9. வேத வாதச்
சருக்கம்
|
824. |
நீலகேசி
பூதிகனை வினவுதலும் அவன்
விடையும் அணிநா டிவைதா மறல்யா றிவைதாம் பிணிநா டிவைதாம்
பெருங்கா டிவைதாம் மணிமா மலைதா மெனவே வருவாள் அணியார் சுகதன் நகரெய்
தினளே.
(இனி ஐந்து
செய்யுள் கலிபுர வருணனை) |
825. |
அறையும் கடலும் அரவக்
குரலும் பறையின் னொலியும் படுகண் டிகையுஞ் சிறையின் மிகுமா லிதுசெம்
படர்கள் இறைவன் னுறையு மிடமா மெனலும்.
|
826. |
மழைசேர் நகரம் மலைபோன்
றனவே கழைசேர் கொடியுங் கதலிவ் வனமே விழைதா ரவரும் விரிகோ
தையரும் முழைவாழ் புலியே மயிலே மொழியின்.
|
827. |
நெடுவெண் டிரைமே னிமிருந்
திமிலுங் கடுவெஞ் செலவின் னுலவுங் கலனும் படுவண் டறையும் பொழிலும்
மெழிலார் மடுவுந் திடரும் மணல்வார் புறவும்.
|
828. |
கயன்மீ னிரியக் கழுநீர்
விரியும் வயன்மாண் புடைய வளமைத் தனெவும் முயன்மீ னெறியு முறியுங்
கறியா தயன்மே யுறையா தணியிற் றெனவும்.
|
829. |
கழுகின் னினமும் கழுதின்
னினமும் முழுதும் மறுவை பலமூ டினரும் கொழுதின் னிணனும் பிணனுங் குலவி இழுதென்
னெலும்பா ரிடுகா டெனவும்.
வேறு நீலகேசி
கூற்று |
830. |
சாதியே மிக்க தடுமாற்ற
வெந்துயர மோதியே வைத்தாரவ் வோத்தலொ மீக்கிடந்த வீதியே காணலா மென்றாளா
னின்றாரும் போதியா ரீண்டைப் புலால்பழியா ரென்றலும்.
நீலகேசி
அம்மக்களை நோக்கிக் கூறியது |
831. |
அங்காடிப்
பண்டவூன் றின்ன வறமுரைத்தார்க் கிங்காடி
வாழ்வனவு மூனாய்வந் தீண்டியவாற் கொங்காடத்
தேனறையுங் கொய்ம்மருதம் பூவணிந்த பொங்காடை
போர்த்தார்க்குப் பொல்லாதே
யென்னீரோ.
|
832. |
விலைபடைத்தா ரூன்வேண்ட
வவ்விலைதான் வேண்டி வலைபடைத்தார்க் கெம்முயிரை வைக்கின்றா
மின்ன கொலைபடைத்தா னோகொடிய னென்பனவே போலத் தலையெடுத்து வாய்திறப்ப
தாமிவையோ காணீர்.
இதுவுமது |
833. |
தன்றார மீந்தான் றனக்குறுதி
யாவதனை யொன்றானும் வேண்டான் பிறர்க்கே யுழந்தானூன் தின்றானுந் தீவினையைச்
சேருமெனச் சொன்னாற் பொன்றாவாய்ப் பல்விலங்கும் பூமிமேல்
வாழாவோ.
இதுவுமது |
834. |
உரிதா வுணர்ந்தானொன் றோரா
துரையான் பரிவே யிதுவுந்தன் பாலரோ டெல்லா மெரிதோய் நரகம்பா ழேற்றுவா
னேயாம் பெரிதா மளியன் பெருந்தகைய னேகாண்.
இதுவுமது |
835. |
கொடைககொட்டி விற்பானுங்
கொள்வானு மன்றி யிடைச்செட்டி னாற்பொருளை யெய்துவான் போல முடைக்கொட்டி
முத்துரைத்து மூடிக்கொண் டேகுங் குடைச்சிட்ட னாருயிர்க்கோர் கூற்றமே
கண்டீர்.
இதுவுமது |
836. |
ஆடுவார் காண்பா ரவரருகே
தான்சென்று தோடுவார்ந் தாலொப்பச் சொல்விரிப்பான் போற்பாவம் கூடுவார்
கூடாதார் கொன்றார்தின் றாரென்னும் சேடனார்க் காண்டுநா மென்றுதான்
சென்றாளே..
வேறு |
837. |
அணிசெய் கோழரை யரைநிழ லழகனைப்
பொருந்தி மணிக டாம்பல கதிர்விடு மலருடை மணைமேற் றுணிவு தோற்றினை
யெனச்சிலர் துதியொடு தொழுது பணிய யாதுமோர் பரிவிலன் படம்புதைத்
திருந்தான
|
838. |
ஆத்த னேயெனத் தெளிந்தவ
ணமர்ந்திருந் தவர்க்குச் சூத்தி ரம்மிது வினையமு மிதுவிது பிறிதாஞ் சாத்தி
ரம்மிவை மூன்றென வன்றவத் தோன்றல் பாத்து ரைக்குந்தன் பதப்பொருள் பலவகைப்
படவே.
|
839. |
கந்த மைந்திவை கணிகத்த வாமெனக்
கரைந்து முந்தி நாடினோ ருணரவல்ல தில்லையென் றுரைத்தும் புந்தி யாலங்கோர்
புற்கல னுளனெனப் புணர்த்து மந்தி லாற்சொலாப் பாட்டினோ டியாதுமில்
லெனவும்.
|
840. |
நண்பரை நுதலியும்
பகைவரை நுதலியு மமிர்தொடுநஞ் சுண்பவர்க் கல்லதற்
கவர்களுக் காமென வுரைக்குநர்யார் பண்பிலி தேவரை
நுதலிய கொலையினிற் பல்வினைதா னுண்பல வகையினி
னடைந்தவை விளையுங்க ணுமக்குமென்றாள்.
இதுவுமது |
841. |
கொன்றவர்க் கல்லது
நதலப்பட் டார்களைக் கூடலவேற் றின்றவர்க் கியாவையுந்
தீவினை சேரல தேவர்க்குப்போ லென்றுரைப் பாய்க்கெய்து
மேழைமை யுண்குவ வேலிமையார்க் கொன்றுவி யேனல
னோவினை யூன்றின்பவர்க்
கொப்பவென்றாள்.
கொல்லாமை மேற்
கொண்டும் வேள்வி செய்தல் கூடும்
எனல் |
842. |
ஈகளு நாய்களுங்
கொன்றவ ரீவகண் டின்புறலிற் றீயவை யேசெய்யுந்
தேவரத் தீவினை தீர்க்கிற்பவோ நோய்களும் பேய்களு
மொழிக்குவ மெனினவை நுங்களுக்கு மாய்விடி னுணரினஃ
தாம்வினை யகற்றுதற் கரியதென்றாள்.
இதுவுமது |
843. |
நம்முறு துன்பங்க
ணாமொழிக் கல்லலம் பிறருறுப வெம்முறை யாயினும்
போக்குதற் கரியவிங் கிவர்களைப்போற் றம்முறு துன்பமும்
தாமொழிக் கில்லலர் பிறர்களையே லெம்முறை நோய்களுஞ்
செய்குப வவரென விகழ்ந்தனளே.
ஊன் உவக்கும்
தேவர்
பெருமையுடையோராகார் எனல் |
844. |
நாங்கொன்று கொடுக்குமவ்
விலங்கினை நலிவதோர் பசியினரேற் றாங்கொன்று தின்குவ
ராய்விடி னவர்களைத் தவிர்க்குநர்யார் தீங்கொன்று
முரையன்மின் தேவர்தம் மூணினைச் சேணின்றுதாம் வாங்குத
லல்லது முடையொடு சோறுண்ணும்
வயிற்றினரே.
பூதிகன் மாணாக்கர்
அவனை வினவுதலும் அவன்
விடையும் |
845. |
பொய்த்துரை யாநன்மை
போதுவ தேலில்லை பூதிகனே சத்திய மேயுரை
நீயெனத் தானுமஃ தேயுரைத்தா னெத்திசை யார்களு
மேத்துதற் கேற்றன னிவனுமென்றார் தத்துவ ரேநின்று தத்துவ
ரெனப்படுந் தன்மையினார்.
நீலகேசி
அந்நகரினின்றும் செல்லுதல் |
846. |
நன்பொரு ளாவன
விவையென வவனோடு நகரத்துள்ளா ரின்புறும் வகையினி
னெடுத்தன ளுரைத்தபின் விடுக்கலுற்றாட் கன்புபட் டவர்களு
மறநெறி யறிவித்த வார்வத்தினாற் பின்புசென்
றொழிதுமென் றதுசெய்து வலங்கொண்டு
பெயர்ந்தனரே. |