சுழற்சியும் வீடுந் தோற்றமே.
இதுவுமது |
808. |
ஆட்டுடை யாடன வாட றாங்களு மோட்டுடைக் குதிரையு மோட்டு
மொன்றின்ன கூட்டிய வப்பொருட் கொடைய வாதலான் மீட்டவை யொன்றென வேண்டல்
வேண்டுமே.
இதுவுமது |
809. |
கூத்த ராடலுங் குதிரை யோடலு மோத்துரை யுள்பட வொழிந்த
யாவையு நீத்தன வேயல்ல நிலையு முண்மையிற் போத்தரல் வேண்டினப் பொழுதி
னாகுமே.
இதுவுமது |
810. |
பிணங்கல வாய்த்தம்முட் பிறக ளாகிய குணங்களுந்
தொழில்களுங் குழுமிக் கெட்டன புணர்ந்துடன் பொருள்வயிற் போந்த
வாறுநீ யுணர்ந்திலை யதுவுநின் னுடைய தேபிற.
`பொது` என்னும் தத்துவம்
(சாமான்யதத்துவம்) |
811. |
பொதுவெலாப் பொருளொடும் பொருந்தி நின்றதே லதுவெலாப்
பொருள்களை யாக்கு மொற்றுமை யிதுவலா லவைதம்மு ளியைத லில்லையேல் செதுவலாம்
பிறவது சென்ற தென்றலே.
இதுவுமது |
812. |
அன்றியும் பொதுவது வந்தமில் பொருட் சென்றதே
யென்றலாற் சிதர்ந்து பன்மையாய்க் குன்றியுங் கூடியு நின்றுங்
கொள்பய மின்றியும் போதலா லென்னை யாயதோ.
இதுவுமது |
813. |
பொதுவெனப் படுவதோர் போலி யாதலாற் பொதுவெனப் படுவன
போன்ற தாங்களே யதுவென மீட்டிருந் தாறென் றெண்ணுவா யிதுவென வென்னையிங்
கிதனோ டேழெனாய்.
சிறப்பு |
814. |
சிறப்பெனப் படுவது தெரியி னப்பொரு ளறப்பெற நின்றவக்
குணம தாதலின் இறப்பவு மிதுதன தின்மை யேயினாய் புறப்படுத் திடுவனுன் பொருளு
ளெண்ணலே.
இதுவுமது |
815. |
கூட்டினா லல்லது கூட்ட மில்லையேற் கூட்டுவான் செல்வதுங்
கூட்ட மில்லையே பாட்டினாற் பலவுமாம் பயமி லாதன மூட்டினா லுரைத்தியோ முனிவு
போக்கிதோ.
இதுவுமது |
816. |
கொக்கொடக் கருமையைக் கூட்டு வித்தலுஞ் சுக்கொடத்
துவர்ப்பினைத் துன்னு வித்தலுஞ் சிக்கென வேற்றுமை தீர்ப்பி நீயென நக்கன
ளளியனோ நயவ னென்னவே.
இதுவுமது |
817. |
என்றுமப் பொருள்களு மியல்புந் தங்கேளா டொன்றென
வருதலா லொன்று மாகுமே யென்றலி லிருமையுந் தெரியி னின்மையா லின்றினிக் கூட்டுவ
தில்லை யில்லதே.
இதுவுமது |
818. |
ஒன்றுநற் பொருள்கடாங் குணங்க டாம்பல வென்றுநீ யேகம்
வேறென்ப தென்னெனப் பொன்றுமக் குணமெனிற் பொருட்கு மாமென நன்றினிக் குணமுண்மை
நாட்ட மாமென.
|
819. |
குணிக்கணா னோக்கினாற் குணங்க ளில்குணத் தணிக்கணா
னோக்கினா லதுவு மன்னதே பிணிக்கலாம் பிரிக்கலாம் பெற்ற
நான்மையிற் றணிக்கலாந் துருநெறி துன்னு நன்மையே.
இதுவுமது |
820. |
இல்லையக் குணங்குணிக் குண்மை தானெனச் சொல்லினக்
குணிகுணத் தொன்று மாதலா லல்லதக் குணங்களு மவைக ளாமென நல்லதித் துணிவென
நயத்தி லெய்தினான்.
நீலகேசி உலோகசித்தற்குச்
செவியறிவுறுத்துதல் |
821. |
பொருளொடக் குணந்தொழிற் குண்மை யொன்றெனத் தெருள்வது
மும்மையிற் றெரிய வைப்பது மருளுடை யறநெறி யண்ணல் சேவடி யிருள்கெட நினைத்தலு
மினையை யாகென.
|
822. |
ஓம்படுத் துலோகனை யொழியச் சொல்லியான் காம்புடைக்
கடநெறி கடப்ப னென்னவே பேம்படுப் பவரொடும் பிரிவின் னாமையைத் தேம்படு
கிளவிநீ சிந்தி யென்னவே.
இதுவுமது |
823. |
ஒக்குமவ் வுரையென வுள்ள தேயென நக்கன ளாகிய நாதன்
சேதியஞ் சிக்கென வேத்துதல் சிறந்த தென்னவே தக்கதென் றவன் சொலத் தானு
நீங்கினாள். |